*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*
_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_
*நூல் அறிமுகம்:* 4⃣3⃣
*நூலின் பெயர்:* தமிழுக்கு நிறம் உண்டு
*நூல் ஆசிரியர் :** வைரமுத்து
*இது ஒரு கவிதை நூல்..*
*இந்த நூல் இரு வகைகளில் எனக்கு பிடித்த நூல்..*
*மரபு, புதுமை என இரு வகை கவிதைகளையும் கலந்து தமிழ் என்ற மொழி இன்னும் தன் நிறத்தை இழக்காமல் இருப்பதை உணர்த்திய காரணத்தாலும்,*
*வைரமுத்துவின் கவிதை நூல்களிலேயே இந்த நூலில் இருந்து தான் அதிக கவிதைகள் திரையிசைக்கு எடுத்து கையாளப்பட்டது என்பதாலும்*
*இந்த நூல் எனக்கு பிடித்த நூல்..*
*30 கவிதைகள்..*
*" அழைப்பு" என்ற கவிதையின் முடிவு திகைக்க வைக்கும்..*
*" அயோத்திராமன் அழுகிறான் " கவிதை மதவெறியருக்கு சூடு போடும்..*
*' பெயர் சொல்ல மாட்டேன் " கவிதை காதல் சோகத்தின் நீள அகலங்களை சொல்லும்..*
*" என்னோட ராவுகள் " கவிதை கற்புள்ள ஆண்களின் ரகசியம் சொல்லும்...*
*' உலகம் " கவிதை உலகின் இரட்டை நாக்கை வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்..*
*இப்படி ஒவ்வொறு கவிதையும் சிறப்பு வாய்ந்தது..*
*இந்த நூலின் உச்சம் என நான் கருதுவது வைரமுத்துவின் முன்னுரை..*
*தமிழ் இலக்கிய வரலாற்றை இத்தனை அழகாக 9 பக்கங்களில் கூற முடியுமா..*
*பிரமிக்க வைக்கிறார்..*
*முன்னுரை முடிவில் வைரமுத்து சொல்கிறார் :*
*எத்தனை வண்ணங்கள் பூசி பார்த்தாலும் தமிழின் மூல வண்ணம் அழிவதே இல்லை*
*காலத்தின் மழையால் - வெயிலால் தமிழின் நிறம் மங்குவதில்லை*
*ஆயுதங்களால் - அந்நிய கலாச்சார திணிப்பால் - பிறமொழி உறவுகளால் தமிழ் தன்னிறம் திரிதலில்லை..*
*என்று முடிக்கிறார்...*
*இது உண்மை என்றே இந்த நூலை வாசிக்கும்போது தோன்றுகிறது..*
*வாசியுங்கள்..*
*சொக்கி போவீர்கள்..*
*பக்கம்:*160
*விலை:*ரூ 50
*வெளியீடு:* சூர்யா வெளியீடு
_வாசிப்பை சுவாசமாக்குவோம்_
நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல் 🦋
#*ஹைக்கூ பெருநதி* -1⃣0⃣1⃣
பகுதி - 1
*ஹைக்கூ..*
*புரிதல் அறிதானவர்களுக்கு அது ஒரு புதிர்..*
*புரிந்தவர்களுக்கு அது ஒரு புதையல்..*
*விலகி நிற்பவர்களுக்கு அது ஒரு மாயம்..*
*விளங்கிகொள்பவர்களுக்கு அது மானிட நேயம்..*
*ஆர்வம் இல்லாதவர்களுக்கு அது வெறுமை..*
*ஆர்வமுடையவர்களுக்கு அது பொருண்மை..*
*ஹைக்கூ..*
*எளிமையால்,*
*கட்டுக்கோப்பால்,*
*அதிர்வுகளை ஏற்படுத்தும் படிமங்களால்,*
*மின்னலடிக்கும் உள்ளுணர்வுகளால்,*
*செறிவால்,*
*தன் மூன்றடிக்குள் அனுபவத்தை அளக்கும் ஓர் விசித்திரம்..*
*மனிதனுக்கு புரியவைக்க*
*சொற்களை தேடாதீர்கள்*
*சொற்களை புரிந்து கொள்ள*
*மனிதனை தேடுங்கள்*
*என்ற புகழ்பெற்ற ஸென் உரை ஹைக்கூவிற்கு பொருந்தும்..*
*1990 ம் ஆண்டு அகில உலக ஹைக்கூ போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை இது..*
*இதை எழுதியவர் டார்கோ பிளாஸஸின்..*
*After the storm*
*A boy wiping the sky*
*From the table.*
*புயலுக்கு பிறகு*
*சிறுவன் ஆகாயத்தை துடைக்கிறான்*
*மேசையின் மீதிருந்து*
*இந்த கவிதை புரிகிறதா ?*
*நாளை..*
ஸ்ரீதர்
☘திண்டுக்கல் ☘
No comments:
Post a Comment