[04/05, 8:08 am] TNPTF MANI: தள்ளு/இழு
இப்புறம் நான்
இழுப்பது தெரியாமல்
அப் புறம் நீ
தள்ளிக்கொண்டிருந்தாய்
அப்புறம் நீ தள்ளுவது அறியாமல்
இப்புறம் நானிழுக்க
கொஞ்சம் திரைவிலைக்கியது
ஒற்றை மரக்கதவு
எதிர்பாராவொரு வேளையில்
என்னெதிரே நீ
உன்னெதிரில் நான்
கடக்கும் கணங்களுடன் நகராமல்
உறைந்து நின்றோம்
அப்போதுதான் அது நடந்தது !
நீ வந்தாய்
என் உள்ளே
நான் சென்றேன்
உன் உள்ளே
-படித்தது
[04/05, 5:46 pm] TNPTF MANI: குத்தாத முள்ளுண்டோ
கொத்தாத பாம்புண்டோ
பத்தாத சீமெண்ணெய் தானுண்டோ?
-சுஜாதா எழுதி முடிக்காத வெண்பா
[04/05, 6:59 pm] TNPTF MANI: கேள்வித்தாளின் பின்புறம் வரையப்பட்ட ஓவியத்தில்
பூர்த்தியாகியிருந்தது
அவன் தேர்வு
முடித்த மிச்ச நேரம்
-ப.பி
[04/05, 7:01 pm] TNPTF MANI: எல்லோரையும் தட்டி
கேட்க வைத்துவிடுகிறது
"கதவு"!
No comments:
Post a Comment