அமீர்கான் தயாரிப்பில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ள படம்
தொலைந்து போன பெண்கள் எனும் அர்த்தம் தரும் டைட்டில் தான்
லாபட்டா லேடிஸ்.செங்கல் செல்போன் உள்ள 2000ன் துவக்கத்தில் நடக்கும் கதை.
படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு குக் கிராமத்தில் திருமணம் நடைபெறுகிறது.பொது இடத்தில் பெண்கள் யாரையும் பார்க்காமலிருக்க முக்காடிட்டு நடக்கும் வழக்கமுள்ள ஊரில், தீபக் எனும் மணமகனுக்கு மணமுடித்து வைக்கின்றனர். மாப்பிள்ளை சைடுல ஒருத்தர் கூட இல்லை.
திருமணம் முடித்து தனது சொந்த ஊருக்கு தன் புது மனைவியுடன் கிளம்புகிறான்.. நெருக்கடியான ரயிலில் பயணம் செய்யும் போது அதே இருக்கைக்கு அருகே இன்னொரு புது மணத் தம்பதியினரும் பயணிக்கின்றனர். இரண்டு பெண்களுக்கும் ஒரே விதமான சிவப்பு நிற உடை + முக்காடு.
ரயில் காலதாமதமாவதால், நல்லிரவில் தீபக்கோட ஸ்டேஷன் வருகிறது.உண்மையான மனைவி உறங்கிக் கொண்டிருக்க, தீபக் இரயிலில் இருந்து இறங்கும் அவசரத்தில் பெட்டியில் இருந்த மற்றொருவரின் மனைவியுடன் அந்த ஸ்டேஷனில் இறங்கி விடுகிறான். அந்த பெண்ணுக்கு தான் இடம் மாறி இறங்குவது அறிந்தும், அவள் அமைதியாக தீபக்குடனே அவனது கிராமத்துக்கு செல்கிறாள்.
தீபக்கின் உண்மையான மனைவி வேறு ஒரு ஊரில் இறங்கி தவிக்க, அங்கு அவளுக்கு அந்த ஸ்டேஷனில் டீக்கடை நடத்தும் ஒரு வயதான பெண்மணி ஆதரவு அளிக்கிறார்.
இறுதியில் புது மணத்தம்பதி சேர்ந்தார்களா?புது மணப்பெண் என்ன ஆனாள் என்பது மீதிக்கதை.
*இடம் மாறிப்போன இரண்டு பெண்களின் நிலைதான் கதையாக பயணிக்கிறது. காவல் நிலைய புகார், ரயில் நிலையத் தொடர்பு என அன்றைய தொழில் நுட்பத்தில் எவ்வளவு பின் தங்கியுள்ள கோல்டன் நாட்கள் தெரிகிறது
*விருப்பமில்லாத மற்றொரு மணப்பெண் அமைதியாக தீபக்குடன் பயணிக்கிறாள்.ஆரத்தி எடுக்கும் போது வரும் அதிர்ச்சி பார்க்கும் நமக்கும் ஏற்படுகிறது
*புதிதாய் வந்த மணப்பெண்வந்த அன்றே செங்கல் செல்போனின் சிம்மை எரித்துவிடுகிறாள். இதனால் தொடர்பு கொள்ள இயலவில்லை என லாஜிக் வொர்க் அவுட் ஆகிறது
*தொலைந்து போன உண்மையான மனைவி பதறி அழும் இடம் இயலாமையை காட்டுகிறது. யாரையும் நம்பாமல் பின்னர் நம்பிக்கையுடன் நகர்வது பெண்ணின் தன்னம்பிக்கையை காட்டுகிறது
*கையிலிருக்கும் மருதாணியில் தீபக்கின் பெயர் அழிவதை பார்த்து இனி சந்திப்போமா என சந்தேகத்தையும் கூட்டுகிறது.
*பெண்ணை ஒருவர் துணையின்றி அனுப்புவார்களா?ஆணின் உறவினர் ஒருவரும் வரவில்லையா?கடிதப் போக்குவரத்தில் பெண் வீட்டார் விசாரிக்கவில்லையா?புதுப்பெண்ணை விருந்தாளி போல் தங்க வைப்பார்களா? என அடுக்கடுக்கான கேள்வி இருந்தும் அந்த விளிம்பு நிலை குடும்ப கிராமச் சூழல் கோவாக்சின் போட்டவர் போல் கேள்வி கேட்காமல் கோவிஷீல்ட் போட்டவர் மாதிரி அமைதியாய் கவனிக்க வைக்கிறது.
ஒருவரிக்கதை,நல்ல திரைக்கதை வித்தியாசமான அனுபவம், சினிமாத்தனம் இல்லாமல் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment