தண்ணீரைத் தேடியலைந்த தாகம் கொண்ட மீனின் கதையை ரூமி ஒருமுறை சொன்னார். அதன் தணியாத தாகத்திலிருந்து நிவாரணம் தேடி அம் மீன் ஒவ்வொரு திசையிலும் அயராது நீந்தியது. அது நீரிலிருந்து வெளியே எட்டிக் குதித்து, மேற்பரப்பிற்கு மேலே தண்ணீரைத் தேடியது, ஆனால் பயனில்லை. இறுதியாக, மீன் மிகவும் களைத்துப் போய் பலவீனமாக உணர்ந்தது. அதனுடைய அந்த சோர்வில், அது ஒரு கணம் திகைத்து நின்றது. அமைதியான அந்தத் தருணத்தில், அதுவரையிலும் தான் தேடிக்கொண்டிருந்த அந்த நீரில் , இப்போது தான் நீந்திக் கொண்டிருந்ததை அது உணர்ந்தது.
"உண்மை, அர்த்தத்திற்கான தேடலில், மீனுக்குத் தண்ணீர் போல நாம் தேடிடும் பதில்கள் நமக்குள்ளாகவே இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். நாம் வேட்கையோடு மற்ற எல்லா இடங்களிலும் தேடுகிறோம், ஆனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் இருப்பின் சாரத்தை நினைவில் கொள்வதுதான். உள்நோக்கி உங்களுக்குள்ளாகவே பாருங்கள். , நீங்கள் தேடிடும் ஞானம், அன்பு, அர்த்தம் ஆகியவற்றைக் காண்பீர்கள்." என்று கூறி ரூமி அந்தக் கதையை முடிக்கிறார்.
No comments:
Post a Comment