கற்றதும் பெற்றதும்-60
*மணி
இயல்பாக இந்திய மக்களிடத்தில் எவ்வளவு அழுத்த பட்டாலும் அவ்வளவு சீக்கிரம் எதிர்வினையாற்ற தலைப்படாத பண்பு உண்டு. சார்ந்திருக்கும் அமைப்பு அழுத்தும்போது அதற்கு
எதிர்வினையாற்ற மட்டுமல்ல
அது அழுத்துகிறது என்ற உணர்வதையே கூட தவிர்க்க விரும்பும் மனம். இந்த எதிர்ப்புணர்வின் காரணமாக கைவசமிருக்கும் குறைந்தபட்ச பிடிமானத்தையும் நிம்மதியையும் கூட பறித்துவிடுமோ எனும் அச்சம்.
எதிர்ப்பு உருவாக்கும் சின்ன அசெளகரியத்தைக் கூட அது விரும்புவதில்லை.
-சமஸ்
#யாருடைய எலிகள் நாம்?
-சமஸ்
சமஸ் எழுத்துக்கள் யாவும் மேற்காண் வரிகள் போல சொற்களை கத்தி போல் கூர் தீட்டி, இறுதியில் நம் தவறினையும் அமைப்பின் தவறினையும் தெள்ளத் தெளிவாய் சுட்டிக் காட்டுவார்.ஒரு கட்டுரையாளனின் பணி வெறுமனே புள்ளி விபரங்களை அடுக்குவதோ வர்ண ஜாலை வார்த்தைகளை பயன்படுத்தி குற்றம் சாட்டுவதோ அல்ல.மாறாக அக்கட்டுரைக்கு காரணம் சொல்லி அதற்கு தீர்வினை வரலாற்று அடிப்படையில் அலசி ஆராய்ந்து, தன்னுடன் சேர்ந்து மக்களையும் சிந்திக்கச் செய்து அணுகச் செய்வதாகும்.அதை தான் இப்புத்தகத்தின் கட்டுரை வழியே உணர்த்தியிருப்பார்.
#அரசியல்
ஒரு அரசியல் கட்டுரைகளை எழுத தேர்ந்த அனுபவமும்,ஆய்வு நோக்கிலான நுணுக்கமான பார்வையும் அவசியம்.வாசகர்களில் அரசியல் அறிவு சார்ந்த பலதரப்பட்டவர் இருப்பார்கள்.
அவ்வகையில் ஈழம் குறித்தும்,அன்றைய காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை வரலாற்று பின்புலத்துடன் சொல்லப்படும்போது முழுமை பெறுகிறது.பொருத்தமான மேற்கோளை தரும்போது அக்கட்டுரை மேலும் சிறப்பு பெறும். போராட்டம் குறித்து பேசும்போது இரோம் ஷர்மிளா வரையறுப்பவை "தீவிரம்,உறுதி,சுயநலமற்ற நீடிப்புத்தன்மை,தொலைநோக்கு. மேலும் ஒரு விஷயத்தை சேர்த்துக் கொள்ளலாம்:கள யதார்த்த அடிப்படையிலான சித்தாந்தம்.!
#ஆய்வு
ஒரு கட்டுரைக்கு முதன்மை தேவை கள ஆய்வு.காண்டாமிருகங்கள் பற்றிய குறிப்பில் இந்தியாவில் காண்டாமிருக எண்ணிக்கை அதிகம்.இதன் கொம்பிற்காக வேட்டையாடுவது அதிகம்.ஓட ஆரம்பித்தால் காடே புழுதி கிளம்பும்.2000 கி எடையில் 50கி.மீ வேகத்தில் ஓடும்.
இதை கொல்ல முதல் தோட்டா காலுக்கு,அடுத்து மார்புக்கு,பின் தலைக்கு என 3விதத்தில் கொல்லப்படுகிறது.பின் கோடரியால் கொம்பை வெட்டி எடுப்பது.என முழுக்க முழுக்க காண்டாமிருகத்தை விவரித்திருப்பார்
#கல்வி
"ஊழலுக்கு அடுத்தப்படியாக சமஸ் அதிகம் கவலைப்படுவது நம்முடைய கல்வி சூழல்பற்றி
கல்வி குறித்த பல்வேறு கட்டுரையில் கல்வியில் இவருக்கு இருக்கும் நாட்டம் புரிகிறது.கல்வியில் தனியார்மய கட்டுரையும்,அக்காலத்திய வகுப்பறை சூழல்களையும் விவரிக்கிறார்.ஜே.கே வின் தி ஸ்கூல் குறித்து எழுதும்போது
" சரியான கல்வியானது தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் போதே அதைவிட மிக முக்கியமான ஒன்றை சாதிக்க வேண்டும். அதாவது வாழ்வின் முழு பரிமாணத்தை உணரும்படி செய்ய வேண்டும் என்பார் ஜேகே. "போர்களற்ற அமைதியான உலகம் வேண்டுமென்றால் அது முதலில் போட்டிகளற்ற உலகமாக இருக்க வேண்டும்". ஒரு விளையாட்டு சுவாரசியமாக நீ விளையாட வேண்டும் என்றால் உன்னை எதிர்த்து ஆட ஆட்டக்காரன் வேண்டும் இதுதான் மாணவரிடம் அப்படி சொல்லி தரும் செய்தி.தி ஸ்கூல் முறையை பின்பற்ற சொல்கிறார்.(தமிழகத்தில் ஜே.கே வின் செயல்வழிக்கல்வி இருந்தது.ஆனால் அனைத்துப்பள்ளிகளுக்கும் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
#காலங்காலமாக அதிகாரத்தின் சகல வன்முறைகளையும் சாதாரண மக்கள் மீது பிரயோகப்படுத்திய பழகிய அதிகார வர்க்கத்தை விட்டுவிடுவோம்.தன்னை சுற்றியுள்ளோர் மீது எவ்வளவு அநீதிகள் பிரயோகப்பட்டாலும் கொஞ்சமும்,
சுரணையற்று,தன் வழி,தன் போக்கு என்று கடந்து கொண்டிருக்கும் நம்முடைய சமூகத்தை,உங்களையும் என்னையும் நம் குடும்பங்களையும் நினைத்து பார்க்கச் சொல்லுங்கள். அமைதிக்கு நாம் கொடுக்கும் மதிப்பு என்ன?
#அன்றைய காலத்தில் நடைபெற்ற வாச்சாந்தி.காவிரி,முல்லைப்பெரியாறு,சாதி குறித்த பார்வை, தாக்கரேக்களின் இந்தியா போன்ற சமூக கட்டுரைகளையும் தமக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார். கட்டுரைக்கு தேவையான சுவாரயஸ்யம் சுருங்கச் சொல்லுதலே.இதை தன் ஒவ்வொரு கட்டுரையிலும் தாரக மந்திரமாகவே செய்து காட்டியுள்ளார்
#அ.முத்துலிங்கம் பகிர்ந்திருப்பார்.. ஒரு நல்ல பத்திரிக்கையின் இலக்கணம் என்ன என புகழ் பெற்ற பத்திரிக்கையாளரிடம் கேட்டதற்கு அவர் "எழுதுவது சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும், எழுத்தில் உண்மை வெளிப்பட வேண்டும் என்றாராம்.இவரின் கட்டுரையில் இக்கருத்துகள் மிளிரும்.
#ரசித்தவை
*நட்ட பயிர்களே அம்புகளாக சரப்படுக்கையில் படுத்திருப்பதாக குறிப்பிடுவார் லா.ச.ரா.இது தற்போது கலைஞருக்கு பொருந்துவதாக குறிப்பிட்டிருப்பார்.
*உண்மைகளைவிடவும் கனவுகள், கற்பனைகள், புனைவுகளுக்கே மரியாதை கொடுத்து பழகிவிட்டோம்.
*எல்லா தவறுகளையும் மூடி மறைக்க தேசபக்தி என்ற ஒரு சொல் போதுமானது.
*வரலாறு என்பது வேறல்ல;கடந்து கொண்டிருக்கும் இந்த கணமும்தான்
*வரலாறு திரும்பவும் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது.முதல் முறை விபத்தாக, மறுமுறை சோகக்கதையாக-கார்ல் மார்க்ஸ்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment