Saturday, 22 June 2019

கற்றதும் பெற்றதும் -65



கற்றதும் பெற்றதும்-65

*மணி

*உலகிலேயே மிக வேகமாக வளரக்கூடியது எது?

-மனிதனின் கவலைகள்

(மகாபாரதத்தில் யட்சனின் கேள்விக்கு தருமனின் பதில்)

#துக்ளள் கேள்வி-பதில்-1

-சோ

பொதுவாக கேள்வி பதில் என்பது தன் ஐயத்தை தெளிவிக்க ஆரம்பிக்கப்பட்டதாக இருக்கும்.பின் எதிரிலிருப்பவரை எடைபோட,தன் மேதாவித்தனத்தை காண்பிக்க, நீ ஒன்றுமில்லை என நிர்மூலம் செய்ய,கழட்டி விட கேள்விகள் வகை வகையாய் பிரிந்துவிட்டது.ஆனால் பொதுவெளியில் ஊடகத்தில் கேள்வி கேட்பது வேறு விதமானது.

வித்தியாசமான பதிலை எதிர்பார்த்து,அறியாத விடைகளை காண கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.பிரபலங்களின் பதிலும் அது முதிர்ந்த அறிவின் வெளிப்பாடாக இருந்தமையால் தொடர்ந்து வர ஆரம்பித்தது.

நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக நீண்டிருக்கிற துக்ளக் கேள்வி பதிலில் அவருடைய சாதுர்யம், சாமர்த்தியம், டைமிங் சென்ஸ் எல்லாம் தெரியும்.பெரும்பாலும் அரசியலின் அன்றைய நிகழ்வுகளே இருக்கும்.

*பகீரதன் என்பவர் எழுதிய `தேன்மொழியாள்` என்ற மேடை நாடகத்தில்தான் சோவிற்கு `சோ` என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த நாடகத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயரையே தன் புனைப்பெயராக பின்னர் மாற்றிக் கொண்டார். இனி அவரின் நான் ரசித்த பட்டாசு பதில்கள்

#உன் கண்ணில் நீர் வழிந்தால்?
நானேதான் துடைத்துக் கொள்ள வேண்டும்

*#மிருகங்களின் கேள்விக்கு நீங்கள் பதில் அளிப்பீர்களா?

சும்மா கேளுங்க சார்

# இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்?  இறந்தகாலம் சரித்திரம்,எதிர்காலம்-கற்பனை, நிகழ்காலம் தலையெழுத்து

#மனிதன் அடிக்கடி மறப்பது?

தான் மனிதன் என்பதை

#நாம் இறந்தால் யாருக்கு நஷ்டம்?

எல்.ஐ.சி க்கு

#இந்தியா நேற்று-இன்று-நாளை?

நேற்று-இந்தியா

இன்று-இந்திரா!

நாளை-இந்தி!

#மனிதன் தன் தவறை உணர்வது?

பிறர் அவனை உணர்ந்து கொள்ளும்போது

#மனிதன் அஞ்சுவது சாவுக்கா? வாழ்வுக்கா?

தன் சாவுக்கும்,மற்றவரின் வாழ்வுக்கும்

#திருமணம் நிச்சயிக்கப்படுவது?

முகூர்த்தம் வரை சொர்க்கத்தின் ஏற்பாடு.பிறகு ரிசப்னலிருந்து நரகத்தின் ஏற்பாடு

#கனவு-கற்பனை

கனவு -நம் நாடு முன்னேறிவிட்டதாய் நினைப்பது

கற்பனை-நம் நாடு முன்னேறும்

#அக்கரை ஏன் பச்சையாக இருக்கிறது?

இக்கரை கருப்பும் சிவப்புமாக இருப்பதால்

#வலது கை செய்வது இடது கைக்கு தெரியாதா?

வலதுகை குழி பறிப்பது,இடது கைக்கு தெரியாது

#உழைப்பாளிகளின் வியர்வை எதைக் காட்டுகிறது?

மற்றவர்களின் தாகத்தை

#மனிதன் பெயர்க்காரணம்?

எந்த இடத்தில் மனி(money) இருந்தாலும் 'தன்' னுடையது என நினைப்பதால் மனிதன்

#லஞ்சம் எத்தனை வகைப்படும்?

இருவகை கொடுக்கல்,வாங்கல்

#வாழ்க்கை ஏன் கடலுக்கு ஒப்பிடுகிறார்கள்?

கரிக்கிறதே.அதான்

#வாக்கிற்கு அழகு?

வாக்கிங் ஸ்டிக்

#அரசியல்வாதிகள் சுயநலவாதிகளா?

குடும்ப நலவாதிகள்

#ஓட்டுக்கு வாயிருந்தால் சொல்வது?

காசேதான் கடவுளடா

#மனிதன் எப்போது சிந்திக்கிறான்?

தேர்தலுக்குப் பிறகு

#பிறந்தநாள்,மணநாள்,இறந்தநாள்?

தாங்கள் செய்த தவறை நினைத்து பெற்றோர் வருந்துவது-பிறந்தநாள்

தானே தன் தவறை நினைத்து வருவது-மணநாள்

அவனுக்கு மக்கள் செய்த தவறை நினைத்து வருந்துவது-இறந்தநாள்

#குரங்கு-மனிதன் வேறுபாடு?

வால்,வாய்

#ஒரு மனிதன் எப்போது உயர்ந்து நிற்கிறான்?

மற்றவர்கள் தாழ்ந்து நிற்கும்போது

#பேசும் சக்தி இல்லாதிருந்தால்?

பதவிக்கு வந்திருக்க முடியாது

#பஸ் ஸ்டாப்புகள் எதற்கு

மனிதர்கள் நிற்பதற்கு

(பஸ் நிற்காததை சொல்றார்)

#வறுமையை படைத்தது?

சிலருடைய சிறுமையை எடுத்துக்காட்ட

#ஒரு வரியில் விடையளியப்பது சாமர்த்தியமான செயல்.ஒரு முறை நடிகை மனோரமா பகிர்ந்த செய்தி..சோ அவர்கள் இருந்தால் சூட்டிங் கலகலனு இருப்பாங்க. நாங்க நடிகைகள் உட்கார்ந்திருக்கும்போது ஒருமுறை எல்லாரையும் பார்த்து "உங்களுக்கு ஒன்னு தெரியுமா? னு கேட்டார்.எங்களுக்கு ஒன்றும் புரியல.உடனே அனைவரும் தெரியலனு சொன்னோம்.உடனே சோ காலண்டரில் ஒன்று எண்ணைக்காட்டி இதான் ஒன்னுனு.சொன்னாராம். சிம்பிளா தெரிந்தாலும் அது உண்மையில் பிரசன்ஸ் ஆப் மைண்ட்.என்றார்.

அரசியலில் அவரிடம் மாற்றுக் கருத்து இருந்தாலும் அவரின் துடுக்கு மொழிக்கு எல்லாரும் ரசிகர்களே

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment