ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் பேசப்போன கல்கி அவர்களிடம், ' சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும் ? " -என்று கேட்டதற்கு அவர் இப்படி கதை சொல்லி விளக்கம் கொடுத்தார். " ஒரு கிழட்டு குருட்டு பிச்சைக்காரன் முன்னால் திடீரென கடவுள் தோன்றி .. " உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்..தருகிறேன் " -என்றாராம். அதற்கு அந்த புத்திசாலி பிச்சைக்காரன், " என் மனைவி மூன்றாம் மாடியில் அமர்ந்து கொண்டு, என் பேரன் பேத்திகளுக்கு தங்கத்தட்டில் சோறு ஊட்டுவதை நான் பார்க்க வேண்டும்."-என்றானாம். அவனது வரம் நிறைவேற வேண்டுமானால்,அவனது முதுமைபோயி இளமை திரும்ப வேண்டும். கல்யாணம் ஆகவேண்டும். பிள்ளைகள் பிறந்து பேரன் பேத்தி என்று சந்ததிகள் வளரவேண்டும். மூன்று மாடி வீடு கொண்ட வசதியான வாழ்க்கை அமையவேண்டும். இப்படி எல்லாமும் அடங்கியதாக சுருங்கச் சொல்லி விளங்குவதாக சிறுகதை அமையவேண்டும்" என்றாராம் .
No comments:
Post a Comment