ஒரு தத்துவவாதி வாழ்வின் பிடிபடாத சங்கதிகளை ஒன்று திரட்டி கேள்வியாக்குகிறான். கேள்வி என்பதே தேடலின் கருவிதானே. அதைச் சுருட்டிப் பிசைந்து வட்டமாய் ஒரு பந்தாக்கித் தனிமையில் அமர்ந்து அதை அசைத்தும், எறிந்தும், சுவற்றிலடித்தும் பார்க்கிறான். மெல்ல கேள்விகள் சிடுக்குகளை நோக்கி சில விடைகளைத் தருவதாக உணர்ந்து கொண்டு அந்த சங்கேதங்களை மொழியில் குறித்துக் கொள்கிறான். சில கேள்விகளுடனான போராட்டத்துடன் அவனுக்கான நேரம் முற்றிவிடுகிறது, அவனது குறிப்புகளிலிருந்து அவனது மாணவர்கள் தன்னை முன்னோக்கி நகர்த்திக் கொள்கிறார்கள்.தேடல் எனும் பந்து தொடர்ந்து எறியப்படுகிறது-கோ.கமலக்கண்ணன்
No comments:
Post a Comment