நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்
நம்முடைய
செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்
நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்
நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை.
அதை ரசிக்கும்
பொழுதுகளில்
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!”
- ந. சிவநேசன்.
கரிய பெரிய மேகம் ஒன்று திங்களை விழுங்கி இறுமாந்து நிற்கிறது.அந்த ஏழைத்திங்கள் அந்நிலையிலும் தன்னாலான ஒளியை உலகிற்கு அளிக்கவே செய்கிறது
-மு.வ
No comments:
Post a Comment