Sunday, 2 April 2023

Book-18

#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-9
Book-18
Pages-550

தண்ணீர் 
நீரலைகளும் நினைவலைகளும்
தொகுப்பு:மதுமிதா

போலந்து நாட்டில் ஐநா சபை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேராசிரியர் என்பவரும் மார்க் மெரோனா என்பவரும் கலந்து கொண்டனர். அடிக்கடி மூக்கை பற்றிய படி விவாதம் செய்தார். அதை கவனித்த ஆண்டர்சன்.. என்னிடம் இருந்துதான் வாசம் வருகிறது. குளிக்கவில்லை என்றார். கால நிலை மாற்றத்திற்கு ஏதோ என்னால் முடிந்த தியாகம் என்றார். காலநிலை மாற்றத்தை தவிர்க்க தனி நபரின் பொறுப்பாக தினமும் குளிக்க கூடாது என்கிற பரப்புரை ஐரோப்பிய நாடுகளில் நடப்பது தான் அவர் அப்படி கூறினார் .நலம் வாழ பகுதியில் சூழலியளாளர் நக்கீரன் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி தான் இது. காலநிலை மாற்றம் மற்றும் சூழ்நிலைகள் குறித்த கட்டுரையின் ஒன்றாக வருவது நீர் .

இந்த ஆண்டு திருப்பூர் புத்தக கண்காட்சியில் சூழலியளாளர் கோவை சதாசிவம் அவர்கள் பரிந்துரையின் பேரில் இப் புத்தகத்தை வாங்கினேன். இதில் நீர் குறித்து 60 ஆளுமைகள் தாங்கள் அனுபவத்தை நீரின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு இயலிலும் மிக விரிவாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார்கள். சங்ககால பாடல்களில் இருந்து விளக்கும் நாஞ்சில் நாடனும், நீரின் பயனையும் தமிழர்களின் நீர் பாசன முறையையும் நீர் மேலாண்மையையும் தோழர் சி மகேந்திரன் அவர்களும், இளமைக்காலத்து நீர் அனுபவங்களை மகுடேஸ்வரன் அவர்களும், காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம் காதல் மாதர் கடைக்கண் காட்டினால் எனும் பாரதியின் வரிகளுக்கேட்ப பொன்னீலன் அவர்களும் இளமைப் பருவ நீராடல் குறித்து சொல்கிறார்.

அந்த அலைகளைப் போல 
அழகாக 
பூடகமாக 
மூர்க்கமாக 
தனித்தன்மையுடன் இருக்க விரும்புகிறேன்

என் நீரின் இயல்பை போல இருக்க விரும்புவதாக லதா அருணாச்சலம் நதிகள் குறித்த பார்வையை நம் முன் வைக்கிறார். சிங்கப்பூரில் எத்தனை ஆறுகள் என்று கேட்டவுடன் ஒரு விரலை நீட்டுகிறார் கார் ஓட்டுனர். ஏனெனில் நாங்கள் தண்ணீரை மலேசியாவில் இருந்து வாங்குகிறோம் என்றார் சிரிப்புடன். காற்று தவிர அனைத்தையும் வாங்குகிறோம் அதுதான் சிங்கப்பூர் என்றார் .1961 மற்றும் 62 ஆண்டுகளில் சிங்கப்பூர் மலேசியா இடையே இரு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன 99 ஆண்டுகால ஒப்பந்தங்களில் மலேசியாவின் ஜோஹார் மாநிலம் சிங்கப்பூருக்கு நீர் வழங்கும். சிங்கப்பூர் சுத்திகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் நடந்தது என்னவென்றால் தனது பயன்பாடு போக மலேசியாவுக்கே நீரை விற்று பணம் பார்த்தது சிங்கப்பூர் என்ற செய்தி அபூர்வமாக இருந்தது என்று பகிர்கிறார் ஆமருவி.

நீருக்கான தேவைகள் நாள்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த நாட்களில் இருந்த நீர்வள ஆதாரங்களை குறிப்பிடுகின்றன ஒரு கட்டுரை. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மூலம் 332.3 மில்லி மீட்டரும் வடகிழக்கு பருவமழை மூலம் 459.2 மில்லி மீட்டரும் கிடைக்கிறது. குளிர்காலத்தில் 36.8 மில்லி மீட்டரும் கோடைகாலத்தில் 129.6 மில்லி மீட்டரும் கிடைக்கிறது. ஒப்பிட்டால் வடகிழக்கு பருவமழை ஒன்றுதான் மாநிலம் முழுக்க பரவலாக நீர் கிடைக்கும் ஒரே ஆதாரம். தமிழகத்தில் நீர் மேலாண்மை பண்டைய தமிழர்கள் எவ்வாறு மேற்கொண்டனர் என்பதை கூறும் போதே நாம் நீர் மேலாண்மை செய்வதை தவறி விட்டோம் என்கிற குற்ற உணர்வு வருகிறது.

ஒவ்வொருவரும் தங்களுடைய நினைவலைகளில் நீரை பற்றி நினைவு கூறும்போது தாங்கள் பார்த்து வியந்த ஏரிகளையும் குளங்களையும் பற்றி சிலாகித்துக் கூறுகின்றனர் என்றால் அது தற்போது இல்லை என்று பொருள் படுகிறது. டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூரில் நீர் எவ்வாறு காவிரியில் கரைபுரண்டு ஓடியது எவ்வாறு நெல்மணிகள் பூத்துக் குலுங்கின எவ்வாறு கிணறுகள் குளங்கள் விரும்பின என்பதை பற்றி சொல்லும் போது இப்போது நாம் நிலத்தடி நீர் கூட குறைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

கடலோடியாக தனது பயணத்தை துவங்கிய நரசையா அவர்களின் ஒரு சம்பவம் மிகவும் புதுமையாக இருந்தது. கடல் நீர் எப்போதும் உப்பாகத்தான் இருக்கும். ஆனால் கப்பல் இயங்குவதற்கு தேவையான இனிய நீர் எவாப்ரேட்டரை நம்பி இருக்க வேண்டும். அது கடல் நீரை இனிய நீராக மாற்றும் ஒரு முறை. கொல்கத்தாவில் இருந்து தூத்துக்குடிக்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் பணியில் இருந்த போது கங்கை நதி வழியாக உள்நாட்டின் தூரத்தில் கப்பல் கடந்தது.

 அப்போது கங்கை கடலில் வந்து கலக்கும் கங்கையின் பாய்ச்சல் மற்றும் நதிகளை விட அதிக சக்தி கொண்டது. முதன்முறையாக சீப் எஞ்சினியர் என்னிடம் ஒரு விவரத்தைச் சொன்னார்.கங்கையின் சக்தி மற்ற நதிகளை விட அதிகமானது. அதிலும் லோ டைட் எனப்படும் கடலின் பின் வாங்கும் நிலையில் இந்த நிகழ்வு ஒரு நாளில் இருமுறை நிகழும் அப்படித்தான். துறைமுகங்களில் high டையட் நிகழ்கையில் ஆழம் குறையவும் ஆழம் அதிகமாகவும் செய்யும் .நதிநீர் மிக வேகமாக கடலில் பாயும் போது கிட்டத்தட்ட சில மைல்கள் தூரத்துக்கு கடலில் நதிநீர் பாயும் சுற்றிலும் உப்பு நீர் இருப்பினும் தனது பரிணாமத்தையும் குணத்தையும் கங்கை நீர் குறைத்துக் கொள்ளாது. அப்போது நீரை பம்புகள் மூலம் எடுத்துக் கொள்வோம் என்று சொன்னது ஆச்சரியமாய் இருந்தது.

கண்மணி குணசேகரின் வந்தாரங்கடி நாவலுக்கு முன்னுரை எழுதிய பஞ்சாங்கம்.. தேசத்தின் வளர்ச்சி என்று கூச்சலிடுவர்களும் உண்மையான முகத்தை இவ்வாறு கலைத்திருப்பார். உள்ளேயும் வெளியேயும் வளர்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமிப்புகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் அடித்து நிறுத்தப்பட்டு இருக்கிறோம். மலைகள் காடுகள் ஆறுகள் கடல்கள் குளங்கள் என ஒன்று விடாமல் அனைத்தையும் அழித்து ஒழிக்கும் அட்டூழியங்களை தேசத்தின் வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லால் மூடி மறைத்துக்கொண்டு உரிமையாளர்களின் சேவை மையமான அரசு இயந்திரங்கள் வேகமாக அரங்கேற்றுகின்றன என்று சொல்லி இருப்பார்.

*புதுநீர் என்று அழைக்கப்படும் மறுசுழற்சி நீரை ஒரு கியூபிக் மீட்டர் அளவு உற்பத்தி செய்ய 30 முதல் 50 சிங்கப்பூர் காசுகள் செலவாகிறது என்கிறது அரசு

*குளங்கள் ஆறுகள் அருவிகள் என நீர் வளத்துக்கு பேர் போன ஊரில் பிறந்த ஒருவனுக்கு பிறக்கும் போதும் தெரியாது. பின்னால் தண்ணீர்க்காண போராட்டத்திலும் தெரியும்.

*தண்- குளிர்ந்த நீர் -பானம்

*எல்லாவற்றையும் விட நீரை நேசிக்க வேண்டும் சிக்கனமாக செலவு செய்யுங்கள் புனித தீர்த்தமாக கருத வேண்டும்

*நீரின்றி வாழ்வு இல்லை நீலம் இல்லை பசுமையும் இல்லை

ஒவ்வொரு கட்டுரைகளும் நம்முடைய குற்ற உணர்ச்சியை கூர் தீட்டிக் கொண்டே இருக்கின்றன. ஏனெனில் நாம் அனைவரும் மழை நீரையும் சேகரிப்பதில்லை, நீரையும் சிக்கனமாய் செலவு செய்வதில்லை .இதன் விளைவு பன்னாட்டு கம்பெனிகள் நீரை நமக்கே விற்கும் அவல நிலைக்கும் வந்துள்ளன.சென்னை போன்ற பெரு நகரங்களில் சேமிக்கும் நீர் என்பது மேட்டூர் அணையில் சேமிக்கும் நீருக்கு சமம் என்று ஒரு செய்தி படிக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. மழைநீர் சேகரிப்பு தொட்டி என்பதே நாம் பெயரளவுக்கு வைத்திருக்கின்றோம் .மழைநீர் அனைத்துமே வீணாகிக் கொண்டிருப்பது எதிர்கால வறட்சியை நாம் கண் முன்னே கண்டிருப்பது போலத்தான். மரங்களற்ற பாலைவனம் போல் வளர்ச்சி என்ற பெயரில் ஊர் மாறி கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஆற்றுப்பாலம் இருக்கும் ஆனால் ஆற்றில் நீர் இருக்காது. ஏனெனில் நாம் அதனை வளர்ச்சியின் பெயரால் இழந்து விட்டோம். நாம் அதை பேசுவதற்கு அருகதை இல்லை என்றாலும் இருக்கும் நீரையாவது சேமிக்க வேண்டும் என்ற உணர்வை புத்தகம் நமக்கு கொண்டு வருகிறது

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment