Tuesday, 13 April 2021

அணுஆட்டம்-சுப.உதயகுமாரன்






மூன்றாம் உலகப்போர் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது.ஆனால் நான்காம் உலகப் போரைப்ப்ற்றி எனக்குத் தெரியும். அங்கு மக்கள்,கல்,வில்கொண்டு போரிடுவார்கள்.ஏனெனில், அணு ஆயுதங்களால் இந்த உலகம் அழிந்து போயிருக்கும்.-ஐன்ஸ்டீன்

அணுமின் நிலையங்கள் மின்சாரம் தயாரிப்பதை தாண்டி,அணு ஆயுதங்களோடும் தொடர்பு உடையவையாக இருக்கிறது. இந்தியாவில் 100 அணுகுண்டு இருக்கிறதென்றால்,சீனாவிடம் 1000 அணுகுண்டு இருந்தால் உள்ளூர அச்சம் ஏற்படுகிறது.அணு ஆயுதம் வைத்திருப்பது உலக நாடுகளிடையே கவசம் போல் பயன்படுகிறது.

அணுமின் நிலையத்தில் நடைபெற்ற தீ விபத்துகள் பற்றி பேசுகிறது. செர்னோபில் விபத்து,கூடங்குளம் அணு உலையும் செர்னோபில் ரக அணு உலையைச் சார்ந்தவை எனக் குறிப்பிட்டு தாராபூர் முதல் ஜெய்தாபூர் வரை யாத்திரையும், கூடங்குளம் கடந்துவந்த பாதையும்,
அணுக்கதிர் வீச்சின் அபாயத்தையும் எடுத்துரைக்கிறார்.


மன்ஹாட்டன் திட்டமும், அணுகுண்டின் தந்தையான ராபர்ட் ஒபன்ஹெர்மர் வரலாறு, அணுமின் நிலையத்தை வடிவமைத்த என்ரிகோ ஃபெர்மி குறித்த தகவலும், அணு ஆயுதத்தால் நேரிட்ட கசப்பு அனுபவங்களும் எடுத்துரைத்துள்ளார்.

இந்தியாவில் அணுசக்தித் துறையின் துவக்கமும்,ஹோமி.ஜஹாங்கிர் பாபாவின் பங்கும்,இந்தியாவில் அணுசக்தித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியும்,அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா அமெரிக்கா இடையே கையெழுத்தானதும்,ஹைட் சட்டம் குறித்த வரைவும்,பொதுவாக அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பின்னுள்ள நாடகங்களையும் அறிய முடிகிறது.

உலகம் முழுக்க அணு உலைக்கு எதிரான போராங்களையும் கூடங்குளம் போராட்டத்தைப் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறுகிறார்.ஒவ்வொரு கட்டுரையிலும் ஏதோ ஒரு அறிஞரின் கூற்றினையும், போராளிகளின் முகங்களையும், சம்பவங்களையும் நமக்கு  எடுத்துக் கூறுகிறார்.


தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment