Thursday, 23 November 2017

@மணி

நடக்கும் கால்களில்
வேகமும்

எதிர்ப்படுவோரின்
கரங்களிலோ
தோள்களிலோ
முட்டிக்கொண்டும்

கடக்கும் நபர்களின்
அசைவுகளிலும்

நகரும் பேருந்து
ஒலிப்பான்களின்
சத்தத்திலும்

பேருந்தினுள்ளே
ஒலிக்கும்
பண்பலையின் இரைச்சலிலும்

சத்தமின்றி
முட்டிமோதி
மௌனமாகிப் போகிறது

அழுக்குச் சேலை கட்டியிருக்கும்
அந்த யாசகக்காரியின்
மடிக் குழந்தை
அழுகை

– இ . இளையபாரதி

#பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்..!
                    

நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்..!”

#
          -  அறிவுமதி.

மிகவும் மோசமான வேலை
   தனக்குத்தானே
   ஒரு கோப்பை
   தேநீர் தயாரித்துக்கொள்வதுதான்..!”
      -  இளம்பிறை.

No comments:

Post a Comment