அப்பா ஒரு ஜீவநதி...
இயல்பாக இருப்பது...எளிமையாக வாழ்வது...
வாழ்வை அமைதியாக எதிர்கொள்வது...
இவைதாம் என் அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த வாழ்க்கை.
அப்பாவை நினைக்கும்பொழுது 'தாவோ தே ஜிங்' நூலில் நான் படித்தது நினைவில் வருகிறது:
"மிகச் சிறந்த நல்ல தன்மை நீர் மாதிரி. நீர் எல்லாப் பொருளுக்கும் நன்மை செய்கிறது
என்றாலும் அது எதனுடனும் போட்டி இடுவதில்லை".
அப்பா எனக்கு முன்னால் ஒரு ஜீவ நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறார்...
அனைவருக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
-பழநிபாரதி
No comments:
Post a Comment