Thursday, 23 November 2017

ஸ்ரீதர் பதிவுகள்

*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*

_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_

*நூல் அறிமுகம்:* 4⃣3⃣

*நூலின் பெயர்:* தமிழுக்கு நிறம் உண்டு
*நூல் ஆசிரியர் :** வைரமுத்து

*இது ஒரு கவிதை நூல்..*

*இந்த நூல் இரு வகைகளில் எனக்கு பிடித்த நூல்..*

*மரபு, புதுமை என இரு வகை கவிதைகளையும்  கலந்து தமிழ் என்ற மொழி இன்னும் தன் நிறத்தை இழக்காமல் இருப்பதை உணர்த்திய காரணத்தாலும்,*

*வைரமுத்துவின் கவிதை நூல்களிலேயே இந்த நூலில் இருந்து தான் அதிக கவிதைகள் திரையிசைக்கு எடுத்து கையாளப்பட்டது என்பதாலும்*

*இந்த நூல் எனக்கு பிடித்த நூல்..*

*30 கவிதைகள்..*

*" அழைப்பு" என்ற கவிதையின் முடிவு திகைக்க வைக்கும்..*

*" அயோத்திராமன் அழுகிறான் "  கவிதை மதவெறியருக்கு சூடு போடும்..*

*' பெயர் சொல்ல மாட்டேன் " கவிதை காதல் சோகத்தின் நீள அகலங்களை சொல்லும்..*

*" என்னோட ராவுகள் " கவிதை கற்புள்ள ஆண்களின் ரகசியம் சொல்லும்...*

*' உலகம் " கவிதை உலகின் இரட்டை நாக்கை வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்..*

*இப்படி ஒவ்வொறு கவிதையும் சிறப்பு வாய்ந்தது..*

*இந்த நூலின் உச்சம் என நான் கருதுவது வைரமுத்துவின் முன்னுரை..*

*தமிழ் இலக்கிய வரலாற்றை இத்தனை அழகாக 9 பக்கங்களில் கூற முடியுமா..*

*பிரமிக்க வைக்கிறார்..*

*முன்னுரை முடிவில் வைரமுத்து சொல்கிறார் :*

*எத்தனை வண்ணங்கள் பூசி பார்த்தாலும் தமிழின் மூல வண்ணம் அழிவதே இல்லை*

*காலத்தின் மழையால் - வெயிலால் தமிழின் நிறம் மங்குவதில்லை*

*ஆயுதங்களால் - அந்நிய கலாச்சார திணிப்பால் -  பிறமொழி உறவுகளால் தமிழ் தன்னிறம் திரிதலில்லை..*

*என்று முடிக்கிறார்...*

*இது உண்மை என்றே இந்த நூலை வாசிக்கும்போது தோன்றுகிறது..*

*வாசியுங்கள்..*
*சொக்கி போவீர்கள்..*

*பக்கம்:*160
*விலை:*ரூ 50
*வெளியீடு:* சூர்யா வெளியீடு

           _வாசிப்பை சுவாசமாக்குவோம்_

நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல்  🦋

#*ஹைக்கூ பெருநதி* -1⃣0⃣1⃣

பகுதி - 1

*ஹைக்கூ..*

*புரிதல் அறிதானவர்களுக்கு அது ஒரு புதிர்..*
*புரிந்தவர்களுக்கு அது ஒரு புதையல்..*
*விலகி நிற்பவர்களுக்கு அது ஒரு மாயம்..*
*விளங்கிகொள்பவர்களுக்கு அது மானிட நேயம்..*
*ஆர்வம் இல்லாதவர்களுக்கு அது வெறுமை..*
*ஆர்வமுடையவர்களுக்கு அது பொருண்மை..*

*ஹைக்கூ..*

*எளிமையால்,*
*கட்டுக்கோப்பால்,*
*அதிர்வுகளை ஏற்படுத்தும் படிமங்களால்,*
*மின்னலடிக்கும் உள்ளுணர்வுகளால்,*
*செறிவால்,*
*தன் மூன்றடிக்குள் அனுபவத்தை அளக்கும் ஓர் விசித்திரம்..*

     *மனிதனுக்கு புரியவைக்க*
     *சொற்களை தேடாதீர்கள்*
     *சொற்களை புரிந்து கொள்ள*
     *மனிதனை தேடுங்கள்*

*என்ற புகழ்பெற்ற ஸென் உரை ஹைக்கூவிற்கு பொருந்தும்..*

*1990 ம் ஆண்டு அகில உலக ஹைக்கூ போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை இது..*

*இதை எழுதியவர் டார்கோ பிளாஸஸின்..*

     *After the storm*
     *A boy wiping the sky*
     *From the table.*

     *புயலுக்கு பிறகு*
     *சிறுவன் ஆகாயத்தை துடைக்கிறான்*
     *மேசையின் மீதிருந்து*

*இந்த கவிதை புரிகிறதா ?*

                    *நாளை..*

          ஸ்ரீதர்
☘திண்டுக்கல் ☘

No comments:

Post a Comment