Thursday, 14 March 2024

மாமியார்


ஒரு பணக்கார மனைவியின் மாமியார் காளை மாடு முட்டி இறந்து போனாள்.. துக்கம் கேட்க வந்த அனைவரும் சோகத்துடன் வந்து அவளை பார்த்து விசாரித்து வட்டு சென்றனர்.

ஆண்கள் வந்து கேட்கும் பொழுது ஆமாம் என்று தலையாட்டினார் .பெண்கள் வந்து விசாரித்த போது இல்லை என்று தலையாட்டினார்.

இதை நெடு நேரமாக கவனித்துக் கொண்டிருந்த' அவருடைய நண்பர் ஒருவர் உங்களிடம் துக்கம் கேட்க வந்தவர்களுக்கு ஆண்களிடம் ஆமாம் என்பது போலவும் பெண்களிடம் இல்லை! என்பது போலவும் ஏன் தலையாட்டினீர்கள் ?என்று கேட்டார்

ஆண்கள் வந்து உங்கள் மாமியார் மிகவும் நல்லவர் .உங்களை தன்னுடைய குழந்தை போல கவனித்துக் கொண்டார் என்று சொல்லும் போது, ஆமாம் என்று தலையாட்டினேன். பெண்களில் பலரும் வந்து கேட்டார்கள், அந்த காளை மாட்டை கொஞ்ச நாட்கள் எனக்கு தர முடியுமா ?என்று !
நான் முடியாது என்று தலையாட்டினேன் ! என்றார்.

நீதி:- சொல்வதற்கு எதுவும் இல்லை.

No comments:

Post a Comment