Sunday, 6 September 2020

Maniyarayile Ashokan மலையாளம்*மணி




அரெஞ்ச் மேரேஜ் செய்தவர்கள் ஒரு கணம் ஆமால்ல அப்டினு நினைக்கும் படம்.ஆயிரம் ஜாதகத்தை ஜெராக்ஸ் எடுத்து,27 வயசில தேட ஆரம்பிச்சா 30 வயசுல ஒரு வழியா பொன்னு கிடைக்கும்.அதிலும் நம்மை ரிஜக்ட் செய்த பெண்களை ஒரு குயர் நோட்டு போட்டுத்தான் எழுதனும்.
சரி லவ் மேரேஜ் செய்யலாம்னா கூச்சம் வேற.சொல்ல மாட்டோம் பயம்.அறிஞர் அண்ணாவைக் கூட அத்தனை பேரு அண்ணானு கூப்பிட்டிருக்க மாட்டாங்க. அண்ணாந்து பார்த்தாலே அண்ணானு கூப்பிடும் பெண்கள் அதிகம்.அப்பிடியான ஒரு கதை மணியாறிலே அசோகன்.

ரொம்பவும் நல்லா இருக்காது. மினிமம் கேரன்டிதான் படம். சுமாரான பையனுக்கு பெண் கிடைக்கும் அவலத்தை சொல்லியிருக்காங்க.துல்கர் சல்மான் தயாரிப்பு என்பதால் ஒரு எதிர்பார்ப்பு.பட் கொஞ்சம் குறைவுதான்.ஆனால் இதை அனுபவித்தர்களுக்கு கொஞ்சம் நிறைவு.

#கதை

ஹீரோ ஜேக்கப் கிரிகோரி ஒரு அரசாங்க ஊழியர்.உயரமில்லை. குட்டையானவர்.அழகில்லை. எங்கு தேடியும் பொன்னு கிடைக்கல. ஜாதக தோஷம்.ஒரு இடம் செட்டாகுது ஆனால் அந்த பெண் இவனை கட்டிக்கிட்டா செத்துருவேன் மிரட்ட அதை இவர் கேட்க விரக்தியின் உச்சத்துக்கே போறார் பேரழகன் பிரேம்குமார் மாதிரி.அப்பதான் இவரையும் காதலிக்கிறாங்க அனுபமா.எல்லா சரியாப் போகும்போது ஜாதகத்தில முதல் மனைவி செத்துப் போயிடுவானு சொல்லுபோது கல்யாணம் நின்னிடுது.

இலவசம் இல்லாத வெள்ளை கலர் ரேசன் கார்டு வச்சிருக்கவங்க மாதிரி உடைஞ்சு போறாரு.இரக்க குணம் அதிகமுள்ள கிரிகோரி வாழைமரத்துக்கு தாலி கட்டி முதல்.மனைவியா எத்துக்கிறார். அதக்கு பிறகு என்னானது, கல்யாணம் ஆச்சா என்பது தான் கதை.


#டின்ஜூ

*படத்தின் பெரிய ப்ளஸ் லொக்கோசன்.ஈரமான, எப்பவும் மழை வரும்போலுள்ளது போல் அவ்வளவு அழகான இடங்கள். ரம்மியமான ஒளிப்பதிவில் ரசிக்க வைக்கிறார்.

*அசரீரி போல் ஒலிக்கும் மெல்லிய இசை மனதை வருடும்.

*சுத்தியுள்ள எல்லோருக்கும் கல்யாணம் ஆகும்போது நமக்கும் மட்டும் ஏன் இப்பிடினு 90 கிட்ஸின் அனுபவத்தை திரையில் விரிக்கிறார்

*கற்பனையில் உருகும் ஹீரோவுக்கு ஒரு சீனில் வரும் துல்கர்..நிலா வானத்தில் தான் இருக்கு.அதை தண்ணீரில் தேடக்கூடாதுனு சொல்லிபுரிய வைக்கிறார்.

*மேரேஜ் ஆகாதவங்களுக்கு சொல்லும் ஒரே அட்வைஸ் "உனுக்குனு ஒருத்தி பொறந்திருப்பா" னு சொல்வது.அதை கேட்டுட்டு அப்பிடியே ஓடிப்போயிடலாம்னு தோனும்.ஆனா அந்த பேங்க் பொன்னு சொன்னதும் அமைதியா போறாரு.

*கடைசி ட்விஸ்ட் நஸ்ரியாவை கல்யாணம் செய்வது.எப்பிடிணேனு தெரியல.

பூவரசன் படத்துல கவுண்டமணிக்கு செந்தில் சொல்லும் செங்கல் லாஜிக்

செங்கல்..அதை கொட்டுனா பொடி.. அதை ஊதுனா..ஒன்னுமேயில்ல.
அதான்னே வாழ்க்கை ம்பார்.
அதுதான் படம் பார்த்து முடிச்சதும் நினைவுக்கு வந்துச்சு.


அழகியலுக்காக ஒரு முறை பார்க்கலாம்.


-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment