Sunday, 8 December 2024

தனிமை துரோகங்களை மட்டுமே நினைவூட்டுகிறது, நம்மைவிட்டுப்போனவர்களை. நம் கனவுகளைச் சிதைத்தவர்களை, நம் தழும்புகளை நமக்குக் கொடுத்தவர்களை, நம் புண்களைக் கீறிவிட்டு அதன் குருதிவழியும் கோலத்தில் தன் ஓவியங்களைக் கண்டெடுத்துச் சென்றவர்களை. களைத்த நாளில் திறந்து நுழையும் கதவு, வெறுமை சூழ் அறை அதன் வெம்மையை நம்மீது பாய்ச்சுவதன் மூலம் நம் வலிகளை மேலெடுக்கிறது. ஒரு வலியை உருவாக்குவதைவிட, அதன் நினைவூட்டுவதுதான் பெரும் துயரம் இல்லையா?-லதாமகன்

No comments:

Post a Comment