Thursday, 18 August 2016

சுஜாதா பதில்கள்

? மழைத்துளி உருண்டையாக இருப்பதற்கு புவி ஈர்ப்பு விசை தானே காரணம் ?
! இல்லை. Surface Tension என்னும் மேற்புற அழுத்தத்தினால் உருண்டை வடிவம்தான் ஸ்திரமானது.

? பைபாஸ் சர்ஜரி என்றால் என்ன ?
! இதயத்தில் குழாய் ரிப்பேர்.

? கை அரித்தால் காசு வருமாமே... உண்மையா ?
! கை நீட்டினால் வரலாம்.

?அப்பளம் ஆயிலில் பொறிக்கப்படுவது ஏன் ? நீரில் அதை பொறிக்க முடியாதா ?
! நீர் கொதிப்பது நூறு டிகிரி சென்டி கிரேடில். எண்ணை கொதிப்பது சுமார் 257 டிகிரி. இந்தக் கொதிநிலை வேறுபாடுதான் காரணம்.

? கனகதாரா ஸ்தோத்திரத்தை பக்தியுடன் சொன்னால் இப்போது தங்க மழை பொழியுமா ?
! ம்ஹூம். ரொம்ப கிட்டத்தில் நின்று கேட்டால் எச்சில் மழைத்துளி பொழியும்.

? உங்களால் இன்று வரை மறக்க முடியாத மனிதர் ?
! ஒருவரின் வாழ்நாளில் மறக்க முடியாத மனிதர்கள் குறைந்த பட்சம் 48 பேர் இருப்பார்கள்.

? நமது கூட்டுக் குடும்பங்கள் சிதைந்ததற்கு பிரதான காரணமாக எதைச் சொல்வீர்கள் ?
! சின்னச் சின்ன வீடுகளும், சின்னச் சின்ன மனங்களும் தான்.

-சுஜாதா பதில்கள்

No comments:

Post a Comment