அரசியலில் மட்டுமல்ல, வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் மனிதரிடத்து தேர்தல் மனம் என ஒன்று செயல்பட்டுக்கொண்டேயிருக்கும் போலிருக்கிறது. தேர்தல் மனம் தனது வெற்றியையும், பிறர் ஒருவரின் தோல்வியையும் விழையும் . அதற்கான காரணங்களை அது விநியோகித்துக்கொண்டேயிருக்கும்.
மனித மனமே இப்படித்தான் விழைவுகளை கொண்டிருக்கும் போலிருக்கிறது. தன்னை கொண்டாடவேண்டும், தன் சொல்லிற்கு மந்திர சக்தி இருக்கிறது என்று நம்பச் சொல்லும் அதே மனம், தான் ஒப்பிடும் அந்த மற்றவர் சொல்லை எவரும் கேட்பதில்லை, அவர் செல்லா காசாகிவிட்டார் என்பதை உணர்தலிலும் உணர்த்தலிலும் உறுதிப்படுத்திக்கொள்வதிலும் சந்தோஷம் கொள்கிறது. இங்கு ஒருவரின் வெற்றி பிற ஒருவரின் தோல்வியாக இருந்தே ஆகவேண்டும் போல..
மனம் ஏன் எப்போதும் தேர்தல் மனமாகவே செயல்படுகிறது …
⁃ நமரி
No comments:
Post a Comment