Tuesday, 13 April 2021

வரலாற்றுச்சுவடுகள்பாகம்-2


#

#

1968முதல் 1984 வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் அரசியல் நிகழ்வுகளை சுவைபட தந்திருக்கிறது புத்தகம்.

*உலகம்


உலக நிகழ்வில் முதலால 1968 ஏப்ரல் 4ம் தேதி ஜேம்ஸ் ஏரல் எனும் வெள்ளையரால் மார்ட்டின் லூதங் கிங் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை பற்றிய விபரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சந்திரனில் மனிதன் கால்பதித்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளனர்.இந்தியா விடுதலையடைந்தவுடன் பாகிஸ்தான் விடுதலை பெற்றது. ஆனால் இந்தியா போல அமைதியான அரசியல் அங்கு இல்லை.

பாகிஸ்தான் விடுதலை அடைந்து 1948 செப்டம்பர் 11ல் உடல்நலமின்றி ஜின்னா உயிருழந்தார்.அதன் பின் அரசியல் சூறாவளி ஆரம்பித்தது. ஜின்னாவுக்கு பின் வலிமையான தலைவரான லியாகத் அலிகான் சுட்டுக்கொல்லபட அயூப்கான் ஆட்சிக்கு வந்தார்.இந்தியாவுடனான போரில் கெட்ட பெயர் ஏற்பட்டதால் யாகியாகான் பொறுப்புக்கு வந்தார். தொடர்ந்து பூட்டோ,ஜியா, முஜிபுர் ரகுமான் சுடப்பட்டது,வங்கத்தின் விடுதலை பற்றி பேசுகிறது.

#இந்தியாவில்

இந்திய அரசியலில் முதலில் புயலை கிளப்பியது ஜனாதிபதி தேர்தல்தான். விவி கிரியா, சஞ்சீவரெட்டியா எனும் நிலைப்பாட்டில் கட்சி ஒருநிலையும்,இந்திராகாந்தி ஒரு நிலைப்பாடும் எடுத்ததால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.மேலும் எமர்ஜென்சி,
ஜனதா கட்சி ஆட்சியமைத்தது, சரண்சிங் பிரதமாரானது,மீண்டும் இந்திரா பிரதமரானது வரை விளக்கியுள்ளனர்.

1980ம் 23ம்தேதி காலை சஞ்சய் காந்தியின் விமான விபத்தும், ராஜிவின் வருகையும், மேனகா காந்தியின் எதிர்ப்பும்,பொற்கோவில்
போராட்டத்தை தொடர்ந்து இந்திரா காந்தி சுடப்பட்டார்.ராஜிவ் பிரதமரானது சொல்லப்பட்டிருக்கிறது.


தமிழகத்தின் வேண்டுகோளை புறக்கணித்து கச்சத்தீவை தாரைவார்த்த சம்பவம் 1974ல் தான் நடந்தேறியது.எம்.ஜி.ஆர் பாணியில் ஆந்திராவில் என்.டி.ஆர்.ஆட்சியைப் பிடித்தார்

#தமிழகத்தில்

1968முதல் 84 வரை பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றன.அண்ணா ஆட்சிக்கு வந்தபின் ஒருரூபாய்க்கு ஒரு படி அரிசித்திட்டம் பெரு வரவேற்பை பெற்றது.தொடர்ந்து அரசு லாட்டரியை அறிமுகம் செய்தது. விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு எனும் வாசகத்துடன் அமலுக்கு வந்தது.அண்ணாவின் மரணமும்,புதிய  முதல்வராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டதன் நிகழ்வுகவுளும்,பின்னணியும், எம்.ஜி.ஆரின் விலகலும், அதிமுக உதயமாகி ஆட்சியை பிடித்ததும்
அவரின் அமைச்சரவை முதல் சாதனைகள் வரை விவரிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி,காமராஜர்,பெரியார் மறைவு குறித்தும், அவர்களைப் பற்றிவிரிவான கட்டுரைகளும் உள்ளது.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment