கற்றதும் பெற்றதும்-57
*மணி
ஒரு மனிதனை ஆன்மிகம் எப்போது பற்றிக்கொள்கிறது?
நிறையப் பணமும் நிறைய பயமும் வரும்போது
-சுஜாதா
ஒரு விடுமுறை நாளில் பழைய வார நாளிதழ்களை அடுக்கிக்கொண்டிருக்கும்போது சில நல்ல கட்டுரை படிக்க வாய்க்க கிடைக்கும்.மு.மேத்தா சொல்வார் "பேப்பரை எடைக்கு போடும் போது உணர்கிறேன், படிக்காமல் விட்ட பயனுள்ள பக்கங்களை..!என்று. அப்படித்தான் மாத இதழில் இள.சிவபாலன் எழுதிய "வாழும் கலையும்-ஆன்மிக சந்தையும் கட்டுரை படித்தேன்.மிக இயல்பான மொழிநடையில் பின்னால் வரும் வாகனத்தை கண்ணாடியில் பார்ப்பது போல் இருந்தது.
"நாம் எதை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம் என நீங்கள் யோசித்தது உண்டா? என துவங்குகிறது இக்கட்டுரை.
"லடாக்கில் நடைபெறும் மருத்துவ கருத்தரங்கிற்கு சென்ற போது சந்தித்த நபரை பற்றி பகிர்வதுதான் கட்டுரை.
மது குடிக்கும் நண்பரின் முன் அமர்ந்து பேசும்போது,அவர் "வாழும் கலை,மகிழ்ச்சியை தேடிய பயிற்சி" என்று அச்சிட்ட ரசீதில் ரூ 99,999 பணம் செலுத்தியிருந்தார்.
மேலும் சொன்னார்..
" இந்த பிரபஞ்சத்தின் திறக்க முடியாத கதவுகளுக்குப் பின்னால் அதன் ரகசியம் இருக்கிறது. நாம் அதனை இந்த மெய்யுடன் தரிசிக்க முடியாது. நாம் இந்த உடலிலிருந்து லௌகிக வாழ்க்கையில் இன்னல்களில் இருந்து நம்மை பிரித்துக் கொள்ளாதவரை, நம்மால் தரிசிக்க முடியாது. ஆனால் நாம் அதை தேடிப் போக வேண்டும். ஏனென்றால் அந்த தரிசனம் அத்தனை பரவசமானது. ஒரு புல்லின் மீது நிற்கும் பனித்துளியைப் போல. நாம் நமது மெய்யுலகில் இருந்து பிரிந்து நிற்பதே நாம் அதை அடைவதற்கான ஒரே வழி". என்றார். எனக்கு கொஞ்சம் பரவசம் அடைந்தது போல் இருந்தது.
இந்த வாழ்க்கை சலிப்பைத் தரவில்லையா என்றார்.
ஆமாம் என்றேன்.பிறகு நான் இவ்வுலகை குடும்பத்தை ரசிக்கிறேன் என்றவுடன் சிரித்தார்.
இதைத்தாண்டிய ஒருதரிசனம் இருக்கிறது.அதுதான் ஆன்மிகதரிசனம்.எக்ஸ்டசி." ஒரு அனுபவத்தை பெறும் வரையில் நாம் அதன் மகத்துவத்தை உணருவதில்லை" என்றார்.புற வாழ்க்கையின் பற்றற்ற நிலையை சொல்லிக்கொண்டு விலையுயர்ந்த மதுவை குடித்துக்கொண்டு இருப்பது எனக்கு முரணாய் பட்டது.
ஓருவன் தனது இருப்பிற்கான அடிப்படைத் தேவைகளை எந்த தடையுமின்றி பெறும் போது அவன் மனம் அதனுடன் ஒரு தன்னிலை அடைந்து விடுகிறதா? நிச்சயமில்லை. அடுத்தடுத்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறான்.
#நடுத்தர வயதில் தேவைகள் பூர்த்தியானவுடன் வாழ்வதின் மீது சலிப்பு உண்டாகிறது.வாழ்வின் நோக்கத்தின்போது ஒரு கேள்விக்குறி ஏற்படுகிறது.இதன் மூலம் நமக்கிருந்த ஒப்பற்ற தைதியம்,பிரச்சனை களைவதின் மீது நமக்கிருந்த ஆற்றல் சுணங்கிப்போய் சூழ்நிலைகளை யாசிக்கத் தொடங்கிவிடுகிறோம். அப்போது நம்மைச் சார்ந்தவர்களுடன் இணங்கி வாழாமல் ஆன்மிக பிரச்சாரம், பதட்டம்,புறவாழ்க்கையின் இருப்பைச் சொல்லி,அதன் மீது தத்துவார்த்த கேள்வி எழுப்பி,அதற்கான பதில் ஆன்மிக தரிசனத்தை அடைவதில்தான் என பிரச்சாரம் செய்யப்படுகிறது.
# பதிலற்ற கேள்விகள், கண்மூடி நம்பிக்கைகள், சாகஸ வித்தைகள் ஏகாந்த மனநிலை என ஆன்மீகம் எப்போதும் ஒரு எளிய மனிதனின் ஆச்சரியமாக இருக்கிறது. தனது கேள்விக்கான பதிலும் ஆன்மீக மனநிலை வழியாக அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நம்மால் ஆன்மீகத்தை நோக்கி எந்த தர்க்கரீதியான கேள்விகளை எழுப்ப முடியாது. ஒரு அனுபவத்தை பெறும் வரையில் நாம் அதன் மகத்துவத்தை உணர்வது இல்லை என்பது போல.
#ஆன்மிகம் எப்போதும் ஒரு குழந்தையைப் போன்ற மனநிலையின் மீது ஆர்வத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்த காரணம் பகுத்தறிவின் மீதான பயம்.கேள்வி கேட்காமல் ஏற்பது.அப்படி தரிசிப்பது பரவசமானது என்பார்கள்.
#இதனைத்தான் விற்பனை பண்டம் போல் செய்கிறது.வணிகச் சந்தை.நண்பர் அந்த வாடிக்கையாளரில் ஒருவர்.
#நான் திரும்பி வரும்போது டாக்சியில் எறினேன்.மழை அப்பொது வந்து கொண்டிருந்தது. அப்போது முதிய பெண்மணி கார் உரசியதில் விழுந்ததால் படபடப்பாகி,அவரை தூக்கிவிட்டு, அவரையும் என் அனுமதி வாங்கி காரில் ஏற்றிக்கொண்டார்.நான் இரு நண்பர்களை ஒப்ப்ட்டுப்பார்த்தேன்.
" வாழும் கலையை தேடி அத்தனை மனிதர்களையும் நிராகரிக்கும் நண்பரின் வாழ்க்கையும், யாரோ ஒரு மனிதனின் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அத்தனை கரிசனமாக இருக்கும் இந்த டிரைவரின் வாழ்க்கையும் ஒன்றா? எது அழகானது? எது வாழ்வின் கலை?
நானும் டிரைவரிடம் வாழ்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு வாழ்வது கலையா சார்? வாழ்வது சாபம். என்றார். அவரது வார்த்தையில் போலித்தனம் இல்லை. உண்மை இருந்தது.
#கற்றதும் பெற்றதும்
முன்பு ஆன்மிகம் என்பது கோயிலுக்கு குடும்பமாய் செல்வது. இப்போது துறவு மனப்பான்மையுடன் செல்வது.அன்று சிறுதெய்வ வழிபாட்டில் அனைவரும் வரும் வகையில் திருவிழாக்கள் இருந்தன.கூடும் போது சோகங்களை பகிர்ந்து கொண்டோம்.இன்று கிழமைக்கொரு கோயிலுக்கு சென்றால்தான் கடவுளின் அன்புக்கு பாத்திரமாக முடியும். வாட்ஸ் அப்பில் ஷேர் செய்வது போல.
எதுவும் அதிகமாகும் போது நஞ்சாகிறது.சக மனிதனை நேசிப்பது குறைந்தது.மேல்தட்டு மக்களும்,வடநாட்டினர் கும்பிடும் சாமிதான் காப்பாற்றும். முப்பிடாதியோ,வழிவிட்ட அய்யனாரோ,
வேம்படி சாமியோ, பகவதி அம்மனோ,குலதெய்வம் என்ற முறையில் வைத்திருக்கிறோம்.இன்னும் சொல்லப்போனால் மெத்தப் படித்தவர்கள் இக்கடவுள்களை கைவிட்டு நீண்டநாளாகிறது. ஆன்மிகத்தில் கடவுளை நம்பும்வரை ஒன்றும் இல்லை. ஆன்மிகவாதியை நம்பும்போது பிரச்சனை வருகிறது.கைராசி டாக்டரைப் போல் கைராசி கடவுள்களும் வந்துவிட்டனர்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment