ஒளிமயமான எதிர்காலம் , பட்டொளி வீசியது , ஒளிர்ந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள்.. ஒளி என்றால் என்ன என தெரிந்து கொள்ள ஆசை என்றது ஒரு ஆழமான குகை.. அது ஒரு போதும் ஒளியை பார்த்ததில்லை...
இருளின் ஆழம் , இருண்ட முகம் என்றெல்லாம் சொல்கிறார்களே..இருளை காண ஆசை என்றது அகல் விளக்கு,,,
கட்வுள் இருவர் ஆசையையும் நிறைவெற்ற நினைத்து இருவரையும் மற்றவர் இடத்துக்கு ஒரு முறை போய்ப்பார்க்க ஏற்பாடு செய்தார்..
குகை தன் பண்புகளோடு கூடிய ஓர் உருவம் எடுத்து அகல் விளக்கின் இடத்துக்கு சென்றது..
அடடா...ஒளியின் அழகு என்னே,,, ஒளி மட்டும் அன்று...அதன் கதிர்கள் தொடும் இடங்களும் ஒளிர்கின்றவே..... என வியந்து மகிழ்ந்தது..
விளக்கு குகைக்கு சென்றது..
வித்தியாசமாக எதுவும் தென்படவில்லையே... எப்போதும் நான் காணும் மெல்லொளிதானே இங்கும் இருக்கிறது ! என அலுத்துக்கொண்டது
-படித்தது
No comments:
Post a Comment