*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*
_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_
*நூல் அறிமுகம்:* 3⃣0⃣
*நூலின் பெயர்:* சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
*நூல் ஆசிரியர் :* ஈரோடு தமிழன்பன்
*இந்த நூல் உலக கவிஞர்களை கவிதை நடையில் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் நூல்...*
*ஆம் ஈரோட்டு தமிழன்பன் தன் கவிநடையில் 13 கவிஞர்களை அறிமுகம் செய்து கொண்டே அவர்களின் கவிதை வரிகளையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்..*
*இந்த உலக கவிஞர்கள், கண் சிவப்பதற்கான கவிதைகளையும், இதழ்கள் சிரிப்பதற்கான கவிதைகளையும் அளித்தவர்கள்..*
*புல்லின் இதழ்கள் என்னும் ஒற்றைநூலில் உலகை வசப்படுத்திய வால்ட் விட்மன்..*
*சோவியத் புரட்சிக்கு கவிதை வெடிகள் தயாரித்து கொடுத்த விளாடிமீர் மயாகோவ்ஸ்கி..*
*பிரெஞ்சு புரட்சி பெற்றடுத்த குழந்தை என சிலாகிக்கப்படும் ஷெல்லி...*
*ஏகாபத்தத்தியத்தை தன் துப்பாக்கி மற்றும் கவிதைகளால் விரட்டிய ஹோசிமின்..*
*மானுடத்தை உரக்க கூவிய ஞானக்குயில் கலீல் கிப்ரான்...*
*சீன பரட்சியை தன் கவிதை மூலம் விரைவுபடுத்திய மாசேதுங்...*
*இக்பால்...*
*பாப்லோ நெருடா...*
*நசீம் ஹிக்மத்..*
*லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்...*
*அய்க்கியூங்...*
*ரசூல் கம்ஸதோவ்...*
*செங்கோர்...*
*என உலகை தங்கள் கவிதை நெம்புகோலால் புரட்டி போட்ட 13 உலக கவிஞர்களை பற்றிய அறிமுகம் ...*
*இந்த அறிமுக பயணத்தில் பல அற்புத ஆளுமைகளை சந்திக்கலாம்.*
*அவர்களின் கண்ணொளியில் உங்கள் பாதை புதிய திசையில் சமைக்கப்படலாம்..*
*வாசியுங்கள்..*
*தமிழகத்தின் மிகச்சிறந்த ஒரு கவிஞர் மூலம் நடத்தப்படும் இந்த உலக கவிஞர்களின் மற்றும் அவர்களின் கவிதைகள் அறிமுக வேள்வியில் சொக்கி போவீர்கள்..*
*பக்கம்:*132
*விலை:* 50
*வெளியீடு:* நர்மதை வெளியீடு
_வாசிப்பை சுவாசமாக்குவோம்_
நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல் 🦋
No comments:
Post a Comment