Reading_Marathon2024
#24RM050
Book No:34/100+
Pages:152
காற்றில் கரையாத நினைவுகள்
-வெ இறையன்பு
தொலைந்து விட்ட வாழ்க்கையை மீண்டும் கண் முன் நிறுத்தும் நோஸ்ட்ராலஜியா பதிவுகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம் இந்த புத்தகம் தி இந்து நாளிதழில் தொடராக வந்தவை மீண்டும் புத்தகமாய் படிக்கும்போது நினைவு கூறுதலுக்கு சுகமாய் உள்ளது.
விடுமுறை தினங்களில் செல்போனில் விளையாடும் குழந்தைகளுக்கு ஊரில் தாத்தா பாட்டி சந்தித்ததை சொல்லும்போது அவர்களுக்கு வியப்பாக இருக்கும். உறவின் மேன்மையை மௌனமாய் கற்றுத் தந்த காலங்களவை. அழைப்பு மணி ஓசை கேட்ட வீடுகளை போன் காரர் வீடுகள் என்று இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அன்று வீதிக்கு ஒரு போன் இருந்தபோது இருந்த இன்பம் இப்போது வீட்டுக்கு ஒரு போன் வந்தபோது இல்லை என்பதை இந்த பதிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
90களில் பாலுமகேந்திரா இயக்கிய வீடு படம் ஒரு வீடு கட்டுதலில் இருக்கும் துக்கத்தையும் துயரத்தையும் நடுத்தர மக்கள் எவ்வாறு அல்லல்படுகின்றனர் என்று சொல்லப்படுவதை சொந்த வீடு பற்றிய கட்டுரைகள் காண முடிகிறது. இன்று வீடு வாங்குவது சாதனை அல்ல நிகழ்வு என்று ஆகிவிட்டது. அன்றிருந்த மகிழ்ச்சியும் திருப்தியும் இன்று கட்டிய வீட்டை வாங்குபவர்களுக்கு கட்டாயம் இருக்க வாய்ப்பு இல்லை என்று முடித்திருப்பார்.
தோட்டம் தொரவு என்று பேச்சு வழக்கில் நாம் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். தோட்டம் என்பது நமக்கு தெரியும் தொடர்பு என்பது கிணறு வகைகளை சார்ந்தவை. அன்று கிணறு வைத்திருந்தவர்கள் மிகப்பெரிய செல்வந்தராக கருதப்பட்ட காலம். ஊரில் கிணறுகள் இருப்பது அன்றைய குழந்தைகளுக்கு நீச்சல் பழகுவதற்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஆனால் இன்று நகரங்களில் கிணறு என்பது அரிதாகிவிட்டது. கிணறுகளை காண வேண்டும் ஆயின் எங்கேயும் சுற்றுலா சென்று தான் பார்க்க வேண்டி உள்ளது.
கடிதங்கள், பக்கத்து வீடுகளில் டிவி பார்ப்பது, அதில் வரும் நிகழ்ச்சிகள், புகைப்படம் எடுப்பது ,இரவில் நகை வாங்கி செல்வது அல்லது இரவல் பாத்திரங்கள் பண்டமாற்று முறையில் வீட்டுக்கு வீடு வாங்கிக் கொண்டு இருப்பது, உறவுகளை பேணிக்காத்த காலம் .ஏனெனில் ஒருவரிடம் இரவல் வாங்குவதற்கு அவருடன் நட்பிருந்தால் மட்டுமே வாங்க முடியும். இன்று அண்டை வீட்டாரோடு அதிகம் பேசக்கூட இயலா சூழ்நிலையை பொருத்திப் பார்க்கும்போது நாம் எத்தகைய வாழ்வை வாழ்ந்து இருக்கிறோம் என்பதை இந்த கட்டுரைகள் காட்டுகின்றன.
அந்தக் கால படிப்பு என்பது இன்றும் ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கம்பீரமாக சொல்லப்படுபவை. ஏனெனில் அந்த காலத்தில் இருந்த பயம் அப்படியே மாணவ மாணவியரிடம் பொறுப்புணர்ச்சியாக மாறியது. அந்த பொறுப்புணர்ச்சி இன்னும் படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தந்தது. தொடக்கப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்கள் சந்திப்பு ,மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும்போது நடந்தவை, போட்டிகளில் கலந்து கொண்டவை, தேர்வுகளை எழுதிய அந்த அனுபவங்கள் ,அந்த நட்புகள் இன்று வரை நாம் கடைப்பிடிப்பது போன்ற மாணவப் பருவ சூழல்களையும் விரிவாக அனைவரும் ரசிக்கும்படியும் இதில் எழுதி இருப்பார்.
வீதிக்கு வீதி மருத்துவமனை வந்த இந்த காலகட்டத்தில் அப்போது மருத்துவ வசதி குறைவாக இருந்தபோது கை வைத்தியம் பார்ப்பது, நோயற்ற உணவுகளை சாப்பிடுவது என்று ஆரோக்கியமான சூழல் இருந்ததையும் நாம தவற விட்டு ஆரோக்கியத்தையும் எண்ண முடிகிறது. ஆன்லைன் வசதியும் அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் சூழலோ இல்லாததால் காலையில் சென்ற பெற்றோர்கள் மாலையில் வீடு திரும்பி தங்களுடைய நேரத்தை தங்களுடைய பிள்ளைகளின் நலனுக்காகவும் பிள்ளைகளுடன் அதிகம் நேரம் செலவிடும் காலங்களையும் அன்றைய காலகட்டம் விளங்கியதை பார்க்க முடிகிறது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கான உறவு சமூகமாகவும் தற்கொலை எண்ணம் இல்லாமல் மன அழுத்தம் இல்லாமல் வாழ்ந்த வாழ்வையும் எண்ணிப் பார்க்க முடிகிறது.
போர் அடிப்பதை ஏற்றுக் கொண்ட அந்த தலைமுறையினர் தங்களுடைய பொழுதுபோக்கு நல்ல வகையில் கழித்தனர். புத்தகம் படிப்பது நண்பர்களுடன் உரையாடுவது அரட்டை அடிப்பது சொந்தங்களுடன் பேசி மகிழ்வது பத்திரிகைகளை வாசிப்பது என்ற அன்றைய காலகட்டங்கள் பொழுதுபோக்கினை மிகச் சறந்த முறையில் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவியதை அழகுற நினைவு கூறுகிறது.
தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டங்கள் வாழ்க்கையை முழுமையாக ரசனையுடன் வாழ முடிந்தது. நாம் தவறவிட்டதை அல்லது தலைமுறை இடைவெளியில் நாம் நினைக்க மறந்ததை செய்ய தவறியதை இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு சொல்லித் தருகிறது .அந்த காலகட்டங்களில் குறைகளே இல்லையா என்றால் குறைகளும் உண்டு. ஆனால் அதனை அவர்கள் எவ்வாறு நிவர்த்தி செய்தனர் என்பதை இந்த தலைமுறையினர் தற்போது செய்ய தவறுகின்றனர். நல்ல விஷயங்களை கற்று கொள்வதன் வாயிலாகவே இந்த தலைமுறையினர் தன்னுடைய அனுபவங்களை மெருகேற்றி வாழ்க்கையை சுவைபட வாழவும் இந்த புத்தகம் உதவும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment