Sunday, 28 April 2024

ஹேர்மிசஸ் கோட்பாடு


ஹோர்மிசிஸ் என ஒரு கோட்பாடு பயாலஜியில் உண்டு .மிகச்சிறிய அளவுகளில் விஷம் தொடர்ந்து கொடுக்கபட்டால் அந்த உயிரினம் வலுவானதாக மாறும் என்பது.

விஷம் மட்டுமில்லை,,மிக சிறிய அளவுகளில் துன்பம், துயரம், ஸ்ட்ரெஸ் அளிக்கும் விசயமும் இப்படியே நன்மையாக மாறும்...

மெக்கினாக் தீவுகளில்...அங்கே கார்கள் தடைசெய்யபட்டிருந்தன. குதிரைவண்டிகள் தான் பயணிகளை இழுத்துபோயின. இரு குதிரைகள் 15 பேர் கொண்ட வண்டியை இழுத்துசென்றன. வண்டிக்காரரிடம் கேட்டதற்கு "இப்படி கடுமையாக வேலை செய்யும் குதிரைகள் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் குதிரைகளை விட நீண்டகாலம் வாழும், நோய்நொடியும் குறைவாகவே வரும்" என்றார்.

 உடல்பயிற்சியின் நன்மை என மட்டுமே இதை சொல்லமுடியாது.

 ஆய்வு ஒன்றில் எலிகளை இரு பிரிவாக பிரித்தார்கள்..ஒரு பிரிவு எலிகள் குளிர்நீரில் தினம் 4 மணிநேரம் விடப்பட்டன. குளிரில் நடுங்கியபடி அவை நாலுமணிநேரத்தை கழித்தன. மற்றொரு பிரிவு எலிகளை அப்படி செய்யாமல் இஷ்டத்துக்கு விட்டார்கள். தினம் குளிரில் இருந்த எலிகள் சும்மா இருந்த எலிகளை விட நீண்டநாள் உயிர்வாழ்ந்தன. 

ஆக குதிரைகளுக்கு வேலை, எலிகளுக்கு குளிர்..இருவிதமான ஸ்ட்ரெஸ்கள் தொடர்ந்து கொடுக்கபட்டன...அவை அவற்றின் ஆயுளையும் உடல்நலனையும் கூட்டின.

ஆக: நம் வாழ்வில் சின்ன, சின்னதாக வரும் துன்பம், துயரம் இவை நம்மை வருங்காலங்களில் மிக வலுவானவர்களாக ஆக்குகின்றன.

சொகுசான வாழ்க்கை நம்மை மிகபலவீனமாக ஆக்கும் .

சிறிய அளவிலான துன்பங்கள் நம்மை வலுவானவராக ஆக்கும்

-நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment