Thursday, 23 November 2017

@மணி

நான் பேச்சாளன் அல்ல
எழுத்தாளன் அல்ல,
நான் கருத்தாளன்!
-பெரியார்

விருப்பம்போல் ஆணியடிக்க
விடிய விடிய விளக்கெரிக்க
விருந்தினரை உபசரிக்க
முடியாத வாடகை வீட்டில்
வசிக்கலாம்,வாழமுடியாது
-யுகபாரதி

இராத்திரி
அப்பா மிச்சம் வைத்த
கஞ்சியைக் குடிக்க
பசியோடு காத்திருப்பேன்
அதுல.. மிக்சர் பொடியும்
எவனுக்கோ
வெட்டித்தள்ளிய
அஞ்சாறு முடிகளும் மிதக்கும்.

(கலைவாணன் இ.எம்.எஸ் எழுதிய "ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்" தொகுப்பிலிருந்து.)

#இருப்பதை வைத்து
சந்தோசப் படமுடியவில்லை
"கடன்"!

-மணி

#எல்லையற்றது
இந்த உலகத்தின் தீமை
எல்லையற்றது
இந்த உலகின் கருணை
-மனுஷ்யபுத்திரன்

#கூடி கூடி
பேசுவார்கள்
பிரிந்து போவதற்கு..
-மீரா

#வீரத்தால்  வென்றவர்களை விட.. துரோகத்தால் வீழ்த்தியவர்களே அதிகம்.
நாணயத்தால் உயர்ந்தவர்களை விட...
நயவஞ்சகத்தால்
மின்னியவர்களே  மிகுதி.
#வெ_இறையன்பு

No comments:

Post a Comment