Monday, 27 June 2022

ராயல் என்ஃபீல்ட்

ராயல் என்ஃபீல்ட்

இங்கிலாந்தில் என்ஃபீல்ட் என்ற ஊரில் உள்ள "தி ராயல் சுமால் ஆர்ம்சு" என்ற நிறுவனம் இங்கிலாந்து இராணுவத்துக்கு துப்பாக்கிகள் செய்து வந்தது. அது பின் 1896 ஆம் ஆண்டு "தி நியூ என்ஃபீல்ட் சைக்கிள் லிமிடட்" என்ற நிறுவனத்தை வாங்கி சைக்கிள்கள் தயாரித்து வந்தது. 

அதுவே பிறகு 1901 ஆம் ஆண்டு "என்ஃபீல்ட் சைக்கிள் கம்பனி" என்ற பெயரில் மினர்வா நிறுவனத்தின் இஞ்சினைக் கொண்டு மோட்டார் வாகனங்களை தயாரிக்க ஆரம்பித்து, இது தான் தற்போது உள்ள ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் தோற்றமாகும். பின்பு தனது சொந்த தயாரிப்பான 297 சிசி இஞ்சின்களை வைத்து மோட்டார் வாகனங்களை தயாரித்து, இங்கிலாந்து மற்றும் சோவியத் ரசியா ஆகிய நாட்டு ராணுவங்களுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றது. 

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து ராணுவத்தால் பெறுமளவு என்ஃபீல்ட் மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது, அதில் முக்கியமான ஒன்று எடை குறைந்த 125 சிசி Royal Enfield WD/RE, இதை இரண்டாம் உலகப் போரின் போது போர் விமானங்களில் இருந்து போர்க்களத்தில் பாராசூட் மூலம் தரையிறக்குவார்கள்.

1955 முதல் இதுநாள் வரை 
இந்திய ராணுவம் தனது எல்லை ரோந்துப் பணிக்காக பயன்படுத்த ஏற்ற இருசக்கர வாகனத்தை தேடி என்ஃபீல்ட் நிறுவனத்தின் புல்லட் வகை 350 சிசி வாகனத்தை தேர்ந்தெடுத்து மொத்தம் 800 வண்டிகளுக்கு ஒப்பந்தம் செய்தது. இதற்காக என்ஃபீல்ட் நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த "மெட்ராஸ் மோட்டார்ஸ்" நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்தில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து திருவொற்றியூரில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்து கொடுக்கப்பட்டது. 

பிறகு 1962 முதல் அனைத்து உதிரிபாகங்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. 1967ல் ரெட்டிட்சில் இருந்த கடைசி என்ஃபீல்டு தொழிற்சாலையும் மூடப்பட்ட பின்பு இந்தியாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு "ஐஷர் மோட்டார்ஸ்" என்ற இந்திய நிறுவனம் வாங்கிய பிறகு அது முழுவதுமாக இந்தியாவில் மட்டும் உற்பத்தி தொழிற்சாலை கொண்ட நிறுவனமாகிவிட்டது.

எனவே ராயல் என்ஃபீல்டு இங்கிலாந்தில் தோன்றி தற்போது இந்தியாவில் மட்டும் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம். அதனால் தான் அவர்கள் தங்களது நிறுவனத்தை "British roots, Indian soul" என்கிறார்கள்.

சிறப்பம்சங்கள்:

உலகில் அதிக ஆண்டுகள் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் இருக்கும் இருசக்கர வாகன நிறுவனம் இதுதான் 1901 முதல் தற்போது வரை. 

கே.ஜி.எப் ராக்கி பாய் சொல்வது போல Since 1901.
உலகில் அதிக ஆண்டுகளாக தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வரும் இருசக்கர வாகன மாடல் "புல்லட்" 1932 முதல் தற்போது வரை.

முன்பு ஆயுதங்கள் செய்ததன் நினைவாகவும், தனது வண்டிகள் துப்பாக்கிகள் போல உறுதியாக இருக்கும் என்பதை குறிப்பது போலவும் தனது டேக் லைனை "மேஃட் லைக் எ ஃகன்" என்று வைத்திருக்கிறார்கள்.

-படித்தது

No comments:

Post a Comment