Saturday, 22 June 2019

கற்றதும் பெற்றதும் -66



கற்றதும் பெற்றதும்-66

*மணி

ஒரு மனிதன் வென்றாக வேண்டிய எதிரி அவனே

-காந்தி

இன்றைய காந்தி

-ஜெயமோகன்

#காந்தியின் பிள்ளைகள்

முழுக்க முழுக்க காந்தி குறித்த தகவல்களை குறித்த நூல்.மூன்று தலைப்பின் கீழ் 20 தலைப்புகள் உள்ளன.இதில் ஒரு தலைப்பு மட்டும் பகிர்கிறேன்.காந்தி பற்றி தெரியும்.அவ்வளவுதான். அவரின் மூத்தமகன் பற்றி ஓரளவு தெரியும்.இவ்வளவுதான் நாம் அறிந்த வரலாறு.ஆனால் அவர் பிள்ளைகள் வரலாறு படிக்கும்போது உண்மையில் பிரம்மித்தேன்.

அவர் மகன்களைப் பற்றி எந்த வரலாற்று புத்தகங்களிலும் இல்லை.காந்தி தன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை.

மூத்தமகனே சாட்சி என கூறினர்  ஒருகுடும்பத்தில் முதல் மகன் சரியில்லையெனில் நாமே கணித்துவிடுவோம்.மற்றவர்களும் இப்பிடித்தான் இருப்பார்கள் என. 

காந்திக்கு 4மகன்கள்

1.ஹரிலால் (1888-1948)

2.மணிலால்(1892-1956)

3.ராம்தாஸ்(1897-1969)

4.தேவதாஸ்(1900-1957)

#ஹரிலால்

இந்தியாவில் பிறந்தார்.தன் அண்ணனிடம் விட்டுவிட்டு காந்தி தென்னாப்பிரிக்கா சென்றார். ஹரி ராஜ்காட்டில் படித்தார்.தந்தையின் கண்காணிப்பு இல்லாததால் சுகபோகத்தில் ஈடுபட்டார்.தந்தைக்கு அறியாமல் குலாப்ஐ மணந்தார்.தேர்வில் தோல்வி.கெட்ட சகவாசம் அறிந்து காந்தி தெ.ஆ அழைத்துகொண்டார்.பீனிக்ஸ் ஆஸ்ரம வாழ்க்கை புண்படுத்தியது.கடைசிவரை சராசரிக்கு கீழான அறிவே இருந்தது.படிக்க, வாழ பணத்தேவையை கூறியவருக்கு காந்தி உதவவில்லை.

கெட்டப்பழக்கத்துக்கு அடிமையானார்.இந்தியா வந்தார். ஒரு நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்து சிறை சென்றார்.இதன் இடையில் மனைவி காலராவால் இறந்தார். 1942ல் முஸ்லீமாக மாறினார். இது காந்தியை புண்படுத்தியது. முஸ்லீம் லீக் கைவிட மீண்டும் இந்து ஆனார்.இதை காந்தி ஏற்கவில்லை.எல்லா மதமும் ஒன்றே எனவும் தீனை ஏற்றதால் அதிலேயே இரு என்றார்.

1948ல் காந்தி இறந்தபோது வந்திருந்த அவரை எவருக்கும் அடையாளம் தெரியவில்லை.காந்தி இறந்த 5மாதத்தில் அவரும் இறந்தார்.

#மணிலால்

மணிலால் காந்தியின் இரண்டாவது மகன்.இளமையிலேயே மிக்க அறிவுடன் இருந்தவர்.10வயதில் நடைபயணம் மேற்கொள்ளும்போது தன் மூக்கு கண்ணாடி மறந்துவிட்டதற்கு 5கி.மீ சென்றாலும்,மீண்டும் எடுத்து வரச் செய்தார் காந்தி.மணிலால் கஸ்தூரிபாய் ஆசைப்படி சுசீலாவை மணந்தார். பீனிக்ஸ் ஆசிரமத்தை தலைமையேற்று நடத்தினார்.தன் 15ம் வயதில் தெ.ஆ நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.25 முறைக்கு மேல் சிறை சென்றுள்ளார்.தெ.ஆப்ரிக்கவில் நேட்டால் இந்திய காங்கிரஸ் தலைவரில் ஒருவரானார். "இந்திய ஒப்பீனியன்' இதழ் ஆசிரியராக 33 ஆண்டு பணியாற்றினார்.

மணிலால்-சுசீலா தம்பதியருக்கு சீதா,அருண்,இளா எனும் 3 குழந்தைகள்

*அருண்-காந்தியின் ஆன்மிக கருத்தை நிராகரித்தார். சுனந்தாவை காதலித்து மணந்தார். 1957ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் சேர்ந்தார்.இவருக்கு ஒரே மகன் துஷார் காந்தி.இவர் நாம் காந்தியை கொல்வோம் எனும் சர்ச்சைக்குரிய நூல் எழுதினார்.

*சீதா-தந்தைபற்றிய நினைவு நூலை எழுதினார்.1999 ல் இறந்தார்.

*இளா-1994-2004 வரை தென்னாப்ரிக்க தேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

#ராம்தாஸ்

ராம்தாஸின் வளர்ப்பு பாதி காந்தியாலும் மீதி அண்ணன் மணிலாலாலும் நிறைவேற்றப்பட்டது.1917ல் தன் அண்ணன் மணிலாலுடன் இந்தியன் ஒப்பீனியன் இதழில் பணியாற்றினார்.1930முதல் காந்தி நடத்திய எல்லா போராட்டத்திலும் பங்கேற்றார். ஆனால் முழுநேர அரசியல்வாதி ஆகாமல் தந்தையின் விருப்பப்படி வணிகத்தில் ஈடுபட்டார்.பின் நாக்பூரில் டாடா எண்ணெய் ஆலையில் சாதாராண நிர்வாகியாய் இருந்தார்.

மனைவி நிர்மலா பென்னுடன் இணைந்து வார்தா ஆசிரமத்தை தன் உழைப்பின் மூலம் ஈட்டிய வருவாயில் நடத்தினார்.1969 ல் இற்ப்பதுவரை கிராமநிர்மாண் ஊழியராக பணியாற்றினார். காந்தியின் அடையாளத்தை அவர் எங்கும் பயன்படுத்தவில்லை. காந்தி கொல்லப்பட்டபோது கூட கோட்ஸேவை தண்டிக்ககூடாது என்றார்.

இவருக்கு சுமித்ரா,கனு,உஷா என மூன்று குழந்தைகள். கனு காந்தி அமெரிக்காவின் எம்.ஐ.டி ஹார்வார்டில் அறிவியல் கற்று அமெரிக்காவில் ஆய்வாளராக பணியாற்றினார்

#தேவதாஸ்

கடைசிமகன் தேவதாஸ் மணிலாலால் வளர்க்கப்பட்டார். காந்தியின் நெருக்கமான உதவியாளராக இருந்து பல போராட்டங்களில் சிறை சென்றிருக்கிறார்.பூனா ஒப்பந்தத்தில் காந்தியின் சார்பில் இவர்தான் கையெழுத்திட்டுள்ளார்.

ராஜாஜியின் நெருங்கிய நண்பர். பின் அவர் மகள் லட்சுமியை 1933ல் மணமுடித்தார்.

1924ல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் சேர்ந்து மரணமடையும் வரை பணியாற்றினார்.

இவருக்கு.4குழந்தைகள்.

*ராஜ்மோகன் காந்தி-புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்.'நல்ல படகுக்காரர்-காந்தியின் சித்திரம், ராஜாஜி,படேல் வரலாறு எழுதியுள்ளார்

*கோபால கிருஷ்ண காந்தி- வங்க ஆளுநராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.தெ.ஆ வேறுநாடுகளிலும் தூதராக இருந்தார்.

*ராமச்சந்திர காந்தி-ஹைதராபாத் பல்கலை தத்துவதுறையை நிறுவியவர் இவரே.புகழ்பெற்ற பல்கலை கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். இவர் மகள் லீலாகாந்தி புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்.சிகாகோ பல்கலை ஆசிரியராக உள்ளார்.

#காந்தியின் வாரிசுகளை படிக்கும்போது நிச்சயம் பெருமிதமாய் இருந்தது. பொதுவாக பெரிய தலைவர்களின் மகன்கள் தந்தையின் துறைகளையே தேர்ந்தெடுத்து அவரின் நிழல்களின் இருந்துவிடுவார்கள்.ஆனால் இவர்கள் முற்றிலும் வேறு துறையில் வேரூன்றி,அதுவும் பணம் கொழிக்கும் தொழில் துவங்காமல் பத்திரிக்கை மற்றும் கல்வியில் கோலோச்சியது ஆச்சர்யமாய் இருக்கிறது.எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தியாவில் துவங்காதது ஆச்சர்யம். காந்தியின் புகழை பரப்புவர்களாக இருக்கிறார்கள். வாழ்த்துகள்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment