Saturday, 22 June 2019

கற்றதும் பெற்றதும்-67



கற்றதும் பெற்றதும்-67

-மணி

#இதுவே சனநாயகம்

-தொ.பரமசிவன்

(காலச்சுவடு பதிப்பகம்)

எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் கட்டுரையில் நான் படித்த ஒரு செய்தி

கன்னட தலித் எழுத்தாளர் சித்தலிங்கையாவின் சுயசரிதையான ஊரும் சேரியில் ஒரு பகுதி

ஒருகாட்டுக்குள் இருக்கும் கடவுளைப்பார்க்க ஒருவன் தன்னை அழைத்துச்செல்கிறான். அங்கு சின்னக்கல் மட்டும் கடவுளாய் உள்ளது.கோயில் இல்லையா என்றதும்,கோயில் கட்ட தங்களுக்கும் ஆசைதான்.ஆனால் யார் மேலயாவது சாமி வந்து கோவில் கட்டக்கூடாதுனு தடுத்துடும்.ஏன்? னு கேட்டதற்கு உங்களுக்கெல்லாம் வீடு இருக்கிறாதா?,ணு சாமி கேட்குமாம். இல்லை என்றதும் உங்களுக்கு இல்லாதபோது எனக்கு எதற்கு என சொன்னதாம்.

மனிதாபிமானமே உந்துகோல். கீழ்வர்க்கத்தினரின் தெய்வங்கள் அவர்களல்லாமல் வேறில்லை. சமஸ்கிருத மந்திரம் ஓதப்படுகிறபோது சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களாகி விடுகின்றன.

#சமயமும் வழிபாடும்

பெண் தெய்வ வழிபாடு பற்றி ஆழமாய் விளக்குகிறார்.கடவுள் வழிபாட்டின் துவக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்ததாகவும் தற்போது சாமியாட மட்டும் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கிறார்.பெண் கோலோசுவதை விரும்பவில்லை ஆணாதிக்க சமூகம்.மதுரை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடப்பதை சகிக்காமல் ஆவணி மாதத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷெகம் செய்கின்றனர். தாய் தெய்வ வழிபாடு இன்றும் உள்ளது.

பெண்கள் அம்மை நோயினால் இறந்தால் மாரியம்மனாக திருநிலைப்படுத்தபடுகிறது. குலதெய்வ வழிபாடு பெரும்பாலும் பெண்ணாகவே இருக்கும். கீழ்வர்க்கத்தினர் தம் பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். அப்போது தான் நல்லதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இன்னும் உண்டு.

சைவ வைணவ சமயத்தை பற்றி சொல்லும்போது..சைவத்தில் காளமுக,பாசுபத,மாவிரதிகள் உண்டு.இவர்களில் மாவிரதிகள் சிவனைபோல நெற்றிக்கண் வரைந்து குழந்தைக்கு அச்சம் தரும் தோற்றமுள்ளவர்கள்.இன்றும் பூச்சாண்டி வருகிறான்,மூணு கண்ணன் வறான் இன்னும் புழக்கத்தில் உள்ளது.

#பண்பாட்டுக் கூறுகள் பெற்றோரை விட தாத்தா பாட்டியிடமிருந்து பெறப்படுவதை பேரக்குழந்தை கட்டுரை கூறுகிறது.இறந்து போன பாட்டனே பெயரனாகவும், பெயர்த்தியாகவும் பிறப்பதாக நம்பிக்கை.வாய்க்கரிசி போடும்போது முதல் உரிமை மகள் வழி பேத்திமார்க்கே உண்டென கூறுகிறார்.

#கைப்பெண் குறித்த கட்டுரையில் அக்கால கைம்பெண்களின் நிலை குறித்து கூறும்போது கைம்பெண்டாட்டி என்பதே கம்மனாட்டி என பேச்சுவழக்கு. சுதேசமித்திரன் ஜி.சுப்பிரமணிய ஐயர்தான் தன் 10வயது மகளுக்கு 1889ல் காங்கிரஸ் மாநாட்டில் மறுமணம் செய்து வைத்த தகவலும் இருக்கிறது.

#திருக்குறள் கட்டுரையில் இருபதாம் நூற்றாண்டில் ஒரு பெண்மணியும் உரை எழுதுயுள்ளார்.திருச்சி மருங்காபுரியை சார்ந்த இலட்சுமி   என்பவர் 1929ல் திருக்குறள் தீபாலங்காரம் எனும் பெயரில் அச்சுக்கூட பதிப்பாக ஒரு உரை எழுதியுள்ளார். ஜார்ஜ் உக்ளோ போப் எனும் ஜி.யு போப் திருக்குறளை முழுமையாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

#கற்றதும் பெற்றதும்

தொ.ப வின் கட்டுரையில் ஏதாவது ஒரு இடத்தில் நாம் அறியாத ஒரு தகவலை பதிவு செய்திருப்பார்.

அதுவே ஒவ்வொரு முறையும் அவர் புத்தகத்தை வாங்க வைக்கும் உந்து சக்தி.மரபு வழி பண்பாட்டையும் தற்போது அது சிதைக்கப்பட்டு உருமாறுவதையும் தக்க காரணங்களுடன் பதிவு செய்திருப்பார்.பெரிய உண்மைகளையும் எளிய நடையில் புரிய வைப்பார்.உதாரணத்திற்கு உரிச்சொல் குறித்து சொல்லும்போது சால நன்று என்பது தற்போது "செம" "தூள்" என தற்போது பயன்படுத்துவதை கூறியிருப்பார்.

'குடும்ப விளக்கு' அளவிற்கு நீண்ட நெடிய தமிழ்க்கவிதை எதுவும் கடவுள் வணக்கம் அல்லது வாழ்த்து இன்றித் தொடங்கியதே தமிழ் இலக்கிய வரலாற்றில் கிடையாது என்பதை படிக்கும் போது ஆச்சர்யமளிக்கிறது. ஏனெனில் கடவுள் வாழ்த்து இன்றி காவியம் துவங்கியதில்லை.

பாரதியின் பாஞ்சாலி சபதம் உட்பட. பாரதிதாசனுக்கு முன் தமிழ்க்கவிஞர்கள் எவரும் துணிவு கொள்ளவில்லை எனும்போது அவர் மீதான மதிப்பு இன்னும் கூடுகிறது.

ஒவ்வொரு முறை திறக்கும்போது புதிய சிந்தனை தூண்டுவதே புத்தகம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment