Wednesday, 13 March 2024

கற்கை நன்றே-33



கற்கை நன்றே-33
*மணி

கவிக்கோ கூறுவார்..
அறிய அறிய அறிவு வளரும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் திருவள்ளுவரோ அறிய அறிய நம் அறியாமை தெரியவரும் என்று (அறிதோறும் அறியாமை கண்டற்று) என்ற குறளில் கூறுகிறார்.

 வள்ளுவரின் கருத்துக்கு இது மட்டும் பொருளல்ல. இதற்கு மேலே ஒரு பொருள் இருக்கிறது 
அறிய அறியத்தான் அறிய வேண்டியவை எவ்வளவு இருக்கின்றன என்ற மலைப்பு உண்டாகும்.

 எல்லாவற்றையும் அறிந்து விடலாம் என்று ஒரு காலத்தில் நினைத்தோம். ஆனால் நம் அறிவு பெருக பெருக இருளும் பெருகுகிறது. நாம் பல விஷயங்களை அறியவே முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்று விஞ்ஞானிகள் இப்போது கூறுகின்றனர்

 அறியேன் என்பதை அறிவது உண்மையான அறிவு .அதாவது அறியாமையை அறிவது அறிவு.

 ஒவ்வொரு பறவையும் தன் சக்திக்கேற்ற உயரத்தை அடைகிறது. எவ்வளவு சக்தி வாய்ந்த பறவையாக இருந்தாலும் அது எட்டும் உயரத்தோடு ஆகாயம் முடிந்து விடுவதில்லை .அது எல்லையற்ற விரிந்து கொண்டே போய்க் கொண்டே இருக்கிறது.

 அறியாமையும் அது போலத்தான்..

 இனிய காலை

No comments:

Post a Comment