Reading_Marathon2024
#24RM050
Book No:35/100+
Pages:138
இசூமியின் நறுமணம்
-ரா.செந்தில்குமார்
இந்த ஆண்டு வாங்கிய புத்தகம் இசூமியின் நறுமணம் மற்றும் பிற கதைகள். ரா. செந்தில்குமார் அவர்களின் 13 மோதிரங்கள் ஏற்கனவே சிறுகதை தொகுப்பு படித்ததால் இந்த புத்தகத்தையும் வாங்கினேன். கதையின் முக்கிய பகுதிகளில ஒன் லைனர் கதைகளாக இருந்தாலும் அதை சொல்லிய விதத்திலும் ஜப்பானிய சூழலில் எழுதப்பட்ட வாழ்க்கை முறை அந்த பின்புலத்தில் அமையப்பட்ட கதைகள் எளிமையாகவும் படிக்கத் தூண்டும் விதத்திலும் இருந்தன.
காதலியின் திருமணத்திற்கு பரிசு பொருளோடு செல்லும் காதலனின் மன உணர்வுகளையும் மெல்லிய உணர்வையும் மலரினும் மெல்லியது கதையில் பார்க்க முடிகிறது. அவள் முகத்தில் கருணை அரும்பி இருந்ததை கண்டதும் எரிச்சலானது என்ற ஒரு சொல் கதையின் ஆரம்பத்தில் வருகிறது. இலக்கில்லாத கோபத்துடனும் சோகத்துடனும் எழுந்த மனம் எவ்வாறெல்லாம் அங்கு கசப்பான அனுபவம் தந்த வலி இருப்பதை உணர முடிந்தது .தெரியாத மனுஷன் என்ன பெரிய தீமையை செஞ்சிட முடியும்னு கேட்கும் முன்பின் அறியாத நபரே கதையின் மையமாக கதையின் உள்ளடக்கத்தை சொல்பவராகவும் உள்ளார்.
டோக்கியோவில் பணிபுரி செல்லும் இளைஞனின் வாழ வாழ்வில் சஷுமி வருகிறாள். அவள் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களை கேட்டபடியே இருக்கிறான் நாயகன். பெண்களின் மனதில் இருக்கும் உண்மைகளையும் அவர்கள் விவரிக்கும் பொருளில் வரும் சொற்களையும் ரசிக்கிறான். தானிவத்தாரி கதையில் தானிவத்தாரி எனில் அடர்ந்த பள்ளத்தாக்கை கடந்து மற்றொரு பள்ளத்தாக்கு செல்லும் பாடல் என்றும், இருண்டு கிடக்கும் பள்ளத்தாக்கை கடக்க நேருகையில் துணையாக வரும் பாடல் என்றும் பொருள்களெல்லாம் என்று சொல்கிறான். ஒரு இடத்தில் நாயகன் ஜப்பான் மொழி குறித்து பேசும்போது நாயகி "கற்றுக்கொள்ளும் போது பெரும் இத்தகைய ஆச்சரியங்களை நீ இழக்க விரும்புகிறாயா? வாழ்நாள் முழுவதும் எதையேனும் கற்றுக் கொண்ட இரு என்ற தத்துவத்தை உதிர்ப்பது பொருத்தமாக இருந்தது
திருமணம் ஆகி செல்லும் இளந்தம்பதிரான வினோத்தும் சம்யுக்தாவும் ஜப்பானில் வசிக்கின்றனர். புத்தாண்டுக்கு இந்தியா செல்ல விரும்பும் போது எதிர்பாராத விதமாக வினோத்துக்கு வயிற்று வலி வருகிறது .அதனை தொடர்ந்து மருத்துவ வாசம் நோயின் வாதை போன்றவை அவனைப் பற்றிய இருண்ட பக்கத்தை சமீபத்தாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சமேதராக வருவார்கள் என்று காத்திருக்கும் பெற்றோர்களுக்கு சடலமாக வரும் வினோத்தும் அதற்கு துணையாக வரும் சந்தித்தாலும் வரும் கதைதான் செர்ரி பிளாசம்.
தந்தையின் சொத்துக்களை விற்று வருவதற்காக கிராமத்துக்கு செல்லும் அருண் தன்னுடைய பெரியப்பாக்களை உறவுகளை கண்டு மகிழ்வான். நிலத்தை விற்பதற்கு ஏதுவாக குத்தகைதாரர்களிடம் பேசும் பெரியப்பா ...விலை படியாமலும் கிராமத்திய வாழ்க்கையில் சொத்து விற்பதற்கான அணுகும் முறைகளையும் அவன் கண்ணாரக் கண்டு எரிச்சல் அடைகிறான் என்பதுதான் அனுபவ பாத்தியத்தின் கதை
நாம் ஒருவரை கண்டு அறிமுகமாகும் போது அவர்களின் வாசனை பிடித்துப் போயிருந்தால் அவர்களை எப்போது பார்க்கும் போதும் அந்த வாசனையே நினைவுக்கு வரும்.சகுரா மலர்கள் மலரும் போது எழும் மெல்லிய மனம் நாசி உள்ளவர்களே சுகத்தை அறிந்தவர்கள் என இசுமியின் நறுமணக்கதை ஒரு நறுமணத்தை பற்றிய பிம்பத்தை நமக்கு கொடுக்கிறது. அந்த வாசனை எங்கெங்கெல்லாம் உள்ளது என்பதை தேடித்அலதேடி அலையும் நாயகனின் இறுதியில் அதனை ஒப்பிட்டுப் பார்த்து ஆசுவாசமடைகிறான்.
இது போன்ற மற்ற கதைகள் கிராமத்து பின்னணியிலும ஜப்பானிய பின்னணியிலும் எழுதப்பட்ட கதைகள் படிப்பதற்கு சுவாரசியமாகவும் புதிய அனுபவத்தை தரும் விதத்திலும் உள்ளன.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment