Saturday, 1 April 2023

book-17


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-8
Book-17
Pages-319

சிந்தனை கதிர்வீச்சு 
-அ பிச்சையா

பாமரனுக்குச் சொன்னால் பண்டிதனும் புரிந்து கொள்வான் என்பார்கள். அது போல் சில சமயங்களில் சிறுவர்களின் புத்தகங்களை விரும்பி படிப்பதுண்டு. அதில் நமக்குத் தெரியாத சுவையான சம்பவங்கள் பல இருக்கும். அவ்வகையில் நான் படித்த புத்தகங்களில் இந்த புத்தகத்திலும் சில துணுக்குகள் சுவையாக இருந்தது. கரப்பான் பூச்சி 32 கோடி ஆண்டுகளுக்கும் பழமையானது. கப்பல் மூலம் உலகெங்கும் பரவியது என்னும் செய்தி வியப்பாய் இருந்தது. அகன்ற பாத்திரங்களில் வளர்க்கப்படுவதால்தான் போன்சாய் என்னும் பெயர் வந்தது என்பது போல் சொல்வதற்கும் கேட்பதற்கும் சுவாரசியமாய் இருக்கும் செய்திகள் தொகுக்கப்பட்ட நூல்.

விபத்துகளில் உயிர்களை காப்பதில் ஆம்புலன்ஸ் சேவை ஒரு அற்புதமானது. இந்த சேவை 1487 இல் ஸ்பெயின் நாட்டு மன்னர் பெர்டினார்ட் இசபெல்லாவின் பொறியில் தட்டியது. ராணுவத்துக்காக போர்க்களத்தில் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தினார் .இன்றைய ஆம்புலன்ஸின் முன்மாதிரி வடிவத்தை 18 ஆம் நூற்றாண்டில் நெப்போலியன் ராணுவத்தில் பணியாற்றிய மருத்துவர் டோமினிக் ஜீன் லாரே தான் பிரான்ஸ் நாட்டில் ராணுவத்தில் அறிமுகம் செய்தார். 1887 இல் புனித ஜான் ஆம்புலன்ஸ் லண்டனில் அறிமுகமானது.

தாய்மார்களின் கர்ப்பப்பை அளவு 23 மில்லி மீட்டர் ஐந்தாம் மாதத்தின் துவக்கத்தில் குழந்தையின் காது மூக்கு உதடு ஆகிவை தோன்றும் .ஏழாம் மாதம் தலையில் முடி முளைக்கும். கருவில் உருவான எழுபதாவது நாளில் இருந்து கொட்டாவி விட ஆரம்பிக்கிறான் மனிதன்.பிளஸெண்டா என்பது கொப்பூழ் கொடியே.

*ஸத்ரம் என்பது ஒரு யாகத்தின் பெயர். அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் யாகம் செய்து முடிந்ததும்.. அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுகின்ற இடத்தை சத்திரம் என்று சொல்லப்பட்டது.

*எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சட்டமன்றத்தில் முதலமைச்சருக்கு இணையான பதவி. சபையில் யார் பேசும்போதும் முதல்வர் எழுந்தால் பேசிக் கொண்டிருந்தவர் உடனடியாக உட்கார வேண்டும். அதேபோல்தான் எதிர்க்கட்சித் தலைவரும் யார் பேசும்போதும் குறுக்கிடலாம். அவர் எழுந்தால் மற்றவர்கள் உட்கார்ந்து விட வேண்டும். முதல்வர் பேசும்போது தயக்கமில்லாமல் குறிக்கிட்டு கேள்விகள் கேட்க கூடிய அதிகாரம் எதிர்க்கட்சித் தலைவருக்கு உண்டு.

*புன் சாய் என்று சீன மொழியில் இருந்து வந்தது தான் போன்சாய் என்ற ஜப்பானிய சொல் .போன் என்றால் அகன்ற பாத்திரம். சாய் என்றால் மரம். அகன்ற ட்ரே வடிவிலான பாத்திரத்தில் உள்ள மரம் போன் சாய்.

*காவடி எடுத்துச் செல்வோர் வழியில் தெய்வத்தை துதி செய்து பாடும் பாடல்களை காவடிச்சிந்து. பல்லவியும் அனு பல்லவியும் இன்றி சரணங்களுக்கு உரிய கண்ணியை மட்டுமே பெற்று வருவது. திருநெல்வேலி அருகே சென்னி குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடல்களை எழுதினார். இவரது பாடல்களே பாரதியாருக்கு உந்துதலாக இருந்தன.

ராஜாஜியை சக்கரவர்த்தி ராஜாஜி என்று அழைத்தார்கள். அவர் எந்த நாட்டிற்கும் சக்கரவர்த்தி இல்லை. சிலர் கவர்னர் என்பதால் சக்கரவர்த்தி என்று அழைப்பதாக நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அவரின் தந்தையின் பெயர் சக்கரவர்த்தி என்பது ஆகும். ஒருமுறை சிறுவன் ராஜாஜியின் படத்தை வரைந்து கொண்டு போய் அவரிடம் கையெழுத்து பெற நீட்டினான் .அதில் அவர் ராதாகிருஷ்ணன் என்று கையெழுத்திட்டார். கையெழுத்தைப் பார்த்து சிறுவன் திடுக்கிட்டு உங்கள் பெயர் இது இல்லையே என்றான். இந்த படமும் எண்ணுது இல்லையே என்றார். அங்கு இருந்த அனைவரும் சிரித்தனர்.

*பெண்ணுக்கு சர் பட்டம் வழங்கிய நிகழ்வும் நடந்துள்ளது. மர்ம நாவலின் மகாராணி என்று அழைக்கப்பட்ட அகதா கிறிஸ்டி அவருக்கு மேடம் என்கிற பட்டத்தை (சர் பட்டம்) இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் 1971 ஆம் ஆண்டு வழங்கினார்.

ஆலய நுழைவு போராட்டம் என்பது அப்போத பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. வைக்கத்தை தொடர்ந்து தமிழகத்தில் 1929 ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை திருநீறு பூசி அழைத்துச் சென்றவர் பெரியாரின் தோழரான குத்தூசி குருசாமி .கடவுள் நம்பிக்கை இல்லாத குருசாமி எப்படி கோவிலுக்குள் இருந்தார் என்று அவரை சுற்றி வளைத்தனர். பெரியார் வந்த பிறகு விடுவிக்கப்பட்டார் .

ஆன்மீக உரிமைக்காகவும் பக்தர்களின் சுயமரியாதைக்காகவும் போராடிய பெரியார் அர்ச்சகர்களின் கைகளில் இருக்கும் கோயில்களை மீட்க அரசு அறநிலைத்துறை உருவாக்க வேண்டும் என்று முதன் முதலாக குரல் கொடுத்தார். டிசம்பர் 18 1972ல் அறிமுகப்படுத்தப்பட்டு, நீதிக்கட்சியை சேர்ந்த பனகல் அரசர் ஆட்சி காலத்தில் 1925 இல் நிறைவேற்றப்பட்டது தான் இந்து சமய அறநிலைத்துறை சட்டம். தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்கள் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அறியாத பல செய்திகளை அறியும்போது நமக்குள் ஒரு ஆனந்தம் பிறக்கிறது. அது வாசிப்பின் மூலம் வந்ததா அல்லது வாசிப்பின் வழியே கண்ட தகவல் வழி வந்ததா என்று தெரியவில்லை. மீண்டும் எப்போதும் வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்தும் போது நாம் படித்தது உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னும் மன நிறைவு நமக்கு கிடைக்கிறது

 தொடர்ந்து வாசிப்போம்

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment