தமிழகத்தில் நீட்
-மணி
*தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது,அதைக்காப்பாற்ற தனிச்சட்டம் கொண்டுவந்து குடியரசுதலைவரின் ஒப்புதல் பெற்றார் முன்னாள் முதல்வர் ஜெ.
*வெவ்வேறு பாடத்திட்டம் இருக்கும் மாநிலத்தில் தமிழில் மட்டும் வினாத்தாள் இருந்தது மட்டும் நிம்மதி.சிபிஎஸ்சி அடிப்படையில் கேட்ட கேள்விகளில் 50% அவுட் ஆப் சிலபஸ்
*வழக்கமாக சிபிஎஸ்சி படிப்பவர்கள் 2முதல் 3% இடம் மட்டுமே கிடைக்கும்.இந்த ஆண்டு 50% மேல் பறிபோனது
*தமிழக அரசின் மருத்துவ கல்லூரி இடங்கள் 2880.அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு.435.மீதம் 2445.கடந்த ஆண்டு சிபிஎஸ்சி யில் படித்தவர் பெற்றது 75இடங்கள்.இந்த ஆண்டு சொல்லத்தேவையில்லை.
*நீட் தேர்வு வராது என்ற நம்பிக்கையில் விண்ணப்பிக்காதவர்கள் அதிகமிருப்பது சோகம்
*இந்த ஆண்டு நீட் எழுதியோர் 86000.இதில் 2000 பேர் மட்டும் CBSE,இதில் 1000க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைத்திருக்கும்
*ஆந்திரா,தெலுங்கானாவில் மாநில மாணவர்கள் மட்டும் சேரும் வகையில் சிறப்புச்சட்டம் இருக்கிறது.இங்கு அரசு மருத்துவ இடங்களில் இதர மாநில மாணவர் சேர முடியாது
*இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் அரசு மருத்துவக்கல்லூரிகள் 25 உள்ளன.அடுத்து மகாராஷ்டிரா 22.உ.பி.17 மட்டுமே.இதனால் பலரின் கண் விழுந்தது தமிழகத்தில்
*பேராசிரியர் கிருஷ்ணன் நல்ல பெருமாள் கட்டுறையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இனி உடனடியாக நாம் செய்ய வேண்டியவைகள்:
1. தமிழகப் பாடத்திட்டத்தை சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாகத் தரம் உயர்த்துதல்.
2. கற்பித்தலை ‘அறிவு பெறும் கற்றல்’ என்ற முறையில் மாற்றியமைத்தல்; கற்றலும், கற்றலின் பயன்பாடும் கூர்மையாகும் விதத்தில் பயிற்றுவித்தல்.
3. தேர்வு முறையைக் ‘கற்றல்’-ஐ அடிப்படையாகக் கொண்டு, சிறந்த கல்வியாளர்கள் மூலம் மாற்றியமைத்தல்.
4. வினாத்தாள்கள் ‘நீட்’ போன்ற தேர்வுகளுக்கு கேட்கப்படுவதைப்போல் தரமாக இருக்குமாறு அமைத்தல். இதன்வழி, தனியாக ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்குப் பயிற்சி மையங்களுக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தை தேவையற்றதாகச் செய்தல்.
5. ஆசிரியர்களின் தரத்தைத் தொடர்பயிற்சிகளின் மூலம் மேம்படுத்துதல்.
6. கிராமப் பள்ளி மாணவர்களுக்கு தாராளமான நிதியுதவியும், பயிற்சியும் தர பல்லாயிரம் தன்னார்வலர்களை களமிறக்கல்.
7. தொண்டு நிறுவனங்களும், அரசும், அத்தகைய பணிகள் செய்பவர்களுக்குச் சிறப்புச் செய்தல்.
8. ஒவ்வொரு கல்லூரியும் ஒரு சில கிராமப் பள்ளிகளையாவது தத்தெடுத்து, நெறியாளர்களாகச் செயல்படல். கல்லூரி நாட்டுநலத் திட்டம் - NSS மூலம் இத்தகைய தொண்டுகளைச் செய்யலாம்.
*மருத்துவ கலந்தாய்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 3 ஆயிரத்து 112 மாணவர்களுக்கு, இடமளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
*தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 8 மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 1,349 இடங்கள் உள்ளன. இவற்றில் 1,185 இடங்கள் உள்நாட்டு மாணவர்களைக்கொண்டும்,164 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களைக்கொண்டும் நிரப்பப்பட வேண்டும். ஆனால், இதுவரை நடந்த 3 கலந்தாய்வுகளில், உள்நாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 376 இடங்கள், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் 26 இடங்கள் என மொத்தம் 402 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதமுள்ள 947 இடங்கள் காலியாக உள்ளன.
*தமிழக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கல்விக்கட்டணமாக ரூ.18 லட்சம் முதல் ரூ.22.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை கூடுதலாகச் செலவாகும் என்பதால், ஒரு மாணவர் ஆண்டுக்கு ரூ.27 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்.
# கட்டுரைக்கு உதவியவை
ஜூனியர் விகடன்,விகடன், இணையதள கட்டுரைகள்,பிரின்ஸ் கஜேந்திர பாபு அறிக்கைகள்
No comments:
Post a Comment