நியாண்டர் செல்வன்


உங்கள் வெற்றி, அது உங்கள் பார்வையில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், பிறருக்குப் பெரிதாகத் தெரியாது.

உதாரணமாக, நீங்கள் ₹10,000 ஊதிய உயர்வு பெற்றீர்கள் என்றால், அது உங்கள் வாழ்க்கையில் பெரிய செய்தியாக இருக்கலாம். ஆனால் பிறருக்குப் பெரிதாகக் கவலை இல்லை.

நீங்கள் அதை மிகப்பெரிய விருந்தாகக் கொண்டாடினால், வந்தவர்கள் உணவுக்காக வருவார்கள் — உங்கள் மகிழ்ச்சிக்காக அல்ல. சிலர் பொறாமையாகவும் பார்க்கலாம்.

ஆகவே, உங்கள் வெற்றிகளைப் பிறருடன் பெருமையாக பகிர்வது, அவர்கள் மனத்தில் பொறாமையை மட்டும் விதைக்கும்.

உங்கள் வெற்றிகள் சத்தமில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் பேச வேண்டியதில்லை — உங்கள் வெற்றி பேச வேண்டும்.

மற்றவர்கள் தான் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது என்பதை அறிய வேண்டும்.

மற்றவர்கள் தான் நீங்கள் செல்வந்தரானதை உணர வேண்டும்.

மற்றவர்கள் தான் நீங்கள் நல்ல நிலையில் வாழ்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும்.

நீங்கள் சொல்லி அவர்களை நினைவுபடுத்த வேண்டாம். அவர்கள் தானாகவே ஆச்சரியப்பட வேண்டும்:
“இந்த மனிதர் சத்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்… ஆனால் இத்தனை பெரிய வெற்றியை அடைந்திருக்கிறாரா?”

அதுவே உண்மையான வெற்றியின் அடையாளம்.

நீங்கள் இல்ல; உங்கள் வெற்றியே பேச வேண்டும்.

-நியாண்டர் செல்வன்

Sunday, 27 April 2025

நன்றி இம்ரான்


மனிதனின் மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் நான்கு ஹார்மோன்கள் மிக முக்கியமாக செல்வாக்கு செலுத்துகின்றன. 

அவைகளாவன;
1- Endorphins 🥰
2- Dopamine 🥰
3- Serotonin 🥰
4- Oxytocin 🥰

🥰 எண்டோர்பின்
நாம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது 
விளையாட்டுக்களில் ஈடுபட்ட பிறகு நாம் கொடுத்த முயற்சிக்கு ஈடாக நமது உடல் இந்த ஹார்மோனை சுரக்கிறது. அதனால் தான் உடற்பயிற்சி செய்த பிறகு நாம் ஒரு வகை மகிழ்ச்சியை உணர்கிறோம். மேலும் சிரிப்பும் எண்டோர்பின்களை சுரக்க ஒரு சிறந்த வழியாகும்.

எண்டோர்பின் ஹோர்மோன் நமக்குக் கிடைக்க, நாம் அன்றாடம் 30 நிமிட உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கான விஷயங்களைப் பார்த்து மகிழ்வது அவசியமாகும். 

🥰 டோபமைன்
நாம் நம் வாழ்க்கை என்ற தொடர் பயணத்தில், நம்மில் ஒவ்வொருவரும் 
பெரியதாகவோ , சிறியதாகவொ ஏதாவது ஒன்றை சாதிக்கிறோம். இத்தகைய சாதனைகளை நாம் உணரும் போது நமது உடல் டோபமைன் என்ற ஹார்மோனை சுரக்கிறது. நாம் செய்யும் பணிகளுக்கும் முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள் கிடைக்கும் போது இந்த ஹார்மோன் சுரந்து நமக்கு மகிழ்ச்சியை உண்டு பன்னுகிறது. 

இதனால்தான் வீடுகளில் பணி புரியும் பல இல்லத்தரசிகள் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதற்குக் இந்த ஹார்மோன் சுரக்காமை காரணமாகும். ஏனென்றால் அவர்கள் நாளாந்தம் செய்யும் பணிகள் மற்றும் முயற்சிகளுக்காக சரியான பாராட்டுக்கள் கிடைக்காததால் இந்த ஹார்மோன் அரிதாகவே அவர்களிடம் சுரக்கின்றது. 

🥰 செரோடோனின்
இந்த ஹார்மோனானது நாம் பிறர் நலம் 
நாடும் போதும், அவர்களுக்காக நம்மால் முடிந்த உபகாரங்களை செய்யும்போதும் சுரக்கிறது. இதனால்தான் நம் இயற்கை உலகுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ள ஏதாவது ஒன்றை செய்து முடிப்பதோடு மனமகிழ்ச்சியை உணர்கிறோம். 

அதனால்தான் நாம் பிறருக்குக் ஏதாவது ஒன்று கற்றுக் கொடுக்கும் போது அல்லது ஷோசியல் மீடியாவில் ஏதாவது பயனுள்ள ஒரு பதிவை பகிரும் போது அல்லது ஒருவருக்கு ஏதாவது உதவிக் கரம் நீட்டும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். 

4 ஆக்ஸிடாஸின்🥰
இந்த ஹார்மோனானது நாம் நமது அன்புக்குரிய நண்பர்களை சந்தித்து,  ​​கைகுலுக்கும் போது,அல்லது அவர்களை ​​கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் சுரந்து வந்து மகிழ்ச்சி தருகிறது. அதனால்தான் நாம் வீட்டில் நம் மனைவியை, மற்றும் குழந்தைகளை அன்பாக கட்டிப்பிடித்து அரவணைக்கும் போது அலாதி மகிழ்ச்சி அடைகிறோம். 

மேலே உள்ளவற்றின் சுருக்கம்:

🎴 எண்டோர்பின் ஹார்மோன் கிடைக்க நாங்கள் தினமும் ஏதாவது உடற்பயிற்சி செய்தாக வேண்டும். 

🎴 டோபமைன் ஹார்மோன் கிடைக்க ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது சிறிய சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும். 

🎴 செரோடோன் ஹார்மோன் கிடைக்க ஏதாவது ஒரு வகையில் நாம் பிறர் நலம் நாடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 

🎴 ஆக்ஸிடாசின் ஹார்மோன் கிடைக்க மனைவி, குழந்தைகளை அன்பாக 
அரவணைக்க வேண்டும். 

நன்றி:இம்ரான்

Thursday, 24 April 2025

பொமட்ரோ உத்தி


எலான் மஸ்க் வாரம் ஒன்றுக்கு 100 மணிநேரம் வேலை செய்வதாக பரவலாக சொல்லப்படுகிறது. இந்த 100 மணிநேரத்தில் ட்விட்டர், ஸ்பேசெக்ஸ், டெஸ்லா, போரிங் கம்பனி என நாலு கம்பனிகளை நிர்வாகம் செய்கிறார்

நேர மேலாண்மைக்காக "பொமெடெரோ உத்தி" (Pomodoro Technique) எனும் உத்தியை பயன்படுத்துவதாக சொல்கிறார் மஸ்க். இத்தாலியில் "பொமோடோரோ" என்றால் "தக்காளி" என்று அர்த்தம். அதனால் நாம் இதை "தக்காளி உத்தி" என்றே அழைப்போம்

பொமோடோரோ உத்தி என்பது 1980களின் பிற்பகுதியில் ஃபிரான்செஸ்கோ சிரில்லோ என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு நேர மேலாண்மை முறையாகும்.

ஃபிரான்செஸ்கோ சிரில்லோ எனும் இத்தாலிய மாணவர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, நேரத்தை திறமையாக நிர்வகிக்க ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தக்காளி வடிவ கடிகாரம் ஒன்றை பயன்படுத்தினார். அதன் மூலம் தன்னுடைய வேலை நேரத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து வேலை செய்தார்.

அவர் தக்காளி வடிவ டைமரைப் பயன்படுத்தியதால், இந்த முறைக்கு "பொமோடோரோ டெக்னிக்" என்று பெயர் வந்தது.

தக்காளி உத்தி எப்படி வேலை செய்கிறது?

முதலில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். இது ஒரு வீட்டுப்பாடமாக இருக்கலாம், ஒரு அலுவலக வேலையாக இருக்கலாம் அல்லது வேறு எந்த வேலையாகவும் இருக்கலாம்.

செல்போனில் டைமரை 25 நிமிடங்களுக்கு செட் செய்துவிட்டு, அந்த வேலையில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இந்த 25 நிமிடங்களுக்கு எந்தவிதமான இடையூறும் இருக்ககூடாது (உதாரணமாக, மொபைல் நோட்டிஃபிகேஷன்களை பார்க்ககூடாது. பிரவுசிங் செய்யகூடாது). இந்த 25 நிமிட வேலை நேரத்திற்கு ஒரு "பொமோடோரோ" என்று பெயர்.

25 நிமிடம் வேலை செய்த பிறகு, 5 நிமிடம் கட்டாயமாக இடைவெளி எடுங்கள். இந்த இடைவேளையில் நீங்கள் எழுந்து நடக்கலாம், தண்ணீர் குடிக்கலாம் அல்லது வேறு ஏதாவது ரிலாக்ஸாக இருக்கக்கூடிய விஷயங்களைச் செய்யலாம். வேலையைப் பற்றியே யோசிக்காமல் இருப்பது நல்லது.

அவ்வளவுதான். இதன்பின் வேலையை பொறுத்து அடுத்த பொமடரோவை மீண்டும் துவக்கலாம். இப்படி ஒரு நாலைந்து பொமடரோக்களை செய்தால், ஒரு இரண்டுமணிநேரத்திலேயே பெரிய விசயங்களை சாதிக்க முடியும் என்கிறார் மஸ்க்

இப்படி 20 நிமிடம் மட்டுமே வேலை செய்வதால், கவனச்சிதறல் குறையும். வேலையைச் சின்னச்ின்ன பகுதிகளாகப் பிரிப்பதால், குறித்த நேரத்துக்குள் முடிக்க முடியும்.

2006ல் சிரில்லோ இந்த உத்தியை "பொமடரோ உத்தி" எனும் பெயரில் மின் நூலாக இலவசமாக வெளியிட்டார். அது இருபது லட்சம் முறை தரவிறக்கபட்டது. அதில் ஒருவர் எலான் மஸ்க்

தக்காளி உத்தியை பயன்படுத்தினால் நாம விரைவில் பெரிய தக்காளி தொக்கா ஆகிடலாம். என்ன கடிகாரத்தை செட் பண்ணியாச்சா?

~ நியாண்டர் செல்வன்

Tuesday, 22 April 2025

புத்தகம் 54


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-54
பக்கங்கள் -252
நாள்-30

சமணமும் தமிழும் 
-மயிலை சீனி வேங்கடசாமி

மயிலை சீனி வேங்கடசாமி அவர்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று.. இரு ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பித்து இருந்தேன். அந்த தேடலில் அவரைப் பற்றிய அறிந்து கொண்ட தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இளம் வயதிலேயே ஆசிரியர் பணியில் சேர்ந்தாலும் நாள் தோறும் தன்னை புதுப்பித்துக் கொண்டும் தமிழுக்கு தொண்டு செய்தும் நூல்கள் எழுதியும் வெறுமனே புனைவுகள் போல் அல்லாமல் ஆய்வுக் கட்டுரைகள் நோக்கில் ஒவ்வொரு புத்தகமும் அவருடைய கை வண்ணத்தில் வெளிவந்துள்ளது. இந்த நூலில் சமணத்தின் வாழ்வும் அது சந்திக்க நேர்ந்த தாழ்வும் நம் நெஞ்சை நெகிழச் செய்யும் விதத்தில் உரிய சான்றுகளோடு.. நூலை படிப்பவர்கள் சமணம் குறித்த தன்னுடைய பார்வையை இன்னும் விசாலப்படுத்திக் கொள்ள உதவும் வகையில் இருக்கிறது.

சமண மதம் ஏன் மக்களிடையே பரவியது எனில் அவை கொலை வேள்விகளை எதிர்த்தது, சாதி வேற்றுமை பாராட்டுவதில்லை ,பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது இல்லை, தாய் மொழிக்கு மட்டும் உயர்வழிக்கும் வகையில் அதன் போதனைகள் இருக்கும் .ஏழை மக்களுக்கான உணவு, அடைக்கலம் மருந்து, கல்வி என நால்வகை தானங்களை அவை அளிக்க முன் வந்தது. குறிப்பாக இன்று நாம் படிக்கும் பள்ளிக்கூடம் சமணர்களின் சிந்தனையில் உதித்ததாகும். அக்காலத்தில் மதச் சண்டைகள் மூலமாக மன்னர்களை முதலில் மதம் மாற்றிய பின்பு மக்களை மாற்றினர். வன்முறைகளை ஏவி விட்டனர். பக்தி இயக்கம் தோன்றியதால் சமண மதம் வீழ்ச்சி அடைவதற்கான காரணங்கள். மேலும் வன்முறை ஏவி விட்டு சமணர்களை மதமாற்றம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர். இதனால் சமண மதத்தில் உள்ள கருத்துக்கள் பலரம் இந்து மதத்தில் கலந்து விட்டன எனும் வியப்புக்குரிய செய்திகளையும் நாம் அறிய முடிகிறது.

சமணமும் தமிழும் என்னும் என் நூலை எழுதி முடிக்க 14 ஆண்டுகள் ஆயின என்று மயிலையார் தெரிவிக்கிறார். இந்த நூலில் வரலாற்று ஆய்வு நூல்கள், இலக்கிய ஆய்வு நூல்கள், சமயமும் தமிழும் ஆய்வு, கலையியல் ஆய்வு, கல்வெட்டு ஆய்வு பொது நூல்கள் என பல்வேறு தலைப்புகளில் சமணமும் தமிழும் எவ்வாறு சிறப்புக்கு விளங்கின என்பது குறித்த தகவல்களை ஆய்வு நோக்கில் தருகிறார்.

சமணர் என்பதற்கு துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி துறவு பூண்டவவரே வீடு பேறு அடைவார். என்று இந்த மதம் கூறுகிறது. எனவே துறவு எனப் பொருள்படும் சமணம் என்ற பெயர் இந்த மதத்துக்கு சிறப்பு பெயராக வழங்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜெயித்தவர் வென்றவர் அவர்களின் தீர்த்தங்கரங்களுக்கு ஜீனர் என்னும் பெயரும் உண்டு. ஜுனரை கடவுளாக உடைய மதம் ஜெயின மதம் எனப்பட்டது. சமண சமய கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே அருகனை வணங்குவோர் ஆருகதர் என கூறப்படுகிறது. சமண கடவுள் பற்றற்றவர் என அதன் உட்பிரிவுகள் முதல் கொண்டு அந்த மதம் குறித்த தகவலையும் நமக்குத் தருகிறார்.

சமண சமயத்தின் தத்துவமாக உயிரினும் ஜீவன் பற்றி கூறுகிறது. உயிர்களை கடவுள் படைக்கவில்லை. நல்வினை தீவினை என்னும் இரு வினைகளை செய்து அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை துய்ப்பதற்கு நான்கு கதிகளில் பிறந்து இறந்து உலர்ந்து திரிவதும் இரு வினைகள் அறுத்து பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும் என்ற ஒரு தத்துவத்தை கூறுகிறார். அதே போல உயிர் அல்லது எனும் அஜீவன் எனும் பொருள்படும்படி உள்ள பகுதிகளில் ஐந்து அஜுவப் பொருள்களின் இயல்பை விளக்குகிறார்.

சமணர்களின் ஒழுக்கமாக ஐந்து மா விரதங்களைப் பற்றிய கூறுகளில்.அகிம்சா பரமோதர்ம என்பது சமணர்களின் அடிப்படையான தர்மம் ஆகும். அது அகிம்சையை போதிக்கிறது. இரண்டாவதாக தீமை பயக்கும் சொற்களை கூறாமை ,அதாவது வாய்மை என்று கூறுகிறார். எவ்வளவு அற்பமான பொருளாய் இருந்தாலும் அதை அதற்குரியவர் கொடுத்தார் என்று எடுத்துக் கொள்ள மனதினாலும் நினையாதிருத்தலை கல்லாமை என்கிறார். பிரம்மச்சரியம் தமிழர்களின் முக்கிய கூறுகளில் ஒன்று அதேபோல முற்றும் துறத்தல் பொருளை பற்றற துறத்தல் எனும் அவாவறுத்தல் என ஐந்து கூறுகள் தமிழர்களின் ஒழுக்க நிலைகளை நமக்கு தெரிவிக்கிறது.

வடநாட்டில் தோன்றிய சமண சமயம் தமிழகத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ்நாட்டில் சமண சமயம் பரவ செய்யப்பட்டது. பாண்டிய நாட்டில் காணப்படும் மதுரை மாவட்டத்தில் காணப்படும் பிராமி கல்வெட்டு எழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை .வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த பன்னீராயிரம் சமணத் துறவிகள் மைசூரில் தங்கி மதக் கொள்கைகளை பரப்பினர். சந்திரகுப்த மௌரியன் அரசன் காலகட்டத்தில் தான் இலங்கையில் பாண்டுகாபய அரசனும் ஒரே காலத்தில் அரசாங்கத்தால் இலங்கையிலும் மதம் பரவியது. இவ்வாறு சமண சமயம் தென் தமிழகத்திலும் பரவியது குறிப்பிடத்தக்கது. அதற்கு சான்றாக கல்வெட்டுகள் குகை ஓவியங்கள் சமணர் மலைகள் இன்றும் தமிழகத்தில் இருப்பது உண்மையாக இருக்கிறது.

சமயப் போர் என்பது பிராமணர்களுக்கும் சமணர்களுக்கும் இடையில் ஏற்பட்டது .சோழநாட்டில் கௌசிகன் எனும் வைதீக பார்ப்பனன் அதித்தன் பசுவின் கூறிய கொம்புகளால் குத்தி கிழித்து விட்டது. அப்போது உதவி வேண்டி சமணப்பள்ளி சென்ற போது.. அவர்கள் கொலை வேள்வி செய்பவனும்  வைதீக பார்ப்பனனுக்கு உதவி செய்ய உடன்படாமல் தங்கள் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பி விட்டனர். இதிலிருந்து அங்கு பகைமை ஆரம்பித்தது. அதற்கு பின்பு பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமய பகை எல்லாருக்கும் அறிந்தது. குண்டலகேசி நூலை பௌத்தர் இயற்றியதும் பௌத்த சமயத்தை கண்டிக்க நீலகேசி எனும் நூலை சமணர் இயற்றியதும் பௌத்த சமய சண்டைகளுக்கு காரணமாக அமைந்தன இவ்வாறு சிறு சண்டைகள் மத சண்டைகளாக மாறியது.

சைவம் வைணவம் வந்த பின்பு சமணத்தை அழித்து ஒழிப்பதற்கான வழிகளை கண்டறிந்தனர். கொள்கை ரீதியாக எதிர்கொண்டனர் என பல்வேறு காரணங்களை அடக்கி சமண மதம் பிற மக்களிடையே பரவும் வாய்ப்பை குறைத்ததால் சமண மதம் வலிமை குன்றியது. சமணர் பள்ளி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கெங்கு உள்ளது என்பதனை பற்றிய முழு விவரமும் தரப்பட்டுள்ளன. 

சமணம் குறித்து அறிய முற்படும் வாசகர்களுக்கு ஆகச்சிறந்த நூலாக இந்த நூல் விளங்குகிறது. இடையே வரும் சங்க பாடல்கள் தமிழர்கள் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றாய் சொல்லி விளக்கமும் கொடுத்து.. இந்த நூல் ஒரு ஆய்வுக்குரிய சிறப்பு நூலாக மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு பக்கங்களிலும் அவருடைய ஆய்வும் உழைப்பும் தெரிகிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

நிஜ உலகில் எல்லோருக்கும் துயரம் இருக்கிறது, பல்வேறு சோதனைகளைத் தாண்டி வருகிறோம். ஆனால், நமக்குக் கிட்டிய அனுபவங்களைத் தொகுக்கும்போது ஒரு பொதுப் பார்வையே (generalised perception) உருவாகிறது. நாம் பெற்ற அனுபவப் பாடம் தனித்தன்மை வாய்ந்ததாக இல்லை. நமது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் மந்தையில் கொண்டுபோய் அடைத்துவிடுகிறோம். நம்முடைய துக்கம், பரிவு, வெறுமை, மகிழ்ச்சி என அனைத்து வகையான உணர்வுகளும் கூட்டத்தால் தீர்மானிக்கப்பட்டதாக ஆகிவிடுகிறது. எதனால் இப்படி நிகழ்கிறது? வாசிக்கும் பழக்கம் இல்லாததால்தான். மனத்தளவில் நாம் தனிமைப்பட்டுக் கிடப்பதால் சுயமான சிந்தனை முறை பழக்கமாகாமல் ‘கூட்டு எண்ணம்’ நம்மை ஆக்கிரமிக்கிறது. ஒரே சமயத்தில் உள்ளுக்குள் தனியர்களாகவும் சிந்தனைத் தளத்தில் பெருந்திரளாகவும் முரண்பட்டு வாழ்கிறோம்.இதனை மீறி ஒரு தாவலையோ தனித்த கண்ணோட்டத்தையோ அடைவதற்கு நாம் நிறையப் படிக்க வேண்டும். காட்சி ஊடகம் முற்றுகையிட்டிருக்கும் சமகாலத்திலும் நூல்களே அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கின்றன. மானுட குலத்தின் சிறந்த மனங்கள் சிந்தித்தவை அத்தனையும் நூல் வடிவிலேயே இன்னமும் கொட்டிக் கிடக்கின்றன. மனத்தின் தனிமையைப் போக்கி அந்தச் சிறந்த மனங்களுடன் மானசீக உரையாடலை மேற்கொள்வதன் வழியாகவே நமது எண்ணங்களில் புதிய மாற்றங்களைப் புகுத்த முடியும். அதன் மூலமாக நாம் பெறுவது எல்லையற்ற அறிவை, மேதைகளின் அனுபவ சாரத்தை, நமது அனுபவங்களைப் புத்திளம் பார்வையில் அலசுவதற்கான தெளிவை, மேலான வாழ்க்கையை!மரித்துப்போன பேராளுமைகளுடன் விவாதிப்பதற்கான வாய்ப்பைப் புத்தகங்களே வழங்குகின்றன. அறிவியல், வரலாறு, மெய்யியல், செவ்வியல் இலக்கியம் என எந்தத் துறையானாலும் கடந்தகாலத்துடனான உறவும் முரணுமே இன்றைய சமூகத்தின் அச்சாணி. அவற்றின் வழியாகவே நம் அறிவும் திறனும் கூர் தீட்டப்படுகிறது. நம்மைப் பகுத்தறிவதற்கும் உலகின் போக்குகளைப் புரிந்துகொள்வதற்கும் மற்றமையை விலக்காது அணைத்துக்கொள்வதற்கும் நாம் பல வகையான மனங்களை அறிந்தாக வேண்டும். இனம், மொழி, எல்லை கடந்து அவர்தம் குரலுடன் ஒத்திசைவைக் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்கு இந்த உலகம் மேலும் பண்பட்டதாக மாறவேண்டும். நாம் விழிப்புணர்வு அடைய வேண்டும். இதையெல்லாம் சாதிப்பதற்கு ஏற்ற எளிமையான வழி, குறைந்தபட்சம் நாம் எடுத்து வைக்கக்கூடிய முதல் அடி, வாசிப்பு மட்டுமே. பட்டை தீட்டப்பட்ட அறிவும் தேடலுமுள்ளவன் அதில் திளைப்பான்.-கோகுல்அனைவருக்கும் உலகப் புத்தகத் தின வாழ்த்துகள்!

புத்தகம் 50


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-50
பக்கங்கள் -330
நாள்-28

நல்லவை நாற்பது
-இரா மோகன், நிர்மலா மோகன்

நல்ல ஆராய் காண்பதும் நன்றே நல்லார் சொல் கேட்பதும் நன்றே என்பார்கள் நல்ல விஷயங்களை நாம் தேடித்தேடி செல்லும்போது தான் நல்ல விஷயங்கள் மென்மேலும் நம்மை வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த நூலில் தான் வாசித்த சந்தித்த சிந்திக்க வைக்கும் கட்டுரைகள் பலவும் எழுதி உள்ளார் இரா மோகன அவர்கள். இந்தக் கட்டுரைகள் யாவும் மனிதனின் ஆளுமை வளர்வதற்காகவும், கல்வி குறித்தும், சிந்தனை குறித்தும் ,நகைச்சுவை குறித்தும் உள்ள 40 குறும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அருளாளர்கள், தமிழ் சான்றோர்கள், கவிஞர்கள், வெள்ளித்திரை வித்தகர்கள் ,தமிழ் உலா, விழுமிய பேழை என ஆறு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒருமுறை உடல் நலக் கறைவு காரணமாக அண்ணன் சபாபதியால் சொற்பொழிவாற்றச் செல்ல முடியவில்லை. அதற்கு மாற்றாக தன் தம்பியை சென்னையில் வாழ்ந்த சோமு என்ற செல்வரின் வீட்டில் பெரிய புராணத்தில் ஒரு பாடலை மூன்று மணி நேரம் விரிவுரை ஆற்றினார். சொற்பொழிவை கேட்ட அனைவரும் மெய்மறந்து அருமை என்று பாராட்டினர் .தொடர்ந்து சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். படிக்காத தன் தம்பிக்கு எவ்வாறு இவ்வாறு வியத்தகு ஆற்றல் வந்தது முருகப்பெருமான்தான் நம்முடைய தம்பியாக வந்து பிறந்துள்ளார் என்று எண்ணினார் அண்ணன். அந்தத் தம்பி தான் வள்ளலார் அவர்கள் 12 ஆம் வயதில் முறையான ஞான வாழ்க்கையை தொடங்கினார்.

ஒரு கருத்தை எடுத்துக் கொள் அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காணும் அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. உடலில் உள்ள அனைத்து பாகங்களும் அந்த ஒரு கருத்தே நிறைந்து இருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்து விடு. இதுதான் வெற்றிக்கு சிறந்த வழி என்கிறார் விவேகானந்தர் .அச்சமே மரணம் அச்சத்துக்கு அப்பால் நீ போக வேண்டும் என்பது விவேகானந்தர் வலியுறுத்திய கருத்துகளில் முக்கியமானது. இவ்வாறு இளைஞர்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வ சிந்தனைகளை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ரோமானிய பேரரசர் மார்க்ஸ் அரேசியின் ஆத்ம சிந்தனை என்ற நூலை தமிழில் ராஜாஜி அவர்கள் மொழி பெயர்த்தார்." திடீரென்று ஒருவர் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் உடனே தயங்காமல் உள்ளதை உள்ளபடியே இதை நினைத்தேன். இது என் மனதில் உள்ள எண்ணம்.. என்று எளிதாக சொல்லக் கூடிய வகையில் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறருக்கு சொல்ல தகாத எண்ணங்களை விட்டொழிக்க வேண்டும் என்பது ராஜாஜி மொழி பெயர்த்த திறனுக்கு சிறப்பாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

ஆங்கில சொற்பொழிவாளர்கள் போல தமிழில் பிறவி சொற்பொழிவாளர்களாக உணரச் செய்தவர்களை திருவிக்கவும் ஒருவர் மேடைப்பேச்சுகளையும் தந்தை என இவரை சொல்லலாம் ஒட்டுமொத்த அவையினரையும் தம் உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்லும் அளப்பரிய ஆற்றல் அவரிடம் இருந்ததாக பாராட்டுரை தெரிவித்துள்ளார். நகைச்சுவை வேறு என் நையாண்டி வேறு என்பார் கி ஆ.பெ விசுவநாதம் அவர்கள் .நகைச்சுவை அறிஞர்களை மகிழ்விக்கும் நையாண்டி மற்றவர்களை மகிழ்விக்கும் .ஒருவர் கூறியது நகைச்சுவையான நையாண்டியா என்பது அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தவர்கள் அறிஞர்களா, மற்றவர்களா என்பதை வைத்து அறிந்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.

சுரதா குறித்து பெருமாள் முருகன் அவர்கள் தெரிவித்த கருத்து.. "தெரியாத ஒன்றை உணர்த்த நன்கு தெரிந்த ஒன்றை சொல்லி விளக்க தோன்றியது தான் உவமை .சுரதா நன்கு தெரிந்த ஒன்றுக்கு யாருக்குமே தெரியாத ஒன்றை உவமையாக்குவார். அறிய செய்திகளை உவமையாக்கி உவமைக்கு உரிய இலக்கணத்தை மீறியவர் என்பதாலேயே அவருக்கு பட்டம் மிகவும் பொருந்துகிறது என்று கூறுகிறார்.

நேரு அவர்கள் பஞ்சசீலக் கொள்கையை நினைவூட்டுவது போல் பட்டுக்கோட்டையார் தம் திரைப்பட பாடல்களில் பெரிதும் வலியுறுத்தி பாடி இருக்கும் கொள்கைகள் ஐந்து அவை. 
"அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டை தொட்டிட வேண்டும், உழைத்தால் தான் பற்றாக்குறையை ஒழிக்க முடியும், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, தனி உடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்திட வேண்டும், நல்லவர்கள் ஒன்றாய் இணைந்திட வேண்டும எனத் திரைப்படப் பாடல்களில நல்ல கொள்கைகளை வகுத்து பின்னால் வரும் பாடல் ஆசிரியருக்கு முன்னுதாரணமாய் விளங்கி இருப்பார் நமது பட்டுக்கோட்டையார் அவர்கள்.

இயல்பான நகைச்சுவை உணர்வினை புதுக்கவிதை ஒன்றில் பெ சிதம்பரநாதனின் மாமனாரும் சிலப்பதிகாரமும் கவிதையை சுட்டிக் காட்டுகிறார். அதில் கோவலன் கள்வன் என குற்றம் சாட்டப்பட்டு கொலை உண்டதும் பாண்டியன் மாண்டதும் கண்ணகி விண்ணுலகை சென்றதும் மாதவி மணிமேகலையுடன் துறவு பூண்டதும் என துயரம் எல்லாம் சொல்லிக் கொண்டு வந்த போது மாமனார் தன் மருமகனிடத்தில் இப்படி விளக்கினாராம். எல்லாம் எதனால் என்று மருமகன் இடத்தில் மாமனார் விளக்கினார் 
"மனைவியின் நகையை பெற்றதால் தானே?" ஆயிரம் தான் இருந்தாலும் நகை மாமனார் அரும்பாடு பட்டு தேடிய செல்வத்தில் செய்து போட்டது மாமனாரின் பார்வையே தனிப்பட்டது தன் என புதுக்கவிதியில் புதிய சிந்தனையை தொட்டிருப்பார்.

கலைவாணர் என்பவர் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் கற்றுக் கொடுத்தவர் என்று எல்லாரும் சொல்கிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு கருத்தினை இங்கே பதிவிடுகிறார். கலைவாணர் பெண்கள் கூட்டம் ஒன்றில் பேசும் போது நீங்கள் அனைவரும் ஒவ்வொரு பூ வைத்துள்ளீர்கள்.. அதனால் பூவையர் என்றும் சொல்வார்கள். இந்த பூக்கள் எல்லாம் இன்று வைத்தால் மாலை வாடி விடும். ஒரே ஒரு பூ வாடாமல் வளரும் அது என்னவோ? என்று கேட்டதும் அனைத்து பெண்களும் ஒரே குரலில் சிரிப்பு என்றனர். கலைவாணர் அதுதான் இல்லை. இந்த பூ எப்போதும் நிற்காமல் தடைபடாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் பூ சேமிப்பூ என்றார். பெண்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்களில் சேமிப்பும் ஒன்று என்று வலியுறுத்த இதனை கூறியிருப்பார்.

இந்நூல்களில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒன்றரை பக்கத்துக்கு மிகாமல் இருக்கும். ஆனால் அது தலைப்பு கேற்ற செய்தியை தாங்கி இருக்கும். கேள்விப்படாத அரிய தகவல்களை தொகுத்து தந்திருப்பார் ஆசிரியர் இரா மோகனும் பேராசிரியர் நிர்மலா மோகனும்.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

B-12


நாய், பன்றி போன்றவை கழிவை உண்பது ஏன்?

உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத சமயம் மிருகங்கள் கழிவை உண்பது வழக்கம். நகர்புறத்தில் இயற்கையான உணவு கிடைக்காத நாய்கள், பன்றிகள் ஆகியவை கழிவை உண்பதை காணலாம். சிம்பன்சிகள் மாதிரியானவற்றுக்கும் இவ்வழக்கம் உண்டு. இதன் மூலம் இவற்றுக்கு கிடைக்கும் முக்கிய வைட்டமின்களில் ஒன்று பி12

வைட்டமின் B12 என்பது நரம்பு மண்டலம், மூளையின் செயல்பாடு மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி ஆகியவற்றிற்கு இன்றியமையாத ஊட்டச்சத்து. இது இல்லாமல் தூக்கமின்மை, நினைவுச் சிதைவு, மனச்சோர்வு, நரம்பியல் கோளாறுகள், ரத்தஹீனம் (அனிமியா) போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.

இந்த B12 பாக்டீரியாக்களால், குறிப்பாக விலங்குகளின் பெருங்குடலில் இயற்கையாகவே உருவாகிறது. ஆனால் மனிதர்களில் இது உருவாகும் இடமான பெருங்குடல், அதை உறிஞ்சும் சிறுகுடலின் பின் பகுதியில் இருப்பதால், நம்மால் உற்பத்தி செய்யப்படும் B12 உடலில் உறிஞ்சப்படாமல் கழிவாக வெளியேறுகிறது. அதனால், நமக்குத் தேவையான B12-ஐ உணவின் வழியாகவே பெற வேண்டிய நிலை உருவாகிறது.

B12 உற்பத்திக்கு தேவையான பாக்டீரியாக்கள் தாவரங்களில் இயங்குவதில்லை. எனவே காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற தாவர உணவுகளில் B12 இயற்கையாக இல்லாது போகிறது.

ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகள் புல் மேயும் போது அதனுடன் கலந்திருக்கும் பூச்சிகள், சிறுநீர், மற்ற விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றில் இருந்து B12ஐ பெறுகின்றன. அதேபோல் நாய், பன்றி, சிம்பன்ஸி போன்றவை B12 பற்றாக்குறையைத் தவிர்க்க, இயற்கையாகவே உள்ள கழிவுகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருப்பதும் இதனால்தான்.

விலங்குகள் உணவின் வாயிலாக பெறும் B12, சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு இரத்தம் வழியாக உடலின் பல பகுதிகளில் பரவுகிறது. இது தசைகள், குறிப்பாக கல்லீரல் போன்ற உறுப்புகளில் சேமிக்கப்படுகிறது. எனவே, இறைச்சி மற்றும் கல்லீரல் போன்றவை B12-ன் மிகச் சிறந்த இயற்கை ஆதாரங்களாக உள்ளன.

மாடுகளில் B12 பால் வழியாகவும், கோழிகளில் B12 முட்டையின் உற்பத்தி செயல்பாட்டில் கலந்து சேர்வதாலும், பால் மற்றும் முட்டையும் B12ஐ தரக்கூடிய இயற்கையான வழிகளாகக் கருதப்படுகின்றன. 

ஆனால் வெறுமனே பாலை மட்டும் நம்புவது சைவ உணவினருக்கு போதாது. ஏனெனில் ஒரு நாளுக்கு தேவையான அளவு பி12 பெற ஒருவர் ஒரு நாளுக்கு குறைந்தது 750 மில்லிலிட்டர் பால் பருகவேண்டும். இது காரியசாத்தியமில்லாத விசயம்.

முழுமையான சைவ உணவினை பின்பற்றுபவர்கள், குறிப்பாக வீகன்கள் (பால் மற்றும் முட்டையையும் தவிர்ப்பவர்கள்), B12 பற்றாக்குறைக்கு அதிக ஆட்பட்டிருப்பார்கள். எனவே இவர்கள் B12 செறிவூட்டப்பட்ட உணவுகள் (fortified foods) அல்லது சப்ளிமெண்ட்கள் மூலம் தேவையை நிரப்ப வேண்டியது கட்டாயம்.

முன்நூற்றாண்டுகளில் மக்கள் மாசுபட்ட ஆறு, குளங்களில் இருந்து குடிநீரை பருகியதால், கழிவுகள், பூச்சிகளின் உடல் ஆகியவை கலந்த மாசுபட்ட நீர் வழியாக B12ஐ குறிப்பிட்ட அளவுக்காவது பெற்றிருந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் நீர் சுத்திகரிப்புமுறையால் அது சாத்தியமில்லாமல் போகிறது..

ஆக:

B12 என்பது நரம்பியல் மற்றும் இரத்த சுழற்சி ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் ஒரு இன்றியமையாத ஊட்டச்சத்து. இது இயற்கையாக விலங்கு உணவுகளில்தான் காணப்படுகிறது. சைவ உணவினை மட்டுமே பின்பற்றுபவர்கள், குறிப்பாக வீகன்கள், சப்ளிமெண்ட்கள் அல்லது B12 செறிவூட்டப்பட்ட உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். 

~ நியாண்டர் செல்வன்

Sunday, 20 April 2025

புத்தகம்-45


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-45
பக்கங்கள் -353
நாள்-27

தெரிந்த ரகசியங்கள்
-மஹோத்ரயா ரா

கவனிக்காமல் விடப்பட்ட நேற்றைய சவால்கள்தான்... இன்றைய நாளின் பிரச்சனை!!

மஹாத்ரியா ராவின் *Most and More* எனும் தெரிந்த ரகசியங்கள் புத்தகம் ஒரு அற்புதமான வாழ்வியல் சுய முன்னேற்ற நூல். இது வழக்கமான "செய்ய வேண்டியவை" பட்டியலை விட ஒரு கதை மூலம் பாடங்களை வழங்குகிறது. தன்னை உயர்த்திக் கொள்வதன் மூலம், இப்பூவுலகை உயர்த்த முயலும் என்பதை சொல்லி துவங்குகிறது.

முதலில் நாம் யார் நம்மை எவ்வாறு உணர்வது எனும் பொருளில் துவங்குகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பாரதி எனும் கதாபாத்திரத்தின் வழியே வாழ்வியல் உண்மைகளை புரியவைக்கிறார்."வாழ்க்கையில் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன: 'ஒன்று, உங்கள் விருப்பு வெறுப்புகளை உங்கள் வாழ்வின் நோக்கத்திற்கு அடிமையாக்கிவிடுவது அல்லது, உங்கள் வாழ்வின் நோக்கத்தை உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு அடிமையாக்கிவிடுவது' என்பது போல்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் பணியிடத்திலும் மேன்மைத்துவம் என்பது தொட்டுவிடும் தூரத்தில் தான் என்பதை சதுரங்கத்தில்வரும் சிப்பாய் பகடை காய் ஒரு நாள் ராணியாக மாறும் வல்லமை உடையதை  மேற்கோளாய் சொல்கிறார்.

எளிய மொழி சிக்கலான கருத்துகளை எளிய கதைகள் மூலம் விளக்குகிறார். எண்ணங்களே சிறந்த செயல்களுக்கான விதைகளாக அமைகின்றன. பள்ளி பருவம் கடந்து நீண்டநாள் கழித்து சந்திக்கும் போது..சராசரி மாணவர் பலர் வாழ்வில் உயர்ந்த இடத்தை அசைந்திருப்பார்கள். மற்றவர்களுக்கு ஆச்சர்யம் தாளாது. யார் வாய்ப்பை பயன்படுத்துகிறாரோ அவர்களே வெற்றி அடைகின்றனர்."என்னால் செய்ய முடியும்" என்று நான் நம்பும்போது, அதன்மீது நான் தீவிர நம்பிக்கை கொள்ளும்போது, 'அதை எப்படிச் செய்ய வேண்டும்' என்பது தானாக வெளிப்படுகிறது. ஏதோ ஒன்றை நம்மால் செய்ய முடியும் என்று நம்புவது, அதைச் செய்வதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் செயலில் நம் மனத்தை முடுக்கிவிடுகிறது என்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தனிப்பட்ட பாடத்தைக் கொண்டுள்ளது, இது வாசகரை சிந்திக்கத் தூண்டுகிறது.நிகழ்வதை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் அனுபவம்," என்ற ஆல்டோஸ் ஹக்ஸ்லி. இந்த அனுபவம் தான் நம்மையும் மற்றவர்களையும் வேறுபடுத்தும் கருவி.இதனை நல்விதமாய் அணுகுபவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.. இல்லாதவர்கள் வெறுமனே என்க்கு மட்டும் ஏன் இப்படி என எண்ணி க்டக்கிறார்கள்.நிகழ்வுகள் கடவுளின் பொறுப்பு..அனுபவம் என்பது மனிதனின் பொறுப்புதான்.

"எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும்போது எவரொருவராலும் நேர்மறையாகச் சிந்திக்க முடியும். ஆனால், விஷயங்கள் சரியாகப் போய்க் கொண்டிருக்காதபோதுதான் நாம் சரியான . நமது சிந்தனையைச் செம்மையாக்குவது என்பது நமது வாழ்க்கையைச் செம்மையாக்குவதற்கான உறுதியான வழி. விஷயங்கள் தவறாகப் போய்க் கொண்டிருக்கும்போது சரியாகச் சிந்திப்பது அதைவிட முக்கியம்," என்று கூறிகிறார்.

நேரந்தவறாமையும் ஆழமான நம்பிக்கையும் மிகவும் முக்கியம்.ஒவ்வொரு முறை நீங்கள் வாக்குத் தவறும்போதும் அடுத்தவருடைய ஆழ்மனத்தில் நீங்கள் ஒரு சந்தேகத்தை உருவாக்குகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வாக்குறுதி தகர்க்கப்படும்போதும் அந்த ஆழ்மன சந்தேகம் உருவாக்கப்படுகிறது. மனித மனத்தின் பெரும் பகுதி ஆழ்மனமாகவும், ஒரு சிறு பகுதி வெளிமனமாகவும் இருப்பதால், விழிப்புணர்வு நிலையில் எல்லாமே சரியாக இருப்பதாகத் தோன்றினாலும், ஆழ்மனத்தில் சந்தேகம் இருப்பவர்களின் உறவுகள் ஒருபோதும் ஆழமான உறவுகளாக உருவாகாது.ஆகவே ஆழமான நம்பிக்கை உருவாக நாநயம் அவசியம்.

மனிதர்கள் மட்டுமே இறப்பைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், எனவே வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும்" போன்ற வரிகள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன 

நூறு ரூபாயின் மதிப்பு நூறு ரூபாய்தான். ஆனால் ஒருமணிநேரத்தின் மதிப்பு ஒருவன் அந்த ஒருமணிநேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தது..எனகூறி நேரத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறார். நேரத்தை முதலீடு செய்யாமல் நீங்கள் எந்த உறவையும் தக்க வைக்க முடியாது. மேலும் " ஒருவருடைய சிந்தனையைப் பற்றிச் சிந்திப்பதுதான் 'கற்றுக் கொண்டுள்ளவற்றை மறக்கக் கற்றுக் கொள்வ'தற்கு அடித்தளமாக அமைகிறது.நம்மை பற்றி மட்டும் சிந்திக்காமல் பிறரின் சிந்தனையை நம் வாழ்க்கைக்கும் பயன்படுத்துவது மேம்படுத்துவது பற்றி எடுத்துரைக்கிறார்.

*நீங்கள் உங்கள் கண்களுக்கு முன்னால் வளர்வதுதான் மாபெரும் பெருமிதம். உங்கள் கண்களுக்கு முன்னால் வீழ்வதுதான் மிக மோசமான பின்னடைவு

*இக்கணங்கள் நீ கொண்டாடுவதற்கானவை

*"வெற்றி ஒருபோதும் உன் அகங்காரத்திற்குத் தீனி போடக்கூடாது. மாறாக, அது எப்போதும் உன் பொறுப்புணர்விற்குத் தீனிபோட வேண்டும்.

*"நிபுணத்துவம் காலப்போக்கில் வரும், ஆனால் நீ எந்தவொரு வேலையிலும் போதுமான நேரம் நீடிப்பதில்லை. துல்லியம் காலப்போக்கில் வரும், ஆனால் எந்தவொரு செயல்முறையையும் நீ போதுமான காலம் கடைபிடிக்க விரும்புவதில்லை. கச்சிதம் காலப்போக்கில் வரும், ஆனால் மேலோட்டமான சிறப்பில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

தொழில், குடும்பம், ஆரோக்கியம், ஆன்மீகம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணுதல். மற்றவர்களுக்கு உதவுவது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.  சூழ்நிலைகளுக்கு எப்படி நேர்மறையாக நோக்குவது என்பதை விளக்குகிறார்.தினசரி வாழ்க்கை சவால்களுக்கு நடைமுறைத் தீர்வுகளையும்,ஆழ்ந்த தத்துவங்களை எளிதாகப் புரிந்துகொள்ள வைக்கிறது. 

வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. இது வெறும் கோட்பாடுகளை விட, நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய பாடங்களை வழங்குகிறது."இது ஒரு விளக்கு போன்றது, இருட்டான நாட்களில் ஒளியைத் தரும்"

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 19 April 2025

தருணம்


தருணம்

தயங்கித் தயங்கி வருகிறாய்
அலுப்போடே அமர்கிறாய்
பெருமையடித்துக்கொள்வதாக நினைத்துவிடக் கூடாதென்று
உன் சாதனைகளைச் சலிப்போடு சொல்கிறாய்  என் 
கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதுபோல்
மிகைப்பரிவு காட்டுகிறாய்
எப்போதையும்விட அன்பாய் இருப்பதாய் என் வாழ்வியல் நெருக்கடிகளுக்காக நெகிழ்கிறாய் இருப்பினும்
உன்னிடம் கை நீட்டிவிடாதவாறு
எதிர்பாராது உனக்கு வந்த கஷ்டங்களை
எடுத்துரைக்கிறாய் வக்கற்ற 
வாழ்வின் நிதர்சனங்களைவிட
கொடுமையானது 
கையேந்திவிடுவானோ என்று
எச்சரிக்கை கொள்பவனை எதிர்கொள்வது இத்தகைய 
தருணத்தை என்ன 
செய்து கடப்பது என் நண்பனே.

-நீலகண்டன் முனுசாமி

Friday, 18 April 2025

புத்தகம் -41


#30நாள்வாசிப்புப்போட்டி

#25RM055

புத்தகம்-41

பக்கங்கள் -238

நாள்-26

நம் ஆரோக்கியம் நம் கையில் 

-கு.கணேசன்

இளமையின் ஆரோக்கியத்தையும் ஒருமுறை எழுந்தால் மீண்டும் பெறுவதற்கு அரிது என்பார்கள். இந்த ஆரோக்கியத்தை இளமையிலேயே நல்ல முறையில் பாதுகாத்தால் முதுமை வரை நலமாய் வாழலாம் என்று இந்த நூல் விளக்குகிறது. தனக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லாதிருத்தல் பாவம் என்ற பைபிள் வசனத்திற்கு ஏற்ப மருத்துவர் கு. கணேசன் அவர்கள் சாதாரண மக்களும் பயன் பெறும்வகையில் தன்னுடைய மருத்துவ அறிவை மிக எளிமையாக விளக்குவதில் திறன் வாய்ந்தவர்.

 இந்த நூலும் மருத்துவ அறிவை சாதாரண மக்களுக்கு புகட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

மனித உள்ளுறுப்புகளில் உள்ள பகுதிகளை பற்றிய சுவையான தகவல்களை தாங்கி 28 தலைப்புகளில் இந்நூல் விவரிக்கிறது. மனித உறுப்புகளில் ஒவ்வொன்றும் முக்கியமானது அதில் முதன்மையானது இதயம் என்பார்கள். ஒரு வருடத்தில் 31 லட்சத்தி 59 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பம்பு செய்கிறது. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை தான் தற்காலத்தில் நோய்கள் அதிகம் தாக்குகின்றன. அவை வராமல் தடுப்பதற்கு அதனைப் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். அந்த வகையில் ரத்தக்குழாய் அடைப்பு நெஞ்சு வலிக்கு மார்பு வலிக்கு உண்டான வித்தியாசம் உடனடி மாரடைப்புக்கான காரணங்கள் என ஒவ்வொன்றாக இப்பகுதி அலசுகிறது.

சமீப காலங்களில் நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் அவருக்கு இறப்பு ஏற்பட்டதாக சொல்வதை நாம் கேள்விப்படுகிறோம். அந்த நுரையீரல் தொற்று எவ்வாறு ஏற்படுகிறது? நுரையீரல் நோய்க்கான மூல காரணங்கள் என்னென்ன? அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் உணவு பழக்கங்கள் பற்றி இப்பகுதி சொல்கிறது.

இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பென்சின் என்சைமுகம் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது இரைப்பையிலும் முன் சிறு குடலிலும் உள்ள நியூக்கஸ் படலம் அலட்சியுற்று வீங்கி சிதைவடையும். இதை இரைப்பை அழற்சி என்கிறோம். பசி குறைவு, குமட்டால், புளித்த ஏப்பம், வாந்தி முதலியன இதன் அறிகுறிகளாக உள்ளன. இதை கவனிக்க தவறினால் இரைப்பை புண்ணாக மாறிவிடும் என்கிறார். அடுத்ததாக அல்சர் என்னும் பகுதியும் இதில் விவரித்திருக்கிறார்.

கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கண்ணில் ஈரப்பசை இருக்க வேண்டும். இதற்கு தான் இமைகள் அடிக்கடி மோடி திறக்கின்றோம். பொதுவாக ஒரு நிமிடத்தில் 12 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றுகிறவர்கள் ஐந்து முறை தான் சிமிட்டுகிறார்கள். இதனால் கண்கள் வறண்டு விடுகின்றன சோர்வடைகின்றன. எரிச்சல், உறுத்தல் தலைவலி போன்ற தொல்லைகள் வருகின்றன. இதற்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ரோம் என்று பெயர். இதனை தவிர்க்க 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தள்ளி இருக்கின்ற பொருளை 20 வினாடிகளுக்கு பார்க்க வேண்டும் அல்லது அடிக்கடி இமைகளை இமைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தருகிறார்.

ஜலதோஷம் என்பது வைரஸ் தாக்குதலால் நடைபெறுகிறது. இதனை குணப்படுத்த நேரடி மருந்து இல்லை. இது தானாகவே குணமடைந்து விடும். இதனால் தான் ஜலதோஷம் என்பது 'மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களிலும் மருந்து சாப்பிடாவிட்டால் ஒரு வாரத்திலும் குணமாகும்' என்று சொல்வார்கள். இதற்கு அடுத்த கட்ட விளைவுகளை தலைவலி காய்ச்சல் போன்றவற்றை மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். பாக்டீரியா தொற்று காரணமாக ஜலதோஷம் ஏற்படுமானால் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் மூக்கு சளி ஒழுகும். இதற்கு ஆன்டிபயாட்டிக் சிகிச்சை உதவும் என்கிறார்.

காதுக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே நாம் பட்ஸ் வச்சு தான் முயல்கிறோம். இவ்வாறு பட்ஸ் எடுத்து குறும்பியை அகற்ற முயற்சித்தால் குறும்பி மேலும் உள்ளே தள்ளிவடும். தவிர வெளியே வராது. ஆகவே பட்ஸ் மற்றும் இதர சாவிகளை காதுனுள் நுழைக்க வேண்டாம் என்கிறார். பூச்சி எறும்பு ஏதேனும் காதினுள் சென்று விட்டால் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சில சொட்டுக்கள் விட்டால் பூச்சி இறந்து விடும் பிறகு சில சொட்டுக்கள் தண்ணீர் விட்டு தலையை சாய்த்தால் பூச்சி வெளியில் வந்து விடும் என்கிறார். காய்ச்சி என்னை கண்டிப்பாக காதலர் ஊற்றக்கூடாது என எச்சரிக்கிறார்.

பொதுவாக பெண்களுக்கு முடி வளர்வது மூன்று பருவங்களில் நடைபெறுகிறது .அனாஜன் என்பது ஒரு முடியானது தினசரியாக அரை மில்லி மீட்டர் நீளத்துக்கு வளர்கிறது .இந்த வளர்ச்சி மூணு முதல் ஏழு வருடங்கள் வரை நீடிக்கும். இதை தீர்மானிப்பது பரம்பரையில் வரும் மரபு அணுக்கள் .அடுத்தது கேட்டாஜன் என்ற பருவம். இதில் முடி இரண்டு வாரங்களுக்கு உதிர ஆரம்பிக்கும். மூன்றாவது பருவம் டீலாஜன் இது முடி ஓய்வெடுக்கும் பருவம். உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். தலையில் இருக்கும் முடியின் ஆயுட்காலம் 94 வாரம். வயதானவர்களுக்கு 17 வாரங்களுக்கு கூட குறைந்துவிடும் என்கிறார். தினசரியாக சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. பெண்கள் தலை சீவும்போது 20 முடிகள் வரை கழிந்தால் கவலைப்பட வேண்டாம். இதற்கு மேல் முடி உதிர்வது இருந்தால் அதை கவனிக்க வேண்டும் என்கிறார். பொதுவாக முடி உதிர்வது ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது.

மூட்டு தேய்மானத்தை அறிவதைப் பற்றி சொல்லும்போது சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு எழுந்து நில்லுங்கள் மூட்டு பிடிப்பது போல் இருக்கிறதா? கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள் அந்த பிடிப்பு விட்டது போல இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு மூட்டு தேய்மானம் ஆரம்பமானது. மூட்டு தேய்மானம் வயதினை போல் அதை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப் போடலாம். உடலுக்கு ஏற்ற எடையை பராமரிப்பது மிக முக்கிய பங்கு வைக்கிறது. புரதச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் எலும்புகளை பலப்படுத்தலாம் என ஆலோசனை சொல்கிறார்.

ஒரு சாமானிய மக்கள் அன்றாடம் கடந்து செல்லும் விஷயங்களை அதற்கான மருத்துவ காரணங்களை கூறி எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இயல்பாக நமக்கு சொல்லித் தருகிறார். ஒவ்வொரு உறுப்புகளை பற்றியும் அறிய முடிகிறது. அதன் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள முடிகிறது. புதிதாக ஒரு விஷயம் தெரிந்து கொள்ளும்போது அந்த புத்தகத்தின் மேல் ஒரு மதிப்பு வருகிறது நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday, 15 April 2025

புத்தகம் 34



#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-34
பக்கங்கள் -274
நாள்-22

முரண்சுவை
-நடிகர் ராஜேஷ்

நடிகர் ராஜேஷ் பன்முக தன்மை படைத்தவர். தான் படித்த செய்திகளை தனக்குள் வைத்துக் கொள்ளாமல் தான் பேசும்போதெல்லாம் ஒவ்வொரு புதிய தகவல்களையும் செய்திகளையும் தருபவர். அவருடைய புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தது. ஏனெனில் அவர் கோணத்தில் பார்க்கும் ஆளுமைகள் மிக வித்தியாசமாக இருந்தனர். ஒரு மனிதனுக்கு நான்கு விதமான அறிவுகள் வரவேண்டும் என்று பெரியவர்கள் சொல்ல அவர் கூறுகிறார். ஒன்று படித்த அறிவு, இரண்டு நாம் பார்த்த அறிவு, மூன்று பிறர் மூலம் கேட்ட அறிவு ,நான்கு அனுபவ அறிவு .இந்த நான்கு வழிகள் வரும் அறிவால்தான் நம் வாழ்க்கை ஓரளவுக்கு சீராக கொண்டு செல்ல முடியும் எதிலும் சரியான முடிவு எடுக்க முடியும் என்று முன்னுரையில் கூறுகிறார்.

சுதந்திரம் கிடைத்த பின்பு பாராளுமன்றத்தில் ராஜாஜியின் படத்தை திறந்து வைத்த நேரு தன்னால் அப்போது ராஜாஜியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்வதில் நான் வெட்கம் கொள்ளவில்லை ஏனெனில் ராஜாஜியால் பலன் தரும் எதிர்காலத்தை சிந்தனை செய்ய முடிந்தது என்று கூறுகிறார். ஒருமுறை ராஜாஜி முதல்வராக இருந்தபோது குடிசை இழந்த ஊர் மக்கள் ராஜாஜியின் காரை நிறுத்தி முப்பது ரூபாய் வழங்கியிருக்கிறீர்கள் ஆனால் இருவரும் அதிகாரிகள் எங்களுக்கு தருகிறார்கள் என்று கூறினார். அதற்கு ராஜாஜி அதனை மேற்பார்வையிட மேலும் ஒரு அதிகாரியை நியமித்தால் உங்களுக்கு 15 ரூபாய் தான் வந்து சேரும் என்ற இந்த நிதர்சனத்தை சொல்லி இருக்கிறார்.

சட்டைப் பையில் எப்போதும் ராஜினாமா கடிதத்தை வைத்திருப்பார் ராஜாஜி. ஜின்னாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸில் அப்போதே குரல் கொடுத்தவர், குலக்கல்வித் திட்டம் சுதந்திரா கட்சி என அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே வரும் போது 1962 ஆம் ஆண்டு தனது எண்பத்தி மூன்றாம் வயதில் அமெரிக்கா சென்று இறங்கிய உடன் அதிபர்  கென்னடி இவரை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றது ஆச்சரிய தகவல்களாய் இருந்தது.

எந்தத் துப்பாக்கியால் யூதர்களின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து கொண்றாரோ அதேபோல் ப்ரீட்டா எனும் பிஸ்டலின் மூலம் தன்னை மாய்த்துக் கொண்டார்.
பெர்லினிலிருந்து 10 கி.மீ தொலைவில் ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பதை அறிந்த இட்லர் தன்னை 200 லிட்டர் பெட்ரோல் ஊற்றி எரிக்கும் படி ஆணையிட்டார். ஆனால் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக 195 லிட்டர் பெட்ரோல் தான் கிடைத்தது என்பது போன்ற அறியாத தகவல்கள் இதில் இருக்கிறது.

காமராஜரை பற்றி அறியாத பல விஷயங்கள் சொன்னதோடு தன்னை தோற்கடித்த சீனிவாசனின் திருமணத்திறகு நேரில் சென்று வாழ்த்தியவர்தான் காமராஜர்.
 நடிகர் ராஜேஷ் ஒரு முறை நாஞ்சில் மனோகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அப்போது முகம் தெரியாத ஒருவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டு சென்றார். பிறகு தான் தெரிந்தது அவர் தான் சீனிவாசன் என்று. வரலாறு சிலரை மறக்கச் செய்துவிடும். சிலரை மட்டுமே வரலாறு குறித்துக் கொள்ளும் அப்படிப்பட்டவர் தான் காமராஜர் என்றதோடு மேலும் பல தகவல்களையும் சொல்லி இருக்கிறார்.

லண்டனில் ராணி எலிசபெத் ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் ஊர்வலம் செல்வாராம் அதை பார்த்துக்கொண்டிருந்த செல்வந்தருக்கு தானும் அதுபோல் ஊர்வலம் செல்ல ஆசைப்பட்டு ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் சென்றாராம். உடனே அவரை கைது செய்து வழக்கு தொடுத்தார்கள். யாருமே அவரை விடுவிக்க வராத போது ஒருவர் மிகவும் துணிச்சலோடு வந்து வாதாடினார்.

 ராணியாரின் குதிரைகளைப் போல் அல்லாமல் எனது கட்சிக்காரரின் 7 குதிரைகளில் இரண்டு ஆண் குதிரை எனவே இந்த வேறுபாட்டின் காரணமாக அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். உடனே அவரும் விடுதலை செய்தார் மகிழ்ச்சி அடைந்த அவர் 100 செக் தாள்களை கொண்ட செக் புக்கில கையெழுத்திட்டு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ளும் என்றாராம். அவர் பணிவுடன் வேண்டாம் என்று மறுத்தாராம் அவர்தான் முகமது அலி ஜின்னா. அவ்வளவு துணிச்சல் மிக்கவர் தான் இறுதிக்காலத்தில் தன்மேல் வந்தமர்ந்த ஈயை கூட விரட்ட முடியாத சூழலை காட்சிப்படுத்தி இருப்பார் இப்புத்தகத்தில்.

1921 ஆம் ஆண்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக பரிட்சையை புறக்கணித்தார். இருப்பினும் கண்டிப்புடன் அவரை மன்னித்த அரசு பின்பு நான்கு வருடம் கடினமாக உழைத்து பட்டம்பெற்றதால் அவருக்கு சாஸ்திரி பட்டம் கிடைத்தது. 

கிராமம் கிராமமாக உழவர்களை சந்தித்த லால்பகதூர் சாஸ்திரிக்கு தண்டனையாக முப்பது மாதம் சிறை தண்டனை கிடைத்தது. அப்போது அவரின் மகன் மற்றும் மகள் கொடும் நோயினால் இறந்தனர். ஆனாலும் இறப்பில் கலந்து கொண்டு மீண்டும் சிறை சென்றார். அவருடைய காலத்தில் தான் ஊர்க்காவல் படை அமைக்கப்பட்டது .பெண் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டனர். ரயில்வே துறை மந்திரியாக இருந்தபோது முதல் முறை ரயில் விபத்து ஏற்பட்டபோது ராஜினாமா செய்ததை நேரு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்பதும் திருச்சி அருகே ரயில் தடம் புரண்ட போது அவர் விமானத்தில் சென்று கொண்டிருந்தார். செய்தி அறிந்ததும் அங்கிருந்து டெலக்சில் நேருவுக்கு ராஜினாமா கடிதம் கொடுத்தார். இந்த தவறுக்கு அவர் பொறுப்பில்லை ஆயினும் அந்தத் துறைக்கு அவர் பொறுப்பேற்று ராஜினாமா செய்தது அவரின் நேர்மையை குணத்தை அறியலாம்.

மேடைக்கு மேடை காங்கிரசை தாக்கி பேசிய ஜீவா தான் கடைசி காலத்தில் காமராஜருக்கு போன் பண்ணுங்க என்றாராம். ஜீவாவின் சிலைக்கு எம்ஜிஆர்தான் முழு செலவையும் ஏற்றிருந்தார். பிடித்த வாதம் பிடிவாதம் எனும் தலைப்பில் இந்திரா காந்தி குறித்து சுவைபட எழுதியுள்ளார் கணவர் பெரோஸ் காந்தியை கடைப்பிடித்த நாள் அன்று அவருக்கு ஒரு வீரவாள் பரிசளிக்கப்பட்டது ஒரு உறுதிமொழியை ஏற்க வைத்தனர்

"எங்கள் சுதந்திரத்தை பறிக்க நினைப்பவர்கள் இந்த பிரபஞ்சத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த வாள் தான் பதில் சொல்லும் என்று கூறினார்களாம்"
இறப்பதற்கு சில மணி துளிகளுக்கு முன்புதான் சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி செய்யும் கையெழுத்துதான் அவரின் கடைசி கையெழுத்தாக அமைந்துவிட்டது.

தனலட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் பெண தலைவராக விளங்கியவர் பாப்பா உமாநாத். ஒன்றரை வயதில் தந்தையை இழந்து வாழும் அவர் சிறு வயதில் அனைவரும் பாப்பா என்று அழைத்ததால் அதுவே அவருக்கு நிரந்தரமாகி விட்டது. வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்திய போதும் பொன்மலையில் பாலர் சங்கம் மாதர் சங்கம் போன்றவற்றில் ஈடுபட்டார்.வாழ்நாளெல்லாம் போராட்டங்கள், சிறைச்சாலை என இருந்தாலும் 1989 ஆம் ஆண்டு திருவெரும்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களின் குரலாக தொடர்ந்து குரல் கொடுத்தவர் இறுதிவரை இயக்கத்திற்காக தம் பணியைச் செய்தார். இறுதி காலத்தில் கூட கட்சி கொடுத்த ஓய்வூதியத்தை மீண்டும் கட்சிக்கே திருப்பி செலுத்தினார்.

தனக்காக வாழ்ந்து தனக்காகவே ஒருவன் இறந்தால், அவனது உயிர் இறகை விட லேசானது. மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காகவே ஒருவன் இறந்தால் அவனுடைய உயிர் மலையை விட கனமானது என சீனத் தலைவர் மாசேதுன்னு சொன்னதை அப்படியே காமராஜருக்கு பொருத்தி அவருடைய உயிர் இமயமலையை விட கனமானது என்று புகழாரம் சூட்டியிருப்பார்.

இதுபோல் பல்வேறு ஆளுமைகளின சொல்லப்படாத தகவல்களை மிக சுவைபட சொல்லியுள்ளார் நடிகர் ராஜேஷ்.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday, 14 April 2025

புத்த்கம்-31



#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-31
பக்கங்கள் -667
நாள்-21

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை
-,மைக்கேல் ஹெச்.ஹார்ட்

அறிவியல் அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் மதத்தை தோற்றுவித்தவர்கள் என 100 ஆளுமைகளை பற்றி இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிந்தது. கால வரிசைப்படி இந்த கணக்குகள் ஒவ்வொன்றும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பும் படங்களுடன் விளக்கப்பட்டிருப்பதால் நமக்கு எளிமையாக புரிகிறது. தினசரி 10 அறிஞர்கள் வீதம் வைத்துக்கொண்டு பத்து நாட்களுக்குள் இந்த புத்தகத்தை படிக்க முடிந்தது. வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்திய 100 பேர் அவர்களின் தத்துவத்தின் அடிப்படையில் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி இதில் கொடுக்கப்பட்டுள்ளன. 

ஒரு மனிதனின் கண்டுபிடிப்பு என்பதை நிகழ்காலத்தை வைத்து மட்டும் சிந்திக்காமல்.. அவர்களுடைய சாதனைகள் எதிர்கால தலைமுறை மீதும் நிகழ்ச்சிகள் மீதும் ஏற்படுத்தக்கூடிய விளைவினை கவனத்தில் கொண்டு இந்த அறிஞர்களை நாம் பார்க்க முடிகிறது. அரபு மொழியை சிதையாமல் இருப்பதற்கான காரணம் குர்ஆன் அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் வட்டார மொழிகளாக சிதறி சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம் என முகமது நபியை பற்றி சொல்லும்போது சொல்கிறது.

நியூட்டன் தனது கண்டுபிடிப்பதற்கான அறிவியல் உண்மைகளை வெளியிடுவதில் எப்போதும் தயக்கம் காட்டினார். அவருடைய முதல் கோட்பாடு ஒளியின் இயல்பு பற்றிய புரட்சி நூலே ஆகும். அதுவே பல ஆண்டுகள் பின்னர் வெளியிடப்பட்டது என்ற தகவலை தாங்கி வருகிறது. இயேசு பெருமான் இறந்த பிறகு தொடக்க கால கிறிஸ்தவர்கள் சமய எதிரிகளாக கருதப்பட்டதால் அடக்குமுறைக்கு ஆளாயினர். புனித பவுல் அவர்களும் அடக்குமுறைக்கு ஆளான விஷயம் தெரிய வருகிறது. புதிய ஏற்பாட்டில் உள்ள 27 பகுதிகளில் 14 பவுல் எழுதியதாக கருதப்படுகிறது. புதிய ஏற்பாட்டை எழுதுவதில் முக்கிய பங்கு ஆற்றினார்.

இன்று நாம் பயன்படுத்தும் காகிதத்தை கண்டுபிடித்தவர்களில் சாய் லுன் முக்கியமான இடத்தை வகிக்கிறார். வரலாற்று பாடநூல்கள் கூட இவருடைய பெயர் காணப்படவில்லை எனினும் கவனமான ஆராய்ச்சியின் மூலம் இவர் பெயர் கண்டறிய முடிகிறது. இவருக்குப் பின் அச்சுக்கலையை கண்டறிந்த முன்னோடியான கூட்டன் பார்க் அச்சு இயந்திரத்தை பயன்படுத்தும் முறையை புதுமையில் நவீன எழுத்துரு அச்சு இயந்திரம் காகிதத்தை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கான உலகின் வளர்ச்சியை எடுத்துச் சென்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்.

கொலம்பஸ் குறித்த நேர்மறையான பக்கங்களை இந்த புத்தகம் பேசுகிறது .ஆனால் அவர் ஒரு பேராசைக்காரராக இருந்தார் என்பது அவருடைய வரலாற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. இசபெல்லா வாக்குறுதி கொடுத்ததை மறந்து திறமை அற்றவராக இருந்ததால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட இறுதி நாட்கள் வறுமையில் வாடி மாண்டதாக சிலர் கூறுவர். ஆனால் காலமாகும் போது ஓரளவு செல்வ செழிப்புடன் இருந்தார் எனவும் கூறுவர்.

ஐன்ஸ்டீன் கொள்கைகள் நியூட்டன் கொள்கையை விட அடிப்படையில் மிக துல்லியமானது. இருப்பினும் இந்த பட்டியலில் அவருக்கு பின் வைப்பதற்கான காரணம் நியூட்டன் கொள்கைகள் நவீன அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் அடித்தளமாய் அமைந்தன என்பதால்தான். இன்றும் குன்னூரில் கம்பீரமாய் காட்சியளிக்கும் வெறி நாய் கடிக்கு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டியர் பற்றி படிக்கும் போது தன்னுளுடைய 50 வயதுக்கு பிறகு மனிதர்களையும் கால்நடைகளையும் பீடித்து பெருமளவில் உயிர் குடித்து வந்த கரணை என்னும் கொடிய நோய் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் காரணமான நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி மெய்ப்பித்து காட்டினார். அவரின் மற்றொரு கண்டுபிடிப்பு உலகம் அறிந்த வெறிநாய்க்கடிக்கு நோய் மருந்து கண்டுபிடித்தது.

இதற்கு முன்பு இயங்கும் பொருள்களின் வேகம் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்து அதனை மற்றொரு விஷயமாக மீண்டும் முடுக்கி இயக்காவிடில் இயக்கம் என்று நின்று விடும் என்று மக்கள் நம்பி வந்த காலத்தில்.. அந்த நம்பிக்கை தவறானது. உராய்வு போன்ற வேகத்தை குறைக்கும் திசைகளை அடியோடு நீக்கிவிட முடியுமாயின் இயங்கும் ஒரு பொருள் இடைவிடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் என அவர் கூறினார். இந்த முக்கியமான விதியை நியூட்டன் மீண்டும் தெளிவாக வலியுறுத்தினார் அத்துடன் தமது இயக்கு விதிகள் முதலாவது விதி ஆகும் அமைத்துக் கொண்டார் இதனை மேலும் வடிவமைத்தவர் கலீலியோ கலிலி.

அரிஸ்டாட்டில் பற்றி படிக்கும் போது அவருடைய சில பிற்போக்கு தனமான கருத்துக்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. அதில் அடிமை முறையை அவர் ஆதரித்ததும், பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரிஸ்டாட்டில் வாழ்ந்த காலத்தில் பொதுக் கல்வி முறை எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோபர் நிக்கஸ் தமது நூலில் பூமி தனது அச்சில் சுழல்கிறது சந்திரன் பூமியை சுற்றி வருகிறது என்று துல்லியமாக குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்களும் முக்கியமானவர் அதற்கான எதிர்ப்பை சிக்கலை எப்படி சமாளித்தார் என்பதையும் கூறுகிறது இந்த கட்டுரை.

மாட்டின் லூதர் பற்றி நமக்குத் தெரிந்த வரலாற்றை சொல்லி முடித்தவுடன் அவர் ஏராளமான புத்தகங்களை எழுதி உள்ளார். விவிலியத்தை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தது அவருடைய முக்கிய பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இதன் மூலம் எழுத படிக்கத் தெரிந்த எவரும் இந்த வேத நூலை தானே படித்தறிந்து கொள்ள உதவியது. இவருடைய மொழியை மிகவும் இயல்பாக இருந்ததால் சாமானிய மக்களுக்கு எளிதில் பொருந்தது என்று கூறுகிறது.

அறிவியல் சார்ந்த சம்மதர்மத்தை வகுத்தவர்களின் முக்கியமானவர் காரல் மார்க்ஸ் அவர் பத்திரிக்கை தொழிலில் சிறிது பணம் ஈட்டியிருந்த போதிலும் பெருமளவில் தன்னுடைய ஆராய்ச்சிக்காக செலவழித்தார். மார்க்ஸ் மறைந்து 100 ஆண்டுகள் ஆன பின்பும் அவருடைய கொள்கையை பின்பற்றுவோர் 100 கோடிக்கும் மேலாக உள்ளனர் என்பது அவருடைய தாக்கத்தின் அர்த்தமாக கருதப்படுகிறது. 

கொலம்பஸ் எடிசன் போன்ற தோன்றவில்லை என்றால் பிற அறிஞர்கள் தோன்றி அதனை செய்திருக்க கூடும் ஆனால் செங்கிஸ்கான் தோன்றாது போயிருந்தால் 13ம் நூற்றாண்டு நிகழ்ந்த மங்கோலிய படையெடுப்புகளும் வெற்றிகளும் நிகழ்ந்திருக்கும் என சொல்ல முடியாது. ஏனெனில் அவை அதுவரையில் ஒற்றுமைப்படாமல் இருந்தனர். செங்கிஸ்கான் அவர்களை ஒற்றுமைப்படுத்தினார். செங்கிஸ்கான் பிறகு அவர்கள் ஒற்றுமையாக வாழ வில்லை. எனவே தான் மனித குல வரலாற்றில் உண்மையில் முதன்மையாக இயக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள் ஒருவராக செங்கிஸ்கான் தோற்றமளிக்கிறார்.

நெப்போலியன் லத்தீன் அமெரிக்காவில் ஏற்படுத்திய தாக்கம் ஸ்பெயின் மீது படையெடுத்ததினால் பல ஆண்டுகளாக ஸ்பெயின் வலிமையின்றி இருந்தது. உண்மையாகவே லத்தின் அமெரிக்க விடுதலை இயக்கங்கள் தொடங்கின. எனவே அமெரிக்காவுக்கு லூயிஸினாவை கொடுத்ததில் நெப்போலியனுக்கு பெரும்பங்கு உண்டு என்பதை அறிய முடிகிறது. மார்க் மணி கிரகாம்பளுக்கு முன்னோடியாக விளங்கிய எடிசன் அவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி விவரிக்கிறது ஒரு கட்டுரை.

தெரிந்த ஆளுமைகளைப் பற்றி தெரியாத விஷயங்கள் தெரிந்த கண்டுபிடிப்புகளில் மறைந்துள்ள உண்மைகள் வரலாற்று ரீதியில் எவ்வாறு எல்லாம் ஆளுமைகள் இருந்துள்ளனர், அவர்களுடைய கோட்பாடுகள், குறிக்கோள் என்ன என்பது குறித்து தெளிவாக அதே நேரத்தில் மிக எளிமையாகவும் இரண்டு பக்க அளவில் ஒவ்வொருவரை பற்றியும் அறியாத விஷயங்களை அறிந்து கொள்ள தூண்டுகோலாக அமைந்தன. இந்த புத்தகம் உலகை மாற்றிய 100 ஆளுமைகள் என்றும் கூட இந்த புத்தகத்தின் தலைப்பு வைக்கலாம் என்று தோன்றியது. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தையும் ,ஆர்வத்தையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்தியது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம்-30


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-30
பக்கங்கள் -464
நாள்-20

கடல் பழகுதல்
-வறீதையா கான்ஸ்தந்தின்

கடல் என்பது சங்ககாலம் முதற்கொண்டு வாணிபம் செய்ய பயன்படுத்தினர்.எல்லைகளாக இருந்தது என துவக்க காலத்தில் கடல் என்பது சங்க காலம் முதல் எவ்வாறு மனிதர்களுடன் கலந்து இருந்தது என்பது மட்டும் இல்லாமல்..கடல் குறுத்த அறியாத செய்திகள் இருக்கின்றன. சூழகியல் கேடு நிலம் மட்டுமில்லாமல் நீரினையும் எவ்வாறு மாசுபடுத்தி உள்ளது என தெரிவிக்க கி.பி.2050இல் கடலில் மின்களைவிட நெகிழிகளே அதிகமாய்க் கிடைக்கும்’ என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

இப்போதும்.கடலின் அருகில்.சென்றால் குழந்தையாய் மாற்றிவிடுகின்றன. கடலை பார்ப்பதோடு மட்டுமின்றி, ஒரு கடல் பயணியாக, மாலுமியாக, தொல்லியல், பருவநிலை ஆய்வாளராகக் கடலைப் பார்ப்பவர்களுக்குக் கடல் அற்புதமான அனுபவங்களைத் தருகிறது. கடலுக்குள் நடைபெறும் மாற்றங்கள், கடலின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை, உள்ளே நடைபெறும் நீரோட்டங்கள் என விவரிக்கிறது.

கடல் மேற்போக்காய் பார்க்கும் போது.. வளமை. ஆனால் கடலில் மாசுபாடு எவ்வாறு நடைபெறுகிறது.'இயற்கை மனிதனின் தேவைக்குப் போதுமானவற்றைக் கொண்டுள்ளது. பேராசைக்கு ஈடுகொடுக்குமளவுக்கு அல்ல' எனும் வரி சிந்திக்க வைக்கிறது.கழிமுகம் என்பது கடலும் ஆறும் இணைக்கும் இடம். இதில் கழிவுகள் அதிகம் கலப்பதாக சொல்கிறது.

கடலுடன் வாழும் மக்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம், இயற்கை எவ்வாறு அவர்களை பாதிக்கிறது என்பதை நுணுக்கமாகப் பதிவு செய்கிறது.மேலோட்டமான கட்டுரையாக இல்லாமல் ஆய்வு நோக்கில் அணுகுகிறது.கடல் வாழ்க்கையின் சிக்கல்களை, உண்மைகளை போதிய அளவில் அக்கரையோடு பதிவு செய்கிறார்.

 மீன் உண்ணும் சமவெளி மக்களிடையே மீன்களைப் பொதுப் பெயரால் அழைக்கும் வழக்கம் வந்துவிட்டது. சொறா, எறா, நெத்திலி, பாரை, சீலா, வஞ்சிரம் என மீன் பெயர்கள் ஐந்தாறாகச் சுருங்கிவிட்டன. கடியப்பட்டினம் கிராமத்தில் ஒரு மீனவர் ஒரே மூச்சில் 313 மீன்களின் பெயரை அடுக்கிக்கொண்டே போனார் என்பது வியப்பாய் உள்ளது.கடல் மீன்கள் குறித்து விரிவாக சொல்கிறது.மீன் பிடி தொழில் நுட்பம் பற்றி பேசுகிறது. உதாரணத்துக்கு நெத்திலி மீன் எவ்வாறு பிடிக்கப்பட்டு பதப்படுத்தபடுகிறது என்பதை பற்றி சொல்கிறது.

பழங்குடி மக்களின் தனிப்பெரும் அடையாளமாய் நிற்பது இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை.இவ்வாறுதான் நெய்தல் நில மக்களின் வாழ்வியல் எவ்வாறெல்லாம் உள்ளது என அறிய முடிகிறது.

உண்மையில் மீனவர்களுக்கு என்ன பிரச்சினை? அவர்களுடைய போராட்டங்கள் நியாயமானவையா? கடலில் அவர்களுடைய சிக்கல்தான் என்ன? கடற்கரைகளில் அவர்களின் வாழ்க்கை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது? இப்பிரச்சினைகள் ஊடகங்களில் சரியாக அணுகப் படவில்லை. மீனவர்களின் கண்ணோட்டத்தில் அலசப்படவில்லை என பேசுகிறது.

கனிம மணல்கொள்ளை, சேதுக் கால்வாய்த் திட்டம், கச்சத்தீவு, எரியும் கடல், பதறும் கரை என்பது குறித்தும்.. சுனாமியினால் உண்டான பிரச்சனை அதற்கு பின் நிகழ்ந்த மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம்,பிரச்சனை குறித்தும் பேசுகிறது.

பேசப்படாமலும் உற்றுக் கவனிக்கப் படாமலும் நூறுவகைத் துயரங்கள் கடற்கரை மணலுக்குள் புதைந்து கிடக்கின்றன.கடலுக்குள் போவதும் யுத்தத்துக்குப் போவதும் ஏறத்தாழ ஒன்றுதான். இரண்டிலும் தகவல் தொடர்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உயிர்நாடியானவை என்பது ரசிக்க வைத்தது

#ரசித்தது

*பிரம்மாண்டம் கடலின் குறியீடு. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கடலைப் பரவை என்கின்றன. பரவை என்றால் பரந்துபட்ட என்று பொருள்.

*நிலம் அசலம்; நீர் சலம். அது சலம்பிக்கொண்டே இருக்கும். 

*கடல், பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்புநீர். கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. பூமியின் 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 x 106 கன மீட்டர்கள் (3740 கோடி கோடி கனமீட்டர்கள்). நிலத்தைப் பொறுத்தவரை அதன் பரப்பில் மட்டும்தான் உயிர்கள் உலவ முடியும். கடலோ முப்பரிமாண ஊடகம். அவ்வாறு உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாகத் திகழ்கிறது கடல்.

*ஆப்பிரிக்காவின் தென்முனையில் வாஸ்கோ டி காமா நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்தது கி.பி.1498 ஏப்ரலில். அஹமது பின் மஜித் என்னும் அரேபிய மாலுமிதான் வாஸ்கோ டி காமாவுக்கு வழிகாட்டினார். 

*பருவம் தோறும் மீன் கூட்டங்கள் கரைக்கு வருவதன் முன்னறிவிப்பாக ‘தேத்து’ என்னும் கடல் நிற மாற்றம் வருகிறது.

*வனப் பழங்குடிகள் போல கடலோர மக்களும் வேடுவர்களே. அவர்கள் கடல் பழங்குடிகள்.

கடல் குறித்து அறிந்து கொள்ள ஆவல் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமாய் இருக்கிற்து. நூலின் இடையே வரும் சங்கப்பாடல்கள், மீனவ வாழ்க்கை முறையும் நேரடியாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

விமானத்தின் மூக்கு கூம்புக்குப் பின்னால் என்ன இருக்கிறது?விமானத்தின் மென்மையான மூக்குக்கு பின்னால் ஒரு சக்திவாய்ந்த வானிலை ரேடார் அமைப்பு உள்ளது, இது நூற்றுக்கணக்கான மைல்கள் முன்னால் ஸ்கேன் செய்து, புயல்கள், கொந்தளிப்பு மற்றும் நிலப்பரப்பைக் கண்டறிகிறது.இந்த இடத்தில் வழிசெலுத்தல், தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் சிக்கலான ஏவியோனிக்ஸ் உள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, மூக்கு கூம்பு உலோகம் அல்ல, இது சிக்னல்களை கடந்து செல்ல கண்ணாடியிழை அல்லது கெவ்லர் போன்ற ரேடார்-நட்பு பொருட்களால் ஆனது. இது ஒவ்வொரு பாதுகாப்பான விமானத்திற்கும் முக்கியமான ஒரு மறைக்கப்பட்ட தொழில்நுட்ப மையமாகும்.-படித்தது

"உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனுதாபத்திற்காக ஏங்கிக் கிடக்கின்றனர். அனுதாபத்தைப் பெறுவதற்காக ஒரு குழந்தை தனக்கு ஏற்பட்டக் காயத்தை ஆர்வத்துடன் காட்டுகிறது. சில சமயம் வேண்டுமென்றே தன் கையில் ஒரு கீறலையோ அல்லது காயத்தையோகூட அது ஏற்படுத்துகிறது. அதே காரணத்திற்காகத்தான் பெரியவர்களும் தங்கள் காயங்களைக் காட்டுகிறார்கள், தங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்களையும் உடல்நலக் குறைவுகளைப் பற்றியும் பேசுகிறார்கள், குறிப்பாக, தங்களுக்கு நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சையின் முழு விபரங்களையும் அவர்கள் விலாவாரியாகப் பேசுகிறார்கள். தங்கள் நிஜ வாழ்விலோ அல்லது கற்பனையிலோ தங்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டங்கள் குறித்து 'சுய பச்சாதாபம்' கொள்வது உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கிறது."-டாக்டர் ஆர்தர் ஐ. கேட்ஸ்

Sunday, 6 April 2025

கல்வி என்பது நாம் இன்னும் அறியாமல் வைத்துள்ள பலவற்றைப் பற்றியும் நாம் அனுபவிக்காத பல உணர்வுகளைப் பற்றியும் நாம் இதுவரை செய்யாத பல செயல்களைப் பற்றியும் விழிப்புணர்வு பெற்று அறிந்து கொள்வதாகும்ஒவ்வொரு விசயத்திலும் உள்ள நன்மை தீமைகளைப் பற்றியும் எதையும் எடுத்த எடுப்பில் நம்பாமல் அது குறித்த கேள்விகளை எழுப்பி சந்தேகம் தெளிந்து ஆழ்ந்த ஞானத்தை வளர்த்துக் கொள்ள உதவுவது கல்வியாகும்கல்வியைஏட்டறிவுபட்டறிவு கேட்டறிவு சொல்லறிவு செயலறிவு என்று பல வகைகளில் ஒருவர் பெறக்கூடும். நம் ஒவ்வொரு நாளையும் புதிதாக உணர்வதற்கு நாம் பெறும் கல்வியும் முக்கியமான காரணம்.. நம்மை இவ்வாழ்க்கையில் சலிப்படைவதை விட்டும் தடுத்து புத்துணர்வூட்டும் சக்தி "கல்விக்கு" உண்டு. வாழ்க்கை சலிப்புத் தட்டுகிறதா? புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளத் துவங்கினால் போதும். சலிப்பு பறந்தோடிவிடும். வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியானதாக வேண்டுமா?நாம் கற்ற விசயத்தை பிறருக்கு சொல்லிக் கொடுத்தால் போதும். விருட்சத்தைத் தேடிப் பறந்து வரும் பட்சிகள் போல மகிழ்ச்சி மனதில் பெருக்கெடுக்கும். சிலர் கல்வி நிலையங்கள் சென்று கற்கும் ஏட்டறிவு தேவையில்லை என்று கூறலாம். அதனால் பயனில்லை என்றும் கூறலாம்.அது அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்தது பிறந்த சூழல் பொருத்தது அவரவர் வாழ்வில் அனுபவிக்கும் சலுகைகளைப் பொருத்ததுஇதை ப்ரிவிலேஜ் என்போம். ஆனால் இவற்றையெல்லாம் அனுபவிக்காதஆனால் இவற்றை அடையத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பத்தகுந்த வழியாகவும் உந்து சக்தியாகவும் இருப்பது "ஏட்டறிவு"இந்த ஏட்டறிவின் மூலம் கிடைக்கும் பொருளாதரத் தன்னிறைவு மற்றும் சுதந்திரம் என்பது நாம் கனவு காணும் அனைத்துக்கும் முக்கியமானது. எனினும் ஏட்டறிவு பெற்றுவிட்டதாலேயே ஒருவர் முழுமையான கல்வியைப் பெற்று விட்டார் என்று கூறுவதற்கில்லை. இங்கு இப்புவியில் பிறந்து வாழும் ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் தனக்கே தனக்கென பிரத்யேகமான வாழ்க்கையை வாழ்கிறோம்ஒவ்வொருவரும் அதன் வழி அனுபவம் பெறுகிறோம். ஒரு புத்தகம் படித்துப் பெறுவது அறிவு மட்டுமே ஒரு மனிதனின் அனுபவமானது அறிவுடன் சேர்த்து ஞானத்தையும் வழங்கவல்லது. அறிவு என்பது எதையெல்லாம் செய்து பார்க்கலாம் என்று கூறும்ஞானம் என்பது எதையெல்லாம் செய்யலாம் - எதைச் செய்யக் கூடாதுஎன்பதையும் சேர்த்தே கூறும். இதனால் தான் நூல்கள் மட்டும் பத்தாது. ஆசிரியர்களின் பங்கும் அத்தியாவசியமாகிறது. கல்வியின் முக்கியமான நோக்கம் கற்ற கல்வி மூலம் பெற்ற விசயங்களையும் ஞானத்தையும் தன்னைப் போல கற்க விரும்பும் பலருக்கும் கடத்துவதும் அவர்களும் வாழ்வில் முன்னேற கை கொடுப்பதும் ஆகும். கல்வி என்பது சிந்திக்கத் தூண்டி காணும் அனைத்திலும் மனிதத்தன்மை மாறாமல்வன்முறையை விலக்கி அன்பின் பாதையைத் தேர்த்தெடுக்கச் செய்ய வேண்டும். கல்வி என்பது காணும் மனிதர்களிடத்தில் பேதம் காணும் வழக்கத்தை விட்டொழிப்பதாகவும்அனைவரும் சமமென்ற இயற்கை உணர்வைத் தூண்டும் விதமாக அமைய வேண்டும்.கல்வி என்பது பல மூடநம்பிக்கையை விட்டும் நம்மை விலக்குமாறும்நற்செயல்கள் பக்கம் நம்மைத் திருப்புமாறு அமைய வேண்டும். கற்றது கைமண்ணளவுகல்லாதது இன்னும் உலகளவு என்ற எண்ணம் எப்போதும் மனதில் இருக்க வேண்டும் காணும் யாரிடத்திலும் அவர் சிறியவர் பெரியவர் பேதமின்றி கற்க முடியும் என்ற எண்ணமே கற்போரின் குணமாக இருக்க வேண்டும் கற்ற கல்வியின் பயனாக செருக்கை வளர்க்காமல் சக மனிதர்கள் மீது சகிப்புத்தன்மை வளர்க்க துணை புரிய வேண்டும். கற்றதைத் தானும் பின்பற்றிபிறருக்கும் எத்தி வைப்பது கல்வியின் இலக்கணமாகும். கல்வி என்பது நம்மை சிந்திக்கத் தூண்ட வேண்டும். பெற்ற கல்வியை அதைப் பெறாதவரை நிந்திக்கப் பயன்படுத்துதலாகாது. நம்மையும் நம் சமூகத்தையும் ஏற்றத்திற்கு கொண்டு செல்லும் ஏணியாகவும்கரை சேர்க்க உதவும் தோணியாகவும் இருப்பது நாம் கற்கும் "கல்வி".வாழ்வின் போக்கையும் வாட்டத்தையும் மாற்றும் சக்தி படைத்த ஆயுதம் "கல்வி"அதை எப்பாடுபட்டாவது அனைவரும் அடைய வேண்டும் நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை

Saturday, 5 April 2025

புத்தகம்-45


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-23
பக்கங்கள் -169
நாள்-13

#மாதம்_ஒரு_எழுத்தாளர்

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
-பெருமாள் முருகன்

சுறுப்பானது வெள்ளாடு என்பதால் கதையின் ஓட்டத்திற்கு வெள்ளாடு சரியாய் இருக்கும் என கதாபாத்திரமாக எழுத்தாளர் ஏற்றுக்கொண்டார்.

ஊர் ஊராய் ஏழாவதாய் பிறந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கி கொண்டு அலைந்து கொண்டு இருந்தான் ஒருவன். வழியில் தென்பட்ட கிழவனிடம் பேச்சுவாக்கில் அந்த ஆட்டுக்குட்டியை கொடுத்துவிட்டு கிழம்பிவிட்டான் அவன்.எப்படியாவது அந்த ஆட்டுக்குட்டியை வளர்த்து விட வேண்டும் என நினைக்கிறான் கிழவன்.முகச்சுழிப்புடன் மனைவி இதை ஏற்றுக்கொண்டு.. வளர்த்து பருவமடைந்தால் விற்றுவிடலாம் என பூனாச்சி என பெயர் சூட்டுகிறாள்.
வீட்டில் ஒருவளாய் வளர்கிறாள்.

வயிற்று பசிக்கு சிரமப்படும் இருவர் கடவுள் கொடுத்த பரிசு போல் இருக்கும் வெள்ளாட்டை கஷ்டப்பட்டு வளர்க்கின்றனர். காட்டுப்பூனைக்கு தப்பியதும், காது குத்துதல் என கிராமத்து சடங்குகள் செய்கின்றனர்.
குட்டி போடுகிறது. ராஜாங்கத்துக்கு தெரிந்தால் என்ன சொல்வது என யோசிக்கிறார்கள்..அப்போது ஒரு வரி வரும்..
   
வாயிருப்பது மூடிக்கொள்ளதான்.கையிருப்பது கும்பிடு போடத்தான். காலிருப்பது மண்டியிடத்தான்.முதுகிருப்பது குனியத்தான்.உடலிருப்பது ஒடுங்கத்தான். ராசாங்கத்திடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று எல்லாரும் நன்றாகவே கற்றிருந்தார்கள்”

*ராசாங்கத்தின் காது செவுட்டு
காது.என்று வரும்

காது குத்தும் சடங்கு முடிந்ததும் காய்ச்சல் வலி என பூன்னாச்சி சிரமப்பட்டது.பின்னர் கிழவி தன் குழந்தையைப் போல வளர்த்து வந்தாள். வயதான காலத்தில் விலங்குகள் வாரிசாகும்.நிகழ்வை போல.

மேய்ச்சலுக்கு பூனாச்சியை ஓட்டிச்செல்லு போது அங்கு ஊத்தன் உழும்பன் எனும் செம்மறியாட்டுடன் விளையாடுவாள் பூனாச்சி. அந்த உலகம் அவளுக்கானது.

இயல்பான வாழ்க்கையில் பலி ஆடுகளாய் உள்ள நண்பனை பறிகொடுத்தல்,வனத்திற்குள் பயணம் என செல்கிறது பூனாச்சியின் வாழ்க்கை. வனத்தை பற்றிய பூனாச்சியின் எண்ணம்

"சனம் எல்லாத்தையும் அழிச்சு அழிச்சு கையில் வழிச்சு வழிச்சு வாயில் போட்டுக்குது.அப்புறம் சனத்தை தவிர வேறு எதுவும் பொழைக்க முடியாது என்கிறது.பஞ்சத்தில் மக்களுடன் வாயில்லா ஜிவன்களும் துன்புறுவது துயர்மிக்கது.இதற்கிடையில் பூவன் மேல் ஆசை கொண்டதுபோது பூனாச்சி பிரிகிறாள்.

பின் கொஞ்ச இடைவெளியில் ஏழு குட்டிகளை ஈனுகிறாள் பூனாச்சி. குட்டிகளை விற்க நினைக்ககிழவன் யோசிக்கும் போது..கிழவி அதிசயத்தை பார்க்கலாம், ரசிக்கலாம்.. கட்டிக் காப்பாற்றும் திராணி நமக்கில்லை என்கிறாள். ஒரு ஏழை குடும்பத்தின் தெய்வவாக்கு இது தான்.நம்மால் என்ன செய்ய முடியும் அழத்தான் முடியும் என்பது போல்.தன் குட்டிகளை தன் கண் முன் விற்பதை பார்த்து பூனாச்சி பொறுமுகிறாள்.

"இது பெண்ணை பற்றியதோ என எண்ணும் அளவிற்கு மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது.

*பேசற வாயும் தின்னுற வாயும் ஒன்னுதான்.. எல்லாத்தையும் பேச முடியுமா? எல்லாத்தையும் தின்னுற முடியுமா?

காதலன் பூவனை பறிகொடுத்த பதைபதைப்பு நெகிழ்ச்சியானது

ஆரம்பம் முதல் இறுதி வரை பூனாச்சியே ஆக்கிரமித்திருக்கிறாள்.மனிதரை போல் பூனன், கடுவாயன், அழகுமூக்கி, உழுத்தன், ஊழையன், செம்மி, பொருமி ” என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை கவர்வதுடன் நில்லாமல் கண்கலங்க வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

வெள்ளாட்டின் கிராமத்து வாழ்வியல், பட்டி, ஊனு,,புழுக்கை என ஆடு மேய்த்த வாசம் நமக்கு வருகிறது.கஷ்ட காலத்தில் பூனாச்சி யின் பிரசவ வேதனை நமக்கும் வருகிறது.ஆடு பிரசவ காலத்தில் ஆறுதல் தேடும். ஆடு தாய்மை உணர்வுகளை கடந்து நிற்கும். பஞ்ச காலத்தில் ஆடும் மனிதர்களுடன் பட்டினி கிடக்கும் என்பதை உணர முடிகிறது.

இறுதியில் கிழவி தொட்டுப் பார்க்கும் போது பூனாச்சி கற்சிலை போல் இருந்தாள் எனும் வார்த்தை நம்மை நிலைகுழைய வைக்கிறது.இந்த்ந் வாசிப்பு பயணம் இனிமையாகவும் நல்லதொரு அனுபவத்தையும் கொடுத்தது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 4 April 2025

ஒருவர் காட்டுக்குச் சென்றால், அங்கு மரங்கள் சீராக நேர்க்கோட்டில் வளராமல், இங்குமங்கும் வளர்ந்திருப்பதாக, குற்றம் சாட்டுவதில்லை. ஒருவர், கடற்கரைக்குச் சென்றால், அங்கு அலைகள் நேர்த்தியாக எழும்புவதில்லை என்று புகார் அளிப்பதில்லை.ஒருவர் வானில் இருக்கும் மேகங்களைப் பார்த்து ஏன் மேகங்கள் ஒரே விதமாக, நேர்த்தியாக இல்லாமல் வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கறது என்று வருத்தப்படுவதில்லை.அப்படியிருக்க, நாம் ஏன் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் எல்லா விஷயங்களிலும் மிகச் சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்?ஒழுங்கின்மை இயற்கையின் இயல்பு. அந்த ஒழுங்கின்மை தான் தனித்துவமுமாகிறது. - லாவோட்சு

Tuesday, 1 April 2025

புத்தகம் 40


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-17
பக்கங்கள் -304
நாள்-8

அறிவுத்தேடல்
-சுப.வீரபாண்டியன்

காலையில் தினமும் கண் விழித்தால் கைதொழும் தேவதை மொபைல் போன்கள் தான். அந்த மொபைல் போனை இனிய நாளாகுவது சுபவீ அவர்களின் ஒரு நிமிட செய்தி தான்.அறிவு தேடலில் தான் கற்ற அறிவினை நாள்தோறும் பகிர்ந்து வரும் ஒரு அறிவு தேனீ அவர். அந்த வகையில் இந்த புத்தகம் தன்னுடைய உரைகளை தொகுத்து நூலாக கொண்டு வந்துள்ளார். இதில் அவர் ஆற்றிய பல உரைகளை you tube ல் கேட்டிருப்பீர்கள். ஆனால் புத்தகமாய் வாசிக்கும் போது நமக்கு தனி அனுபவமாய் அமைகிறது.

குறிப்பாக ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா என்ற உரைத் தொகுப்பு அன்றைய நாளில் மிகவும் வைரலாக பரவிய தொகுப்பாகும் இந்த புத்தகம் ஏதோ அறிவியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல் நமக்கு தேவையான பல விஷயங்களை அறிவியல் நோக்கில் ஹாக்கிங் என்ன சொல்ல வருகிறாரோ அவற்றை தன் பாணியில் மிக எளிதாகவும் அதே சமயத்தில் சிந்திக்கும்படியில் தக்க மேற்கோள்கள் பலவற்றைக் காட்டி சிறு கதைகளை கூறி இந்த உரை தொகுப்பு நமக்கு வித்தியாசமாய் அமைந்தது. கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்து பன்னெடுங்காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது.ஹாக்கின்ஸ் பார்வையில் எவ்வாறு உள்ளது என்பதனை தான் இந்த புத்தகம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது.

ஸ்டீபன் பற்றிய வரலாறு நமக்கு சொல்லும் போது அவர் மீதான மதிப்பும் மரியாதை அதிகரிக்கிறது. ஒரு மாற்றத்திறனாளியாய் இருந்தும் கூட தன்னம்பிக்கையுடன் இந்த உலகில் தன் கருத்துக்களுடன் கம்பீரமாக வாழ்ந்து வந்துள்ளார். என நினைத்து பார்க்கும் போது பெருமை அடைய வைக்கிறது.

பெரியாரை பற்றி அனைவரும் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை கூறி விடுவார்கள். ஆனால் அண்ணாவை யாருக்கும் தாக்குவதற்கு அத்தனை எளிதாக மனம் வராது தாக்கப்படாத காரணத்தினாலேயே கூடுதலாக இளைஞர்கள் அறியப்படாமல் போய்விடக்கூடாது என்ற கவலையுடன் சபரி அவர்கள் அண்ணாவைப் பற்றி நமக்கு அறிமுகம் செய்கிறார். அண்ணா அவர்களின் அரசியல் வாழ்வை பற்றி தெரிந்த அளவுக்கு அவர் எழுத்தாளராக அறிவது சற்று குறைவு தான் .அவர் 13 நாடகங்களையும் 77 கவிதைகளையும் 129 ஆங்கில கட்டுரைகளையும் 113 சிறுகதைகளையும் 316 தம்பிக்கான கடிதங்களையும் 1476 தமிழ் கட்டுரைகளையும் 12775 சொற்பொழிவுகள் கட்டுரைகளாக ஆக்கப்பட்டுள்ளன என்று படிக்கும் போதே பிரமிப்பு வருகிறது. அண்ணா குறித்து அறியப்படாத பல தகவல்கள் இந்த உரையில் காண முடிகிறது.

உன் கருத்தை நான் முழுமையாக மறுக்கிறேன் ஆனால் அதனை சொல்வதற்கான உன் உரிமையை நிலை நாட்ட நான் சாகும் வரை வாதிடுவேன் என்றார் வால்டர். அவரை குறித்த கட்டுரைதான் மூன்றாவது ஆக இடம் பெற்றவை. மூடநம்பிக்கை எதிர்ப்பு மத ஆதிக்க எதிர்ப்பு கருத்துரிமை போர் ஆகிய மூன்றும் வால்டேரின் எழுத்துக்களில் மேலோங்கி இருந்தவை.

இன்னொரு தகவல் இந்த புத்தகத்தில் அறிய முடிந்தது புதிய செய்தியாக இருந்தது 18 ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் திப்பு சுல்தானுக்கு உதவியாய் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தளபதி லாலி அவர்கள் உதவி புரிந்தார். ஆனால் போரில் ஆங்கிலேயர்கள் வென்றதால் திப்பு கொல்லப்பட்டார். லாலி பின்னர் பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பும் போது அவருடைய சொத்துக்களை அரசு பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்த அநீதியை வால்டேரினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக தளபதியின் பக்கம் நின்று போராடி சொத்துக்களை மீட்டுக் கொடுத்தார். இது போன்ற செய்திகள் வால்டர் மீது இருந்த மரியாதை பன்மடங்கு அதிகப்படுத்துகிறது.

லத்தீன் அமெரிக்க வரலாற்றினை பற்றி சொல்லும் போது பீரங்கி துப்பாக்கி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் பல்வேறு நாடுகளால் அடிமைப்படுத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்தவர்கள். மீதமுள்ளவர்களையும் பல்வேறு நாட்டினர்கள் அடிமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.எனவே லத்தின அமெரிக்க மக்கள் எதிர்த்து போராடி வென்றதாக தனித்து விடப்பட்டவர்களாக ஆகிவிட்டனர். நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் தூய்மையற்ற நீரும் பல்வேறு இன்னல்களையும் அவர்கள் அனுபவித்த வண்ணம் இருந்தனர் என எவ்வாறு அந்த கண்டம் மீண்டு வந்தது என்பதை பற்றிய வரலாற்றை இதில் பதிவு செய்கிறார்.

இதை தவிர வள்ளுவத்தின் மனிதம் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது .அறிவியல் சார்ந்த மானுட வரலாறுகள் என்னென்ன, நாயக்கர்களின் காலம் எதனால் பொற்காலம், எது சுதந்திரம் ,மாமனிதர் குருசாமி, சனிப்பெயர்ச்சி உள்ளிட்ட உரைகள் படிப்பதற்கு அத்தனை அறிவுப் புதையல்களை தன்னிடத்தே ஒளித்து வைத்துள்ளன. நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமைந்தது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு