ஒரு திராட்சை தோட்டக்காரர் பழங்கள் எல்லாம் பழுத்ததால் யார் தன் தோட்டத்தில் அந்தி சாயும் வரை பணியாற்றுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பொற்காசு அளிக்கப்படும் என அறிவிக்கிறார்.
சிலர் காலையில் வருகிறார்கள், சிலர் மதியம் வருகிறார்கள், சிலர் கடைசி நேரத்தில் வருகிறார்கள். அவர்களுக்கும் பணி தரப்பட்டு ஒரு நாணயம் வழங்கப்படுகிறது. அவர்களில் ஒருவன் நான் காலையிலிருந்து பணிபுரிகிறேன் எனக்கும் ஒரு நாணயம் அந்தி சாய்வதற்கு முன் வந்த மற்றவர்களுக்கும் ஒரு நாணயம். இது எந்த வகையில் நியாயம்? என்கிறார்.
அதை கேட்ட தோட்டக்காரர் நான் உனக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை. உனக்கு ஏதாவது கொடுத்த வாக்கை மீறினேனா, அடுத்தவர்களை பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? என்றார்.
நாம் ஒருபோதும் அடுத்தவர்களோடு ஒப்பிடக்கூடாது. அது ஊக்கத்தை குறைக்கும் ஆயுதம் என்று அந்த உருவக அதை தெளிவுபடுத்துகிறது
இனிய காலை
No comments:
Post a Comment