Sunday, 29 October 2017

தங்கம் அவர்களின் பதிவு

விவரம் தெரிந்த வயதிலிருந்து என்னோடு சில கேள்விகளும் கூடவே வளர்ந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் பதிலற்ற கேள்விகளுடன்தான் என் படுக்கைக்குச் செல்கிறேன். நான் உறங்கும் போது கூட கேள்விகள் விழித்திருக்கின்றன. இந்தக் கேள்விகள் எனக்கு மட்டமே சொந்தமானவை அல்ல. தலைமுறை தலைமுறையாக இவை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இனியும் இந்த கேள்விகள் தொடர்ந்து செல்லும் என்றே தோன்றுகிறது. வாழ்க்கை ஏற்படுத்தும் காயங்களிலிருந்து உருவாகும் எளிய வினாக்களையே நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

என்னை ஏன் யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க?

எதுக்கெடுத்தாலும் ஏன் பொய் சொல்ல வேண்டியிருக்கு?

இந்தக் காலத்துல யாரை நம்ப முடியுது சொல்லுங்க?

என்னைப்பத்தி என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க?

என்னை ஏன் எவனுமே மதிக்க மாட்டேங்கிறான்?
   என் இவை போன்று, வாழ்வு எழுப்பும் எண்ணிக்கையற்ற வினாக்கள் மனதில் ஆழமான வலியை உருவாக்குகின்றன.

உலகில் இதுவரை கோடன கோடி கேள்விகளும் பதில்களும் தோன்றி மறைந்திருக்கின்றன. மனித சந்தேகங்கள், வலிகள், துக்கங்கள், பிரமிப்பு, மறதி, முட்டாள்தனம், புரியாமை இவைதான் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாக இருக்கின்றன.

     -எஸ்.ரா
(கேள்விக்குறி என்ற நூலில் இருந்து)

No comments:

Post a Comment