#30நாள்_வாசிப்புப்போட்டி
ID:30D0044
நாள்-15
புத்தகம்-21
வால்காவிலிருந்து கங்கை வரை
-ராகுல சங்கிருத்தியாயன்
எட்டாயிரம் ஆண்டுகளுக்குள்ளான மனிதவாழ்க்கையை சித்தரித்துக் காட்டும் ஒரு வரலாற்று ஆய்வு நூல். இந்நூல் ஒரு இடதுசாரியின் பார்வையிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கிறது, நூலானது இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே 1944 ல் வெளிவந்துள்ளது. மொழியின் மூலம் இந்தியில் இருந்தாலும் பல மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு பல பதிப்புகளையும் கண்டிருப்பதே இந்த நூலின் தனிச்சிறப்பெனலாம். தமிழில் 1949 ம் ஆண்டு கண, முத்தைய்யா அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
20 தலைப்பில் கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. ஆரம்பக் கதைகளான நிஷா,திவா,அமிர்தாஸ்வன்,புருகூதன் என்ற நான்கு கதைகளும் கி.மு.6000 இல் இருந்து 2500 வரை உள்ள சமுதாயத்தினைச் சித்தரிக்கின்றது. தாய்வழிப்பட்ட சமூகமாய் இருந்து மெல்ல மாறி தந்தைவழி சமூகமாக மாறியது..
முதல் கதையில் வரும் நிஷா அவளுடைய வீரம் குடும்பத்தை வழிநடத்தும் பாங்கு,அதே நேரத்தில் தனக்கு அடுத்த நிலையில் தன் மகளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அவளை அழிக்கும் நிலையாக சொல்லப்பட்டுள்ளது. இச்சமூகத்தில் தனியே சொத்துக்கள் ஏதும் இல்லாத பொதுவுடைமை சமூகமாக இருக்கிறது.
முதல் கதையில் வரும் நிஷா அவளுடைய வீரம் குடும்பத்தை வழிநடத்தும் பாங்கு,அதே நேரத்தில் தனக்கு அடுத்த நிலையில் தன் மகளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அவளை அழிக்கும் நிலையாக சொல்லப்பட்டுள்ளது. இச்சமூகத்தில் தனியே சொத்துக்கள் ஏதும் இல்லாத பொதுவுடைமை சமூகமாக இருக்கிறது.
இரண்டாம் கதையில் குழுவாக பரிணமித்து பெண்ணே தலைவியாய் இருக்கிறாள். மூன்றாம் கதையில் ஆணிற்கு அதிகாரம் மாறுகிறது.
முதலில் பொதுவுடைமை சமூகமாக துவங்கி பின்னர் குழுவாக இணைந்து விவசாயம் செய்தல்,போர்க்கருவிகள் செய்தல்,நெருப்பு போன்றவற்றின் வளர்ச்சியில் பண்டமாற்று முறை கடைபிடிக்கப்பட்டது.அடுத்து ஆண்டான் அடிமை சமூகத்தில் பெண்ணை அடிமைப்படுத்துதல்,ஆரியர் வருகை, வேதகால முறை துவங்கி சாதி வந்தது, இன்ன பிற சமயங்களான புத்தம்,இஸ்லாமியம்,பிரிட்டிஷார் வருகைக்குப்பின் கிறிஸ்துவம் என மதங்களின் வருகையும் மன்னராட்சி ஏற்படுதல்
மன்னராட்சி வந்தபின் நிலபிரபுத்துவத்துவம், நில ஆக்கிரமிப்பு, அபகரிப்பு,கிளர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக முதலாளித்துவம் ஊடுருவுகிறது.
வால்கா நதிக்கரையில் இருந்து தொடங்கும் கதை ,அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்திய எல்லைக்குள் வரும்பொழுது இங்கு மக்கள் நாகரிக நிலையில் இருப்பதைக் காட்டுகின்றார்.
ஆரியர் கலப்பு,இஸ்லாமியர் கலப்பு ,ஆங்கிலேயர் கலப்பு எனப் படிப்படியாக விரித்துச் செல்லுகின்றார் ஆசிரியர்.கி.பி.1942 வரை நீண்டு முடிகின்றது.
வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.
ஆரியர் கலப்பு,இஸ்லாமியர் கலப்பு ,ஆங்கிலேயர் கலப்பு எனப் படிப்படியாக விரித்துச் செல்லுகின்றார் ஆசிரியர்.கி.பி.1942 வரை நீண்டு முடிகின்றது.
வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.
அக்காலத்தில் எப்படி இயற்கை வழிபாட்டிலிருந்து உருவ வழிப்பாட்டிற்கான முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தேவர்கள் அசுரர்களும் உருவான கதைகளையும் சொல்லி நகரத்தியிருக்கிறார்.
இந்நாவல் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் படைத்து மனிதனின் வேர்களை வகைப்படுத்தியுள்ளார்.
ஆரிய சமூகம் , அடிமை வம்சம், இந்தோ ஆரிய வரலாறு, மொழிகளின் தோற்றம் என விரிந்துக் கொண்டே செல்லும் நாவலின் பலமாய் கருதுவது அதன் வாழ்வியல் முறைகளை கதாபாத்திரத்தில் நிலை நிறுத்தி அதனூடாகவே செல்வதே.
*நாம் மனிதனாகப் பிறந்ததின் கடமையைச் செய்வதற்கு எப்பொழுதும் தயாராய் இருக்க வேண்டும்.
*ஒரு இலட்சியவாதியாகிவிட்டால் நம்முடைய பொறுப்புகள் இன்னும் அதிகரித்துவிடும்
*இந்தியாவை வைத்துக் கொண்டு அநேக தவறுகளும் ஏமாற்றங்களும் ஏற்படக்கூடும்.
*ஆகாயத்திலிருந்து குதிக்கும் சில மனிதர்களுக்கு மட்டும் உபயோகப்படும் சுயராஜ்ஜியம் நமக்குத் தேவையில்லை.
*நமது முதலாளிகள் வருவாயோடு, தேசிய வருவாயை ஒப்பிட்டுப் பார்த்தால் நமது இதயம் வெடித்துவிடும்
தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment