[07/05, 5:41 pm] மணிகண்ட பிரபு: கடைசியாக மிச்சமிருப்பது
இது ஒன்றுதான்
நிஜவாழ்க்கையின் யதார்த்தத்தோடு
மோதிவிடுவது மட்டும்தான்
-தஸ்தாயெவ்ஸ்கி
[09/05, 7:23 am] மணிகண்ட பிரபு: துவங்கிய இடத்திலேயே வந்து சேருகிற இரண்டே எண்கள் 0& 8.இதில் ஜீரோ போடுவது எளிது.8 சற்று சிக்கலானதும் கன்ட்ரோல் இருந்தால் மட்டும் காலூன்றாமல் போட முடியும் என்பதால் இருசக்கர ஓட்டுநர் உரிமத்துக்கு இதை தேர்ந்தெடுத்தனர்.
#info
[09/05, 7:28 am] மணிகண்ட பிரபு:
பாட்டு போட்டாலென்ன
படம் காட்டினாலென்ன
நடந்து போனாலும்
வாகனத்துக்குள் இருந்தாலும்
ஒவ்வொருவர் மனதிலும்
ஒரு லாரி ஓடிக்கொண்டுதான்
இருக்கிறது
-க.பஞ்சாங்கம்
[09/05, 11:34 am] மணிகண்ட பிரபு: வயிறு
இருக்கும்வரை
எல்லா மனிதர்களும்
யாருக்கோ கைக்கூலிகள் தான்
-படித்தது
[10/05, 8:12 am] மணிகண்ட பிரபு:
ஆங்கிலத்தில் 'பாக்ஸ்' என்பது பெட்டி செய்யும் மரம். பின்னாளில் பெட்டிக்கே அப்பெயர் வைத்துவிட்டனர்
#info
[10/05, 6:45 pm] மணிகண்ட பிரபு:
இந்திய ரசிகர்கள், ஒரே மாதிரியான பாத்திரங்கள், எதிர்பார்க்கக் கூடிய வசனங்கள் ஆகியவற்றுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டார்கள்
-நஸ்ரிம் முன்னி கபிர்
(சினிமா வரலாற்றாளர்)
[11/05, 6:05 am] மணிகண்ட பிரபு:
நம்மை யாரும் புறக்கணிக்காத அளவிற்கு நாம் வளர்வதற்கு அறிவு ஒன்றே அட்சயப் பாத்திரம்
-இறையன்பு
[12/05, 7:30 am] மணிகண்ட பிரபு:
ஒரு கால்பந்தாட்டக்காரன் தன் காலடியில் வந்துசேரும் பந்தை தன்னுடையது என எண்ணாமல் குழுவினுடையது என நினை. நீதான் 'கோல்' போடவேண்டுமென நினைக்காதே.பந்தை மேலெடுத்துச் செல்ல,உன் சக ஆட்டக்காரன் காத்திருக்கிறான். எங்கும் பலவீனத்திற்கான ஊற்றுக்கண் மனிதன்தான்.
-ஜே.ஜே.சிலகுறிப்புகள்
[12/05, 7:39 am] மணிகண்ட பிரபு:
காய்ச்சி வடிகட்டும் நுட்பத்தை அரேபியர்கள் அறிந்திருந்தனர். பழச்சாற்றில் இருந்து பிறப்பது ஒயின்.78 டிகிரியில் கொதிக்கவைத்து குளிரவைத்தால் எரியும் தன்மையான நீர்(பிராந்தி) கிடைத்தது.இதே போல் பீரைக்காய்ச்சி வடிகட்டினால் கிடைத்தது விஸ்கி.
கரும்புச்சக்கையிலிருந்து ரம் தயாரித்தனர்.அடிமைகளை பிடித்துவர,ரம் தயாரிக்க ஊதியமாக ரம் தயாரிக்கப்பட்டது.இப்படித்தான் மது உலகம் முழுதும் பரவியது.
[12/05, 7:47 am] மணிகண்ட பிரபு:
போனஸ் பிறந்த வரலாறு:
1979-ல் சரண்சிங் தலைமையிலான மத்திய அரசானது இடதுசாரி தலைவர்களிடம் ஆதரவ கேட்டபோது, அமைச்சர் பதவி ஏதும் கேட்டுப் பெறாமல் அவசரநிலை (எமர்சென்சி) காலத்தில் பணிநீக்கம் செய்யப்ட்ட இரயில்வே ஊழியர்களை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், எல்லா தண்டனைகளையும் இரத்து செய்ய வேண்டும், ஊழியர்களுக்குப் போனசு வழங்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளோடு ஆதரவு வழங்கியது. இதன் தொடர்ச்சியாகவே மாநில அரசின் ஊழியர்களுக்கும் போனசு என் ற வாசல் திறக்கப்பட்டது.
[13/05, 6:56 am] மணிகண்ட பிரபு: கொஞ்சமாக தெரிந்து கொண்டிருக்கும் போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகம் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரம்.
திறப்பதே திறக்காத கதவை பார்க்கத்தானா?
-சுந்தர ராமசாமி
[13/05, 7:00 am] மணிகண்ட பிரபு:
இதழியலில் show..dont tell என்ற ஒரு உக்தி உண்டு.இப்படி நடந்தது,
அப்படி நடந்தது என்று வார்த்தைகளை கொட்டி அளந்து கொண்டிராமல், நடந்ததை காட்சியாகத் தீட்டிக் காண்பிப்பது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்
#info
No comments:
Post a Comment