Sunday, 15 August 2021

நெரூடா

பேசாமல் இருப்பது
மனிதர்களுக்கு மரணமாகும்
மொழி ரோமம் வரை விரிகிறது

உதடு அசையாமலே
வாய் பேசுகிறது
திடீரென்று கண்கள்
சொற்களாகிவிடுகின்றன

நான் பேசுகிறேன் அதனால் இருக்கின்றேன்
பேசாமல் இருப்பதன்மூலம்
சொற்களின் எல்லையை
எட்டிப்பிடிக்கிறேன்

-நெரூடா

No comments:

Post a Comment