Reading_Marathon2024
#24RM050
Book No:39/100+
Pages:-286
உங்கள் விதியைக் கண்டறியுங்கள்
-ராபின் ஷர்மா
"வாழ்க்கை உங்கள் வாதத்தை கேட்பதில்லை. அது கவலைப்படாமல் தன் வழியே போகும். நீங்கள் வாழ்க்கை சொல்வதைக் கேட்க வேண்டும். உங்கள் வாதத்தை கேட்காது. உங்கள் வாதத்தை பற்றி கவலைப்படுவதில்லை."
கேள்விகள் எல்லோருடைய மனதிலும் இருக்கின்றன. ஆனால் அந்த கேள்விகளை கேட்டால் பதில் கிடைக்க சொல்லக்கூடிய நபர்கள் நம்மளுடைய அன்றாட வாழ்வில் மிகவும் குறைவு. அல்லது இதை கேட்டால் தவறாக நினைத்து விடுவார்கள். இதற்கான உண்மையான பதில் இதுவல்லவே என்று நம்மளுடைய தர்க்கம் அவர்களுடைய பதில் சொல்லலையும் புறக்கணித்து விடுகிறது .அதுபோன்ற சமயங்களில் சில புத்தகங்கள் வழியே நாம் தேடி கண்டடையும் பதில்கள் நமக்கானவையாக இருக்கின்றன. நாம் இத்தனை நாள் தேடியவைக் காண விடையாகவும் அவை கிடைக்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது .அதனால் தான் புத்தக வாசிப்பு
மிகவும் சிறந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த புத்தகத்தில் உள்ள சில கருத்துக்களும் அவ்வாறுதான் இருந்தன.
பொதுவாக நமக்கு கஷ்டம் வரும் நேரங்களில் நாம் பார்க்கும் உலகமே உண்மையானது என்று நினைக்கிறோம். அது தவறு. ஏனெனில் நாம் நம்முடைய நம்பிக்கை இழந்த கோணத்திலிருந்து பார்க்கிறோம் .நாம் சற்று தேறியதும் நமக்கு உலகம் நன்றாக இருப்பதாக தெரியும். நமக்குள்ளே மிகுந்த மகிழ்ச்சி பரவும் போதுதான் வெளி உலகமே அதை பிரதிபலிக்கும் என்பதை தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.
மகாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்வதை போல டார் என்பவனுக்கு ஜூலியன் மெண்டல் என்பவன் கற்பிக்கிறான்.
டார் என்பவனுக்கு ஜூலியன் மேண்டல் என்பவன் கேட்கும் கேள்விகளுக்கு வாழ்வியல் குறித்த தெளிவுகளை வழங்குகிறான். அதில் வெற்றி கண்ட மற்றும் நிறைவடைந்த மனிதர்கள் சிந்திக்க திட்டமிட ஆழ்ந்த நோக்கம் நேரத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் விழிப்புடன் இருக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நம்ப முடியாத விலைமதிக்க முடியாத பரிசு என எண்ணுகிறார்கள் என நேரத்தின் அவசியத்தை அவர் தெரிவிக்கிறார்.
அழகான வாழ்க்கை உருவாக்குவதில் ஆக்கபூர்வமான பெருமை முக்கிய பங்காகும் என காந்தியின் மேற்கோளை இதற்கு உதாரணமாக சொல்கிறார்." நீங்கள் செய்ய வேண்டிய வேலை எவ்வளவு முக்கியம் இல்லாததாக இருந்தாலும் பரவாயில்லை. அதை உங்களால் முடிந்தவரை நன்றாக செய்யுங்கள் .முக்கியமான வேலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவீர்களோ அதுபோல் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் சிறிய வேலைகளால் தான் உங்களை எடை போடுவார்கள் என்கிறார்". இதே போல தானும் அர்ப்பணித்து வாழ்க்கையில் தான் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சிறந்த மனிதராக சுயமரியாதை நம்பிக்கை உடையவர்களாக திகழ முடியும் என்று கேட்கிறான்.
சுய விழிப்புணர்வு பற்றி சொல்லும்போது ஏழு கட்டங்களாக சொல்கிறார், முதலாவதாக சுயநினைவு இல்லாமல் வாழ்க்கை வாழ்வதாகும். அதாவது ஓட்டுனர் இருக்கையில் உட்கார்ந்து தூங்குவதைப் போல் ஆகும் எதற்கு பொய்யாக வாழ்தல் என்று பெயர். இரண்டாவதாக உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று சரி இல்லை என்று தோன்றினால் புதிய ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். இது ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கு வழிகாட்டும் என்கிறார்.
மூன்றாவதாக வியப்பும் சாத்தியமும் என்பதாக இந்த கட்டத்தில் புதிய கண்களால் பார்க்கத் துவங்குகிறீர்கள். அதாவது பார்த்திராத உண்மையை இந்த உலகம் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என விரும்புவதை நம் மனக்கண்ணால் பார்க்க முடிகிறது. நான்காவது கட்டமாக பொய்யான வாழ்க்கை வாழ்வது என்பதை தாண்டி தெரிந்தெடுத்தல் என்னும் கட்டத்தில் உங்கள் சிறந்த சுயத்தை வெளிப்படையச் செய்து உலகத்தில் மாயைத் தாண்டி அளவற்ற வாய்ப்புகள் என்னும் உலகத்தை நீங்கள் உணர ஆரம்பிப்பது.
ஐந்தாவதாக மாற்ற மனிதனும் மறுபிறப்பும் இது மிகவும் சவாலான காலகட்டம் மிகப்பெரிய சுயத்தை உணரத் தொடங்கி முழு உலகமும் மாறத் தொடங்கும். மாற்றம் என்பது எளிதல்ல அது உண்மை ஆறாவதாக சோதனை என்பதாகும். நாடுபவர் பொக்கிஷத்தை அடைவதற்கு முன்பு ஒரு சோதனை சந்திக்க நேரிடும் .இதில் ஒன்று கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டாரா என்பதும், எதனை விரும்புகிறார் என்பதும் எதனை கைவிடுகிறார் என்பதையும், தேர்ந்தெடுக்கும் குழப்பமும் இதில் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏழாவதாக பெரிய விழிப்புணர்வு ஆகும். உங்கள் உண்மையான இயல்புக்கானவை எவையெல்லாம் என்று அவற்றையெல்லாம் நீங்கள் அடைவீர்கள். இது இயற்கையின் சக்தி இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்ததை இயற்றியவுடன் தொடர்பு நிலைக்கு திரும்பி வீர்கள் என்கிறார்.
உலகம் ஒரு பெரிய புத்தகம் .வீட்டை விட்டு வெளியே நகராதவர்கள் ஒரு பக்கம் மட்டும் படிக்கிறார்கள் என்பார் செய்ன்ட் அகஸ்டின். இதற்கு உதாரணமாக மலையேறும் கதையை சொல்கிறார் .சூரியன் மறைவிற்குள் மலை ஏறி இறங்க வேண்டும் என்பதனை நிர்ணயித்துக் கொண்டு ஏறியவன் கீழே இறங்கும்போது பயம் வருகிறது. சூரியன் மறைந்து விட்டால் இருள் வந்து வடும் என்று பயப்படுகிறாள். அவன் பயத்தின் காரணமாக சூரியனும் மெல்ல மெல்ல மறைவதாக தோன்றுகிறது.
கடைசியில் சூரியன் மறைந்து விட்டது. இப்போது அவன் இருளில் மாட்டிக் கொண்டான். பயம் வந்துவிட்டதால் அப்படியே உறங்கிப் போகிறான். பிறகு அடுத்த நாள் சூரிய ஒளி வந்த போது கீழே பார்க்கிறான் .அவன் இறங்க வேண்டிய தூரம் வெறும் ஐந்து அடி மட்டும்தான் இருந்தது. ஆகவே பயத்தை போக்க வேண்டும் என்று அவன் சிரித்துக் கொள்கிறான்.
*சுய வளர்ச்சிக்கு வலியும் துயரமும் சக்தி வாய்ந்த சாதனங்கள்
*ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வெவ்வேறு பலன்களை எதிர்பார்ப்பது
*துணிச்சலான செயல்களில் இறங்கும் போது பயம் தூண்டப்படும் .துணிச்சலுடன் இருப்பது உயிர்ப்புடன் இருப்பது போன்றதாகும்.
*நம்முடைய வாழ்வின் சிறந்த பகுதியை புகழ் மற்றும் பணத்தை துரத்துவதிலேயே செலவழிக்கிறோம்.
இந்த ஏழு கட்டங்களோடு தன்னை உணர்தலின் முக்கியமாக கடுமையாக ஐந்திணை குறிப்பிடுகிறார். அவை தினசரி காலை எழுந்து உங்களுக்கான நேரத்தை ஒதுக்குவது ,அதை புனிதமான நேரம் என்கிறார். புதிய உலகை உருவாக்குவதில் உங்கள் பங்கினை செலுத்துவதும், எவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு மேலாக உங்கள் வேலையில் உயற்சியை காட்டுவதும் உங்களுக்குத் தெரிந்த மிகவும் விரும்பத்தக்க மனிதராக மாறுங்கள் என்று.. இந்த புத்தகத்தின் இறுதியில் சொல்கிறார்கள்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment