Saturday, 14 December 2024
உதயகீதம் படத்தில் சிறையில் மோகன் இருக்கும் போது அவரை பார்க்க வரும் ரேவதி, சிறையின் வெளியே நின்று கொண்டு நிலாவை பார்த்து “பாடு நிலாவே தேன் கவிதை” என மோகனை மனதில் நினைத்து பாடுவார். அதற்கு பதில் சொல்ற மாதிரி மோகனும் “பாடு நிலாவே தேன்” என பாடுவார்.ஹீரோ சிறைக்குள் இருக்கும் போது அவர் கண்களுக்கு நிலா எப்படி தெரியும். அதனால அவர் பாடும் போது ஒரு “ம்” சேர்த்து “பாடும் நிலாவே தேன் கவிதை“ அப்படி இருக்கலாமே” என்று இசைஞானி சொல்ல.... கதாநாயகன் நாயகியை நிலவாக எண்ணி “பாடும் நிலாவே” என பாட... கவிஞர் மு.மேத்தா இசைஞானியிடம் “அண்ணே நீங்க சேர்த்த அந்த “ம்” வார்த்தை இந்த பாட்டை ஜம்முனு ஆக்கீடுச்சு” என்று கூறி மகிழ்ந்தார்... இந்த பாட்டை பாடிய பிறகே SPB இசை ரசிகர்களால் பாடும் நிலா என்று கொண்டாடப்பட்டார்..-படித்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment