#டோட்டோ_சான்
ஜப்பானிய மொழியில்: டெட்சுகோ குரோயாநாகி..
தமிழில்: அ.வள்ளிநாயகம், சொ. பிரபாகரன்..
பெரும்பாலான கல்வி சார்ந்த பயிலரங்குகளுக்கு நான் செல்லும்பொழுது சில புத்தகங்கள ஆசிரியர்கள் படித்திருக்கனும்னு பரிந்துரைப்பாங்க...அதில் இந்த நூல் நிச்சயமா இடம்பெற்று இருக்கும்.
.நானும் புக் ஸ்டோர் எல்லாவற்றிலும் தேடி தேடி அலைந்தேன்...
கடைசியில் "தோளுல ஆட்டுக்குட்டிய போட்டுகிட்டு ஒரு விவசாயி ஊரு பூரா ஆட்டுக்குட்டிய தேடுனான்" கதையா எங்க ஸ்கூல் லைப்ரரி'லயே இந்த புக்'க பார்த்து அப்டியே ஷாக் ஆகிட்டேன்.....
சரி சரி வள வளனு கதை வேண்டாம்..நேரா புத்தகத்துக்குள்ள போயிடுவோம்.. ஏன்னா நம்ம கனவுலகத்துல வாழனும்னு நினைக்கிற வாழ்க்கையை இந்த பொண்ணு வாழ்ந்திருக்கு..
வாங்க பாக்கலாம்..
கதையில பேரெல்லாம் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்...அந்த டீச்சர எனக்கு புடிச்சுபோனதால அவர மட்டும் தூக்கத்துலயும் மறக்கமாட்டேன்...கனவு ஆசான் .அவர் பேரு திரு: கோபயாஷி..
புத்தகத்த திறந்தவுடனே இந்த பொண்ணு டோட்டோசான் புது பள்ளிகூடத்திற்குதான் போகும்..ஏன்னா 5 வயசு பொண்ண" நீ ஸ்கூல் படிக்க லாயக்கில்ல"னு டிசி கொடுத்துடுவாங்க..பழைய ஸ்கூல்ல...
இத அவங்கம்மா அந்த பொண்ணுகிட்ட காட்டிக்காம "வாம்மா புது ஸ்கூலுக்கு போகலாம்" னு அழைச்சுட்டு போவாங்க..
நம்ம அம்மாவா இருக்கனும், பனைமரத்து கருக்குமட்ட பீஸ் பீஸ் 'ஆ போற அளவுக்கு அடிப்பாங்க..
அங்கேதான் தலைமை ஆசிரியர் கோபயாஷி இருந்தார்.
."உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" அப்டினு அந்த பாப்பா அவர்கிட்ட சொல்லும்...
"சரி கேட்கலாமே...சொல்லு"..
" என் பேரு டோட்டோசான்......ன்னு ஆரம்பிச்ச அந்த பாப்பா பேசுது..பேசுது.....பேசிகிட்டே இருக்கு...ஆமாம் ரொம்ப நேரமெல்லாம் பேசல...
ஒரு 4 மணிநேரம்தான்..நான்கு மணிநேரம் இடைவிடாமல் பேசி பேசி அந்த பாப்பாவுக்கே டயர்டு ஆச்சு...
ஆனால் கேட்டுக்கொண்டிருந்த அந்த ஆசிரியருக்கு டயர்டு ஆகாம கேட்டுட்டே இருக்கார்....
இது எவ்வளவு பெரிய வரம்...நமது 10 நிமிஷ பேச்சையே அதாவது மனதில் உள்ள கஷ்டங்கள் , சோகங்களை நம் முன்னால் காதுகொடுத்து கேட்டாலும் , பின்னால் அறுவை, ப்ளேடு போடுறான்'னு சொல்லிட்டு போற உலகத்துல இருக்கும்பொழுது, அந்த காலம் அதாவது 1930 வாக்கில் இவ்வளவு பெரிய அறிவு, மனப்போக்கு யாருக்கு வரும்...
அவரின் தொலைநோக்குப்பார்வை மிகச்சிறப்பு..
அது மட்டுமில்லாமல் அப்பெண்ணிடம் அடிக்கடி " நீ நல்ல பெண் தெரியுமா??" என்று சொல்லி சொல்லி மனதில் பதிய வைக்கிறார்....
.உண்மையில் அந்த பெண் சரியான சுட்டி, குறும்பு...மற்றும் மற்றோருக்கு சில உதவிகள் செய்தாலும் ,சில நேரங்களில் தொல்லைகள் செய்யும் பெண்..
அடுத்து, அப்பள்ளியின் பெயர் :டோமோயி
வித்தியாசம் வகுப்பில், பாடத்தில் மட்டுமல்ல... வகுப்பு அறையிலுமே...ரயில் பெட்டிகள்தான் வகுப்பறை...
இப்பள்ளி வந்தவுடனே பள்ளியை மிகப்பிடித்துவிட்டது..டோட்டோசானுக்கு...
விரும்பும் நேரத்தில் கத்தலாம்...விரும்பிய பாடங்கள் படிக்கலாம்..யாரும் திட்ட மாட்டார்கள்...உதவி செய்வார்கள்...அதனால் மிகவிரும்பி பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டாள்...
அடுத்து உணவு கடல் உணவு, நாட்டு உணவு என்று சரிவிகித உணவு,
யாரிடம் எந்த உணவு இல்லையோ, இருக்கும் உணவை பகிர்ந்து சாப்பிடுவர்...இல்லையெனில் இல்லாதோர்க்கு கோபயாஷி கொடுப்பார்..
அடிக்கடி பள்ளி நடைகள் இருக்கும்..பள்ளி நடை என்பது இயற்கையை நேரடியாக கற்றுக்கொள்வது..."இது வண்ணத்துப்பூச்சி ..இதற்கு இத்தனை கால்கள் இருக்கும்..இது பல வண்ணங்களில் இருக்கும் " என்று வரியில் படிக்காமல் தான் கற்றுக்கொள்கிறோம் என்று தெரியாமலேயே கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தெளிவாக உணர்ந்து கொள்ளுதல்...
"செம்ம நடை இல்ல"!!! மகிழ்வோடே கூவுகின்றனர் குழந்தைகள்...
அடுத்து ஒருமுறை பள்ளி செப்டிக் டேங்கின் சாக்கடையில் தனக்கு பிடித்த கைப்பை விழுந்துவிட அதை கண்டுபிடிக்கும் விதமாக அந்த சாக்கடை முழுவதையும் வெளியேற்றி விடுகிறாள்..நமது நாயகி..அவற்றைக்கண்ட கோபயாஷி எதுவும் திட்டாமல் " சரி பரவாயில்லை... கைப்பை கிடைத்தவுடன் வெளியில் கிடைக்கும் சாக்கடையை எடுத்து உள்ளே போட்டு விடுவாய்தானே?" என்று சென்று விட்டார்.அவரின் சொல்லின் மரியாதையை காப்பாற்றும் விதமாக எல்லாவற்றையும் சாக்கடையில் திரும்ப சேர்த்ததுதான் அந்த சுட்டிப்பெண்ணின் நன்றியுணர்ச்சி...அவ்வளவு பெரிய செயல் செய்தும் திட்டாததற்காக..
தொடரும் ஆச்சரியங்கள்...
Tuesday, 23 August 2016
டோட்டோசான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment