#30D0044
நாள்-28
புத்தகம்-46
"நின் வழியே செல்,உளருவோர் உளரட்டும்"
#
கம்யூனிஸ்ட் பத்தி என்ன நினைக்கிறீங்கனு யாராவதிடம் கேட்டால் அவர்களின் பதில் என்னவாய் இருக்கும்..அவங்க தேர்தலில் கூட்டணி மாறுவாங்க, உண்டியல் குலுக்குவாங்க, பெரிய இவங்க மாதிரி பேசுவாங்க என சொல்வார்கள்.அரசியலில் எல்லாக் கட்சிகளும் கூட்டணி மாறுவார்கள் தான்.ஆனால் கம்யூனிஸ்ட்கள் மாறினால் தான் குற்றம்.அவர்களின் நேர்மையை குறை சொல்லிவிட்டால், குத்திக்கிழித்துவிட்டால் தான்.. தம் குற்றவுணர்ச்சி குறையும் என்ற நம்பிக்கை.இப்படி கருத்து வேறுபாடுகள்,மக்களின் நம்பிக்கையிழப்பு,பணம் சம்பாதிக்க முடியாத நிலை என அனைத்து நிலைகளிலிருந்தும் இப்புத்தகம் அணுகுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவிழந்து வருவது ஏன்? மீண்டும் முதலாளித்துவம் ஆன்மீகமும் புது பலம் பெற்றது ஏன்? உள்ளிட்ட 41 வகையான கேள்விகளுக்கு புத்தகத்தில் பதிலளித்திருக்கிறார்.
வரலாற்று ரீதியில் முதலாளித்துவம் தோன்றிய வரலாறும், இன்றைய நிலையும், முதலாளித்துவத்தின் மீது ஏற்பட்ட கோபமும், உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றம் பற்றியும் ,இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் முதல் பகுதியில் கூறுகிறார்.
இந்தியாவில் இடதுசாரி இயக்கம் தோன்றிய வரலாறு ரஷ்ய புரட்சியின் முன்னிட்டு நடந்தது. 1917இல் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியை தொடர்ந்து, 1920 இல் இந்தியாவில் இடதுசாரி இயக்கம் தோன்றது. காங்கிரஸ் கட்சி பொதுமான ஆதரவு அளித்தது. விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்றவர் சிறைக்கு போகும்போது காங்கிரஸ் ஆகவும் வெளியே வரும்போது கம்யூனிஸ்டாகவும் வெளியே வந்தார்கள்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பல தலைவர்கள் இடதுசாரி சிந்தனையில் ஈடுபட்டனர். புரட்சி வேகத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறி நேதாஜி பார்வர்டு பிளாக் என்ற கட்சியை ஆரம்பித்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்தது, நேதாஜி ஹிட்லரை சந்திக்க காரணமாக இருந்த நிகழ்வு, ஹிட்லரின் ஐந்தாம் படை என பரப்பப்பட்ட பொய் என பல்வேறு வரலாற்று தரவுகளுடன் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய வரலாற்றை நமக்கு கூறுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் சமூகநீதி இயக்கத்தில் பங்கெடுத்தது, மக்களின் போராட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்துச் சென்றது குறித்து கூறுகிறார்.
மேலும் அக்காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்ததும், சோஷலிஸ்ட் கட்சியை நிராகரித்தது, அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரை பயன்படுத்திக் கொள்ளாததும், சாதிப் பிரச்சினை குறித்து பல்வேறு தடுமாற்றங்கள் இருந்ததும், தொழிலாளர் விவசாயிகள் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தனித்து செயல்பட்டதும், இந்திய மக்களின் யதார்த்த கருத்துக்களை நாம் உள்வாங்காமல் இருந்தது போன்ற பல்வேறு விமர்சனங்களையும் இப்புத்தகத்தில் கூறியுள்ளார்.
90களில் ரஷ்யாவின் வீழ்ச்சி என்பது கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சி ஆகவே உலகில் பல்வேறு மக்களால் பார்க்கப்பட்டது, நடுநிலை மனநிலை கொண்ட மனிதர்கள் கூட கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சியை தாங்கமுடியாமல் முதலாளித்துவத்தை நாடிச் சென்றனர். இன்றைய நிலையில் மக்கள் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் போராடி வெற்றி பெறுவதையும் மக்கள் விரும்புவது இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் ஒரே ஆதரவாக இடதுசாரி இயக்கங்கள் என்றும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
#ரசித்தது
*90களுக்குப் பிறகு 83 நாடுகளை ஆய்வு செய்ததில் 34 நாடுகளின் செல்வந்தர்களில் 60% சதவீதத்தினர் வருவாய் அதிகரித்து கொண்டே செல்வதும், 23 நாடுகளின் செல்வந்தர்களில் 40 சதவீதத்தினரின் வருவாய் குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது.
*இந்தியாவில் 2015இல் 50 சதவீதத்தினருக்கு எந்த அளவுக்கு சொத்துக்கள் உள்ளனவோ அதே அளவு சொத்துக்கள் 62 தனி நபர்களிடம் உள்ளன
*எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மார்க்சிய பொருள் காண்பது அறிவு.
*புரட்சிகரமாக பேசுவதை விட, எவ்வளவு மக்களை இயக்கத்தில் ஈடுபடுத்த முடிகிறது என்பதுதான் ஒரு தலைமையை தீர்மானிக்க சரியான அளவுகோல்
*உறிஞ்சப்படுவதையே உணரமுடியாத அளவுக்கு சுரண்டல் முறையில் விஞ்ஞான தொழில்நுட்பம், முதலாளிக்கு ஆயுதமாக கிடைத்துவிட்டது. இதனால் சுரண்டும் முதலாளியை, உழைக்கும் மக்கள் நேரில் பார்ப்பது அரிது. எனவே எதிர்ப்புணர்வு தோன்றுவதும் அரிதாகிவிட்டது.
*To buy peace,we have to pay the price
*Leaders are there-but there is no leadership
முதலாளித்துவத்தை உணர்ந்தவர்களால் கம்யூனிஸ்ட்களை எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள். காரணம் கம்யூனிஸ்டுகள் படித்தவர்களாகவும், விஷயம் அறிந்தவர்களாக இருப்பதாகவும் அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். முதலாளித்துவம் இன்று அதிதீவிர முதலாளித்துவம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. காலம் அதற்கு கடிவாளம் இட்டால் தான் நாம் கம்யூனிஸ்டுகளின் கருத்துக்களை நாம் உணர முடியும்
தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment