Thursday, 25 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-12-மணி




இன்றைய பிரச்சனைகளுக்கு நேற்றைய பதில்களை அளிப்பதுதான் அரசியல்
 -மார்ஷல் மக்லூகன்

#60 நாட்களில் அரசியல்
-கோமல் அன்பரசன்

நகைச்சுவைங்கிறது எல்லா இடத்திலும் இருக்கிறது னு சொல்லும் ஸ்டேண்ட் அப் காமெடியன்போல அரசியலும் எல்லா இடத்திலும் இருக்கு.இதை எல்லாத்தையும் கூட்டி வரும் கூட்டுத்தொகை தான் அரசியல்.சுதந்திரம் கிடைத்த போது டாக்குமென்ட்ரி அரசியலாய் இருந்தது இப்போது கமர்சியல் அரசியலாகிவிட்டது பணத்தினால்.
அப்படிப்பட்ட அரசியலை கார் சைடு மிரர்ல பார்த்த மாதிரி இப்புத்தகம் கடந்த கால அரசியலை, மக்கள் மனநிலையை அப்பிடியே ட்ரைவிங் சீட்ல உட்கார்ந்து ஜஸ்ட் லைக் தட் பார்க்க வைக்கிறது.

அரசியல் ஒரு சாக்கடைங்க எனச் சொல்லும் கூட்டத்தில் துவங்கி ஓட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளர் வரை உள்ள குறைகளை சுட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். நன் கொடைதான் கட்சிக்கு குளுக்கோஸ் மாதிரி.மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ரூ20,000க்கும் மேல் பெறுவதை மட்டும் வெளிப்படையாய் சொன்னால் போதும் என்பதால் எல்லாகட்சிகளும் 20000க்கு கீழே காட்டிவிடுவதால் பிரச்சனையில்லை.
பல கோடிகள் புரள்வது இப்படித்தான்.

மக்கள் இப்போதெல்லாம் நல்ல படங்களை எதிர்பார்ப்பதில்லை. ஓரளவுக்கு உட்கார்ந்து பார்ப்பது போல் இருந்தால் போதுமென நினைக்கிறார்கள்.அந்த வகையில் அரசியல்வாதிகளும் அடிக்கிறதை அடிச்சிட்டு ஓரளவுக்கு தொகுதிக்கு செய்தால் போதும்னு முடிவுக்கு வந்திட்டாங்க.இன்னொரு குரூப் ஓட்டுப் போட்டு முடிஞ்சதும் அப்புறம் எந்த கவலையும் இல்லாமல் அவருண்டு அவர் வேலையுண்டுனு காணாமல் போய்டுறாங்க.மீறிப் போனால் நிழல்குடை, தண்ணீர் தொட்டி,பள்ளி கட்டுவாங்க.ஏன்னா அதில் அவர்கள் பெயர்கள் தெரிவதால்.

தேசிய கட்சிகள் மாநில அளவில் வலுவான தலைமையை வைத்திருந்தனர் என்பதற்கு நேருவே உதாரணம்.கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா,தமிழ்நாட்டில் காமராஜர் போல் தம் கட்சியின் முகங்களாக மாநில அளவில் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தது.
இன்றைக்கு இது மிஸ்ஸிங். விளைவு தேசிய கட்சிகளுக்கு தேய்பிறை ஆரம்பித்தது தான்.

சத்திய மூர்த்தியிடம் காமராஜர், பெரியாரிடம் அண்ணா, கலைஞர், என தலைமைப்பண்பை குருகுலத்தில் கற்பது போல் கற்றனர். இன்று 60 நாட்களில் அரசியல் கற்று கத்துக்குட்டிகள் பெருகிவிட்டதாய் கூறுகிறார்.ஒரு சாதிக்கட்சியை எடுத்துக்கொண்டால் ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராய் பிரிந்து சாதியை விட சாதிக்கட்சிகள் அதிகம் உள்ளதை இன்று கண்கூட பார்க்கிறோம்.

அரசியலில் இதுதான் நடக்குமென்று அறுதியிட்டு கூற முடியுமா? அதுக்கு ஒரு சான்று..எம்.ஜி.ஆர் தனித்து கட்சி ஆரம்பித்து திண்டுக்கல்லில் மாயத்தேவர் வெற்றி பெற்ற போது முரசொலி மாறனிடம் செய்தியாளர்கள் கேட்கின்றனர்..
'அப்போ..அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் ஜெயிக்குமா? ரொம்பவும் நக்கலாக பதில் சொன்னார் மாறன்..'அட நீங்க வேற..விட்டா ஜெயலலிதா தான் தமிழ்நாட்டோட முதலமைச்சராயிடுவார்னு சொல்வீங்க்ச் போல! என்றார். அதன் பின் நடந்தது வரலாறு.

அதேபோல் சிவாஜி,பாக்யராஜ், டி.ஆர். எஸ்.எஸ்.ஆர்,கார்த்திக் என சறுக்கிய முகங்களும் உண்டு.
சாதி அரசியல் அடையாளமா? அதிகாரமா? கட்டுரையில் உயர் பதவியில் அதிகாரமில்லா பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர்.
பேராசிரியர் அப்துல் காதர் பகிர்ந்த செய்தி..தலைவர்களின் பெயர்கள் மாவட்டத்திற்கு வைத்து பின் எடுத்த போது எல்லா பேருந்து மீதும் கல்லடி பட்டது.ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் ஒன்றும் ஆகவில்லையாம்.ஏனெனில் அது திருவள்ளுவர் பெயரில் இருந்ததால் அவர் என்ன சாதியென தெரியவில்லையென சொன்னார்களாம்.

மேயராக இருந்த சர்.பிட்டி தியாகராயர் வேல்ஸ் இளவரசர் வந்த போது இன்னென்ன உடைகளை அணிய வேண்டும் என விதித்த கட்டளை மீறி நான் வேட்டியுடன் தான் வருவேன் என தீரம் காட்டிய கொள்கை புலியை அறிந்து கொள்ள முடிந்தது.மாநில சுயாட்சியுடன் இருந்த தலைவரை முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம்

அரசியல்வாதிகளின் பேச்சு குறித்து..
"நாளைக்கு,அடுத்த வாரம், அடுத்த மாதம்,அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்ல வேண்டும். பின் அதெல்லாம் ஏன் நடக்கவில்லை என்பதை விளக்கத் தெரிய வேண்டும்

-அரசியல் செய்வதற்கான அடிப்படை இலக்கணமாய் வின்ஸ்டன்ட் சர்ச்சில் சொன்னது.

புகழுக்காக நீங்கள் போடும் தூண்டிலில்
புழுவாக எளிமை மட்டும் இருக்கட்டும் என்றார் அண்ணா.காலப்போக்கில் இது முற்றிலும் மாறிவிட்டது.டை அடித்த, பேசியல் செய்த முகம்,விலை உயர்ந்த ஆடை என அரசியல்வாதிகளின் முகமும் அரசியலும் மாறிவிட்டது. பொதுக்கூட்டங்கள் மாலை நேர பல்கலை கழகம் என வர்ணிப்பர்.காரணம் இலக்கியம் உலக வரலாறு என மிளிறும். இன்று வசைபாடுதல் மட்டுமே பிரதானமாய் இருப்பது வருத்தத்திற்குரியது.

*சட்டசபை நடக்காத காலத்தில் தினசரி அலுவலகம் வர வேண்டும்.

*நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொகுதிக்குப் போக வேண்டும்.

*வெளியூர்க்காரர்கள் வேறு தொகுதியில் ஜெயித்தால் அந்ர தொகுதிக்கே குடி பெயர்ந்திட வேண்டும்.என சட்டம் வந்தால் மட்டுமே சாமானியர்களின் எண்ணம் நிறைவேறும்.

*குதிரை பேரம்- முற்காலத்தில் குதிரைகள் வாங்க பண்டமாற்று முறையில் மிளகு,தங்கம் கொண்டுபோய் கடல் கடந்து போய் வாங்கி வந்திருக்கிறார்கள்.horse trading என்பது குதிரை பேரம் என்று எம்.எல்.ஏக்களை வாங்க பயன்படுத்திக் கொண்டனர்.

*நாடாளுமன்றத்தில் ஊழல் புகாருக்கு ஆளான டால்மியா குறித்து ஆதாரங்களுடன் ஃபெரோஸ் காந்தி நேருவுக்கு எதிராக பேசியுள்ளார்.இவர் நேருவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது

*பந்தல்கால் மரங்களை நடும் பணியில் இருந்த யானை, குழியில் பூனை படுத்திருந்ததால் கம்பத்தை நடவில்லை.ஆளும் கட்சி என்ற மரத்தை பூனை மீதுநடாத யானையைப் போல் சபாநாயகர் இருந்து எதிர்க்கட்சியை காக்க வேண்டும்-அண்ணா

*சாதாரண பேச்சு கவர்ச்சிக்கரமான தேர்தல் முழக்கமாக மாறும்போது மக்களை யோசிக்க வைக்கிறது.

மக்களும் அரசியலை கவனிக்காமல் இருப்பது அரசியல்வாதிகளுக்கு ப்ளஸ்ஸாக போய்விட்டது. ஓட்டுப் போட்டதும் அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கச் சென்றுவிடுகின்றனர்.ஐந்து ஆண்டு கழித்து மக்கள் ஆட்சியாளர்களை வெறுப்பதும்,மற்ற தலைவரை நம்புவதும் தொடர்கதையாகி விட்டது. இணையத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு பதிவிட்டால் ஓடிவந்து திருத்தும்நாம் தான் அரசியலில் என்ன நடந்தாலும் தேமே என்று இருக்கிறோம்.

*தேர்தல் களம் என்பது நாம் வேறு வழியில்லாமல் அரசியலைக் கவனிக்கும்
நேரம்
-ஜெயமோகன்

அரசியலை கற்பதை விட புரிந்து கொள்வோம்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment