Friday, 29 May 2020

படித்தது

 சுப.வீ யின் கருத்தை கேட்கும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது



ஒரு கூடைக்கொழுந்து எனும்
ராமையா எழுதிய தேயிலை தோட்ட கதையில் தேயிலை கூடுதலாய் பறித்த லட்சுமி எனும் பெண்ணை கங்கானி உதாசினம் செய்கிறார்.ஒரு பெண் இத்தனை தேயிலை பறிக்க முடியாது என்று. பெண்ணுக்கு இவ்வளவு வலிமை இல்லை என்று. அடுத்த நாள் சவால்விட்டு நடக்கும் போட்டியில் மீண்டும் ஒரு ஆணை விட அதிக தேயிலை பறித்து ஜெயிக்கிறாள் லட்சுமி.
ஒரு பெண்ணின் வலிமை குறித்த ஆணின் குரூரத்தை சொல்லியிருப்பார்.



இப்போதும் ஒரு பெண் வாகனத்தில் ஒரு ஆணை முந்திசென்றாலோ, கார் ஓட்டிச் சென்றாலோ ஏளன பார்வை பார்க்கும் அந்த கங்கானிகள் மண்ணில் அவதரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

-மணி



காரணம் தேடிப் பேசிக்கொண்டிருந்தோம்..
காரணமின்றி பேசிக்கொண்டே இருக்கிறோம்..

-படித்தது



*விழித்திருக்கும் வேளையின் மொழி
அறிவதில்லை கனவின் வாக்கியங்களை

                                -முகுந்த் நாகராஜன்




எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ?

  -கபிலன்.

No comments:

Post a Comment