Tuesday, 3 August 2021

காஃப்காவின் கதை

ஃபிரான்ஸ் காஃப்காவின் கதை ஒன்று இருக்கிறது. அது உண்மையானதா அல்லது பொய்யானதா என்று  தெரியாது.
ஆனால் மனதை என்றும் குளிர வைக்கும் கதை. 

ஃபிரான்ஸ் காஃப்கா தினமும் நடைபயிற்சி செல்லும் பூங்காவில் ஒரு சிறுமியை சந்தித்தார். அப்போது அவள் அழுது கொண்டிருந்தாள். காரணம் அவள் தனது பொம்மையை தொலைத்து விட்டு கலங்கி போய் மகிழ்ச்சியை இழந்திருந்தாள். 

காஃப்கா அவளது பொம்மையைத் தேடி உதவி செய்ய முன்வந்தார். "மறுநாள் இதே இடத்திற்கு வா சந்திக்கலாம் உனது பொம்மை கிடைக்கும்" என்று அவளுக்கு உறுதிமொழி தந்து அனுப்பினார். ஆனால் அவரால் 
பொம்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரே அந்த பொம்மை எழுதியது போல ஒரு கடிதத்தை எழுதினார். அடுத்தநாள் அந்தச் சிறுமியை சந்தித்தபோது அதை அவளிடம் படித்துக் காட்டினார் 

'தயவுசெய்து எனக்காக வருத்தப்பட வேண்டாம், நான் உலகைப்  சுற்றிப் பார்க்க ஒரு நீண்ட பயணத்திற்குச் சென்றிருக்கிறேன். எனது சாகசங்களை நான் உனக்கு தொடர்ந்து எழுதுவேன். அது பல கடிதங்களின் தொடக்கமாக இருக்கலாம் . இப்படி அவர் கவனமாக எழுதிய கடிதத்திலிருந்து பொம்மையின் கற்பனை சாகசங்களைப் படித்தார். இதனால் சிறுமியும் சற்று ஆறுதல் அடைந்தாள்.

பின்பு கொஞ்ச நேரம் கழித்து காஃப்கா அவளுக்கு ஒரு பொம்மையை தந்தார். அது அவளுடைய அசல் பொம்மையிலிருந்து வித்தியாசமாகத் தெரிந்தது. அந்த பொம்மையின் உடன் இணைக்கப்பட்டிருந்த இன்னொரு கடிதத்தில் "எனது பயணங்கள் என்னை இப்படி மாற்றிவிட்டன"  என்று எழுதப்பட்டிருந்தது. 

பல வருடங்கள் கழித்து அந்த பெண் வளர்ந்து விட்டாள். அந்த பெண் இப்போதெல்லாம் அந்த பொம்மை கவனிப்பதில்லை. ஒருநாள் எதேச்சையாக மீண்டும் அந்த பொம்மையில் கவனிக்கப்படாத பிளவுக்குள் ஒரு கடிதம் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டாள் 

சுருக்கமாக அதிலிருந்து வரிகள்

இந்த உலகில் நீ நேசிக்கும் அனைத்தையும் ஒருநாள் நீ இழப்பாய். ஆனால் நீ இழந்த அனைத்து விஷயங்கள் கண்டிப்பாக வேறு வடிவத்தில் மீண்டும் உனக்கு கிடைக்கும்.

No comments:

Post a Comment