Tuesday, 19 July 2016

கவிதை-விக்ரமாதியன்


மேலும் மேலும்
 குழப்புகிறார்கள்
 மேலும் மேலும்
 கொள்ளையடிக்கிறார்கள்
 மேலும் மேலும்
 நோகடிக்கிறார்கள்
 மேலும் மேலும்
 கவலையூட்டுகிறார்கள்
 மேலும்மேலும்
 யோசிக்கவைக்கிறார்கள்
 மேலும்மேலும்
 தொந்தரவுபடுத்துகிறார்கள்
 மேலும் மேலும்
 கலவரப்படுத்துகிறார்கள்
 மேலும்மேலும்
 பதறச்செய்கிறார்கள்
 மேலும் மேலும்
 கேள்வி கேட்கிறார்கள்
 மேலும் மேலும்
 விமர்சிக்கிறார்கள்
 மேலும் மேலும்
 பயப்படுத்துகிறார்கள்
 மேலும் மேலும்
 கோபம் கொள்கிறார்கள்
 மேலும்மேலும்
 பொய்சொல்கிறார்கள்
 மேலும்மேலும்
 கோழையாகிறார்கள்
 மேலும் மேலும்
 வாழவே விருப்பம் கொள்கிறார்கள்
 மேலும்மேலும்
 சாவைத் தள்ளிப் போடுகிறார்கள்
 மேலும் மேலும்
 என்ன இருக்கிறது
 மேலும் மேலும் எனும்
 மனசுதான்
 மேலும் மேலும்
 என்ன எழுத.
--விக்ரமாதித்யன்

No comments:

Post a Comment