Monday, 6 January 2025

வாழ்க்கை என்பது இறுதியில் நினைவுகளின் சேகரமாகவே எஞ்சப்போகிறது. நம்முடைய நிகழ்காலமே அத்தகைய நல்நினைவுகளுக்கான முதலீடுதான். அப்படி ஏராளமான நினைவுகளைச் சேமிக்க வேண்டுமெனில் வெறுமனே எண்ணங்களிலோ பகற்கனவுகளிலோ உழன்றால் போதாது. நீங்கள் பார்வையாளராக அகன்று இருந்தால் வேலைக்காகாது. எதிலாவது குன்றா ஊக்கத்துடன் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். இன்பங்களில் திளைக்க வேண்டும். பயணம், சாகசம், காதல்கள், வாசிப்பு, அறிவுத்தேடல் எனப் பொருட்படுத்தத்தக்கச் செயல்களில் ஆழ்ந்துபோக வேண்டும். அனுபவப் பெட்டகமாக மலரவேண்டும். சாதாரண அன்றாட வேலைகளில் அதுபோன்ற உணர்வாழம் மிக்க நினைவுகளை ஈட்ட முடியாது. முதுமையில் நினைத்து நினைத்துச் சுவைப்பதற்கு எண்ணற்ற நிகழ்வுகளும் தருணங்களும் மனத்துள் பொங்கி வந்தால் மட்டுமே உங்களது வாழ்க்கையை முழுவீச்சில் வாழ்ந்திருக்கிறீர்கள் எனப் பொருள்.

No comments:

Post a Comment