Thursday, 27 March 2025

30நாள்வாசிப்புப்போட்டி#25RM055புத்தகம்-8பக்கங்கள் -180நாள்-4தலைமை தாங்க -டாக்டர் கேரன் ஒடாஸோதலைமை பண்பு சார்ந்த புத்தகம் இது. வெற்றிகரமான தலைவரை உருவாக்கும் அதிசய மந்திரம் எதுவும் இல்லை என்பதனை முன்னுரை யிலேயே ஆசிரியர் கூறுகிறார். நாளைய தினம் சிறப்பாக அமைவதற்கான யோசனையை சொல்லி.. தலைவராக்க முடியும் அல்லது தலைமை பண்பை பெறுவதற்கான நம்பிக்கையை இந்த புத்தகம் தரும் என்கிறார். இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் நாம் எங்கே இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வழிகாட்டுகின்றன. பல்வேறு வகையான அனுபவங்களை பெற உதவுகின்றன.தலைமை பண்புக்கான சிந்தனையை பொறுப்பான பதவியை அலங்கரிப்பதற்கு முக்கியமாக இருக்கும். அடிப்படை விதிகளாக வேலை செய்யும் பழக்கமும் தலைமை பண்பை கட்டமைப்பதற்காக செய்யும் நோக்கமும் வழிமுறையும் மற்றவர்களோடு உறவாக இருப்பது கவனத்தை மேம்படுத்துவது என்ற எல்லா அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.மேலாண்மையை பொறுத்தவரை சரியான தேர்வு சரியான தீர்வு என்பார்கள். நல்ல ஊழியர்களை தேர்வு செய்வதற்கான குறிப்புகளை தருகிறார் .அதே போல் தலைமை ஏற்கும்போது ஏற்படும் குறைகளான காலக்கெடு, நம்முடைய ஈடுபாட்டை நாமே சரி செய்வது, முடிவெடுப்பதில் தெளிவாய் இருப்பது ,செலவை கண்காணிப்பது குழுவை எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட வைப்பது என்பது பற்றி எல்லாம் விரிவாக ஒவ்வொரு ஃபார்முலாவாக விவரிக்கிறார்.பல்வேறு மேற்கோள்கள் இந்த புத்தகத்தின் தலைப்புக் கேட்ப சுவாரசியமாக்குகின்றன .அதில் ஒன்று வெற்றிகரமான அமைதியான தலைமை என்றால் அது ரூஸ்வெல்ட் சொல்வது போல.. அமைதியான பேச்சும் நீண்ட தடியும் வைத்திருப்பதாகும். நீண்ட தடி என்பது பலமும் உறுதியும் இணைந்தது. நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதும், அங்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக யோசித்து வைத்திருந்தால் அதை வெளியே சொல்லாமல் அமைதியாக அந்த காரியத்தை செயல்படுத்தி காட்ட வேண்டிய பிறகு சொல்லலாம் என்கிறார்‌.தலைவனுக்கான முக்கிய பண்பாக புதுமை செய்ய அல்லது புதுமையான செயல்களை செயல்படுத்த எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பிறரின் ஆலோசனைகளை ஆராய்ந்து அதனை செயல்படுத்த வேண்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட யோசனைகளை ஆராய்ந்து நல்லதொரு யோசனையை தேர்ந்தெடுப்பது. உங்கள் வயிற்றிலிருந்து நீங்கள் சரியாக மூச்சு விடுவீர்கள் ஆனால் உங்களுக்கு உத்தரவிடும் தொனி கிடைக்கும் என்கிறார். தலைவனுக்குரிய முக்கிய அம்சமாக உத்தரவிடும் பணி அல்லது கட்டளை செய்து அதனை செயல்படுத்துவது அதற்கான சாதுரியம் உங்களுடைய பேச்சில் தான் இருக்கிறது.மேடையில் நடிக்கப் போகும் நடிகர்கள் ஒப்பனை அறையில் காத்திருக்கும் போது ஒரு கலந்துரையாடல் கலந்து கொண்டு பேசுவார்கள். தங்களை தயார்படுத்திக் கொண்டு காத்திருக்கும் அறைக்கு கிரீன் ரூம் என்று பெயர். அவர்கள் அரங்கத்துக்குள் நடந்து வரும்போது நிகழும் மாற்றம் அபாரமானது. அவர்கள் தங்கள் பாத்திரங்களை இயக்கும்போதோ நிகழ்ச்சிகள் பேசும்போது சட்டென பெரும் ஒளியாக திகழத் தொடங்கி விடுவார்கள். அவர்களுடைய அதிசய உற்சாகம் பார்வையாளர்களை அப்படியே கட்டி போடும். அதுபோலத்தான் தலைவர்களும் தங்களுடைய ஊழியர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் அந்த உன்னத நிலை தான் தலைமைக்கான முக்கிய பண்பு.சக்தி வாய்ந்த அவர்களையே மக்கள் பார்க்கின்றனர் வியக்கின்றனர் இது வியாபாரிகளுக்கு நன்கு தெரியும் .அவர்கள் பொருட்களை விற்க பார்த்தவுடன் நம்பக்கூடிய சரியான பேச்சாளர்களையும் தேர்ந்தெடுத்து துடிப்பாக பேசி மக்களிடம் நன்கு கலந்து விடுவார்கள். ஒருவரின் நடவடிக்கை அழகு போன்ற நுணுக்கங்களை பார்வையாளர்கள் பார்க்க மாட்டார்கள். மாறாக மொத்தமாக எப்படி இருக்கிறார்கள் என்று மட்டும் பார்த்துக் கொள்வார்கள். அந்த பாத்திரம் நம்பும்படியாக இருக்குமானால் பார்வையாளர்கள் அவர் முன்னிலைப்படுத்தும் பொருளையும் நம்புவார்கள். நோக்கத்தை தீர்மானித்துக் கொண்டு வெற்றி பெறுவதில் முன்னோடியாக இருக்க வேண்டும். முக பாவங்களை நல்லதொரு நேர்மறை யுக்திகளை பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். கைகளை வைத்துக் கொள்வது கூட எப்படி என்று கூறுகிறார் .கைகளை முன்னால் சாதாரணமாக குவிந்த நிலையில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இருக்கைகளைப் பிடித்துக் கொள்வது போன்ற தேவையற்ற பதற்றங்கள் வெளியே தெரியாது அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிலை அங்கு ஏற்படும்.ஊழியர்களை திறமைகளின் அடிப்படையில் பிரிப்பதற்கு தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு குறைந்த திறமை அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயிற்சியும் ,குறைந்த ஈடுபாடு அதிக திறமை உள்ளவர்களுக்கு சில சலுகைகள் தர வேண்டும். அதிக திறமை அதிக ஈடுபாடு இவர்களிடம் இருந்தால் தைரியமாக பொறுப்புகளை பிரித்தளிக்கலாம் இவர்கள் வெற்றி பெறுவது உறுதி.தலைமை துவத்தில் இத்தனை நுணுக்கங்கள் இருக்கின்றனவா என்று யோசிக்கும்படி சில கட்டுரைகளும் மேற்கோள்களும் வாசிக்கும் போது நல்லதொரு விஷயத்தைத் தெரிந்து கொண்ட திருப்தியை தருகிறது தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment