பழம் தின்று கொட்டை போட்டவர் என்றால் என்ன அர்த்தம்?
யானைகளை காடுகளின் தந்தை என்பார்கள்.
ஆதிகாலம் முதல் யானைகள் தாம் பழங்களைத்தின்று தான் செல்லுமிடமெல்லாம் விதைகளைப்போட்டு காடுகளை விருத்தி செய்கின்றன.
இன்றளவும் காடுகளில் புதிய தாவரங்கள் மற்றும் மரங்கள் வேறுவேறான இடங்களில் வளர்வதற்கு யானைகள் தாம் காரணம்.
அவ்வாறாக பழம் தின்று கொட்டைகள் போட்டு காடுகளைபல்கிப்பெருகச்செய்த யானைகளை காட்டும் உதாரணம் தான் பழம் தின்று கொட்டை போடும் உதாரணம்.
அப்படியான யானைகள் அளவுக்கு பலம் பொருந்தியவர் என்று பொருள்கொடுக்கும் வகையில் தான் பழம் தின்று கொட்டை போட்டவர் என்று உதாரணமாக சொல்லப்படுகிறது.
-படித்தது
No comments:
Post a Comment