விளிம்பு காக்கும் தண்ணீர்
.............................................
கொடிவிட்ட தண்ணீர்
தரையில் ஓடியது. ஓடி
சற்றுத் துாரத்தில் நின்றுவிட்டது
வழிதெரியாதது போல.
தொங்கும் மின் விசிறியின் காற்று
தண்ணீரை அசைக்கிறது.
மேலே தொடர்ந்து செல்ல
தண்ணீருக்கு விருப்பமில்லை
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.
காற்றினால் கலையும்
தன் விளிம்புகளை
இறுகப் பிடித்துக்கொண்டு
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.
-ஞானக்கூத்தன்
No comments:
Post a Comment